10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த 10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்து, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி  19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால், தொற்று பரவல் … Read more

நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை  தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,  இன்று நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில்  சிறப்புக் கூட்டம் நடைடிபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை குறித்து, விமர்சித்த சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். இதையடுத்து, நீட் … Read more

தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது….

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 2021ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி … Read more

இன்று கோட்டையில் நீட் குறித்துச் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சென்னை இன்று நீட் விலக்கு மசோதா குறித்த சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவைச் சட்டப்பேரவையில் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.  142 நாட்களாக  குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்த நீட் விலக்கு மசோதாவை அதன் பிறகு தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார். இந்த நீட் விலக்கு … Read more

அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்” : போஸ்டர் வெளியிட்டார் துல்கர் சல்மான் !

வியாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரா.கார்த்திக் இயக்க அசோக்செல்வன் நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்”. ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக், “நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது” என்றார். இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்டரை … Read more

சென்னையைச் சேர்ந்த எனக்கு சிஎஸ்கே வில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு  : தினேஷ் கார்த்திக்

சென்னை தாம் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது . இந்த ஏலத்தில் மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரைப் … Read more

விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா

சென்னை: விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் இரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம்

சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி கொள்கையை பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் மூத்த … Read more

ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி – நடவடிக்கை எடுக்க ஆணை

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட காலத்தில் சிசிடிவிகளை அமைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கிளப்களில் சூதாட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவிகளைப் பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள … Read more

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கிய பின்னர் உச்ச நீதிமன்றம் வழக்குகளை ஆன்லைன் மூலமாகவே விசாரித்து வருகிறது. கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கடந்த சனிக்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி என்வி ரமணாவைக் கேட்டுக் கொண்டது. … Read more