ஜனவரி இறுதியில் தமிழகம் வருகை தருகிறார்கள் ராகுல்காந்தி, பிரியங்கா..!

சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்களான, ராகுல்காந்தி, பிரியங்கா காந்திர தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.28 அல்லது 29-ம் … Read more

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்…!

சென்னை:  அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினர் இணைந்தனர். இது அதிமுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அதுபோல, சிவகாசி  தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரனும் முதல்வர் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 … Read more

equal pay for equal work கேட்டு போராடும் ஆசிரியர்களுக்கு “No work No pay” என மிரட்டல்!

சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கேட்டு  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு,  சம்பளம் கட், விடுமுறை கிடையாது என  தொடக்கக் கல்வித்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்​தில்  முதல்வராக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது, கடந்த  2009ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசுப் பள்​ளி​களில் நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. … Read more

நாளை கடலூரில் தே.மு.தி.க. மாநாடு! கூட்டணி அறிவிப்பை வெளியிடுவாரா பிரேமலதா…?

சென்னை: நாளை (ஜனவரி 9ந்தேதி)  கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தேமுதிக  எந்த அணியுடன்  கூட்டணி அறிவிப்பை  பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு ஜனவரி 9ம் தேதி கடலூர் பாசார் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக  சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.   மாநாட்டில்,  பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, … Read more

2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பணத்துடன்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை   இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… தமிழ்நாடு அரசு இந்த  ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி,  ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று  (டிசம்பர் 8ந்தேதி)  தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெறுகிறது.   இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 … Read more

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி! பபாசி அறிவிப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும், நடப்பாண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி  என பபாசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்,   வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நடத்தப்படும் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி, … Read more

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’  மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி,   பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என்றும்,   ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு   கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் ரோடு ஷோ-க்கு நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு … Read more

போலி Booking.com மெயில்கள் மூலம் ஹோட்டல் ஊழியர்களை குறிவைக்கும் புதிய சைபர் தாக்குதல்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஹோட்டல் நிறுவனங்களை குறிவைத்து, புதிய வகை சைபர் தாக்குதல் ஒன்று நடப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு PHALT#BLYX என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம், DCRat எனப்படும் ஆபத்தான Remote Access Trojan (RAT) வைரஸை கம்ப்யூட்டர்களில் நிறுவுவதாகும். இந்த நடவடிக்கை கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. தாக்குதலின் முதல் கட்டமாக, Booking.com நிறுவனத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி மெயில்கள் ஹோட்டல் ஊழியர்களுக்கு … Read more

திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள் – ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் – பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே … Read more

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்யுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்து வெளியிட்ப்பட்டுள்ள  புத்தகத்தை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட  சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், நாளை தொடங்கி வைக்க இருக்கும்,   தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சியில்,  கீழைக்காற்றை பதிப்பகம்  வெளியிட்டுள்ள புத்தகமான,   “திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமி நாதன்: நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற … Read more