குழந்தைகளை பணிக்கு அனுப்பினாலும் பணி அளித்தாலும் 2ஆண்டு சிறை

விருதுநகர் தமிழ்க அரசு குழந்தைகளை பணிக்கு அனு[ப்பும் பெற்றோருக்கும் பணி அளிப்போருக்கும் 2 ஆண்டு சிறைதண்டனை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது இன்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேல்டு விசன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். … Read more

மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 12ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், அடுத்ததாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். ஜூன் 12 ஆம் தேதி  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி ஆறு வழிகாக கல்லணை நோக்கி வந்துகொண்டிருக்கறிது. இது வரும் 15ந்தேதிக் குள்  மாயனூர் கதவணை, … Read more

தாய்லாந்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர், மேலும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “முதற்கட்ட விசாரணையில் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை” என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் … Read more

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில்,  வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு, திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் மொத்தம்  6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, திமுக தரப்பில்,  வில்சன், சிவலிங்கம், சல்மா, கமல்ஹாசன் மற்றும் அதிமுக தரப்பில்,   இன்பதுரை, தனபால் … Read more

போக்குவரத்து நெரிசலால் 10 நிமட தாமதம் : விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்

அகமதாபாத் நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார் நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் … Read more

அதிமுகவை அதிர வைத்த தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மோடிக்கு அணாணாமலை கடிதம்

சென்னை பிரதமர் மோடிக்கு தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், :தமிழகத்தில் பாஜ- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜ ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும்.  ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜ 2ம் இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு … Read more

பாஜகவின் திமுக கூட்டணி கட்சிகளை இழுக்கும் எண்ணம் நிறைவேறாது : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எண்ணுவது நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் தமிழக அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் அமைச்சர் கே என் நேரு, தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். … Read more

விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்த திட்டத்தின் சோதனை நடைபெறுகிறது. அதில் ஏற்படும் … Read more

அகமதாபாத் விமான விபத்து: அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு புறக்கணிப்பு?.. விமானம் விபத்து வீடியோ…

அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக,  விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு  விடுக்கப்பட்ட நிலையில்,  அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விமானம் மேலே எழும்பும்போது,  வீடுகளின்மீது மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. , இன்று பிற்பகல் 1.17 மணியளவில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் அகமதாபாத் சர்வதேச … Read more

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு, 41 பேர் காயம் – விபத்து நடந்த இடத்தில் அமித்ஷா ஆய்வு… வீடியோ

அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை  இரவு 7மணி நிலவரப்படி, 204  ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 41 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  பார்வையிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில்  குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் யாரும் … Read more