சிலிண்டர் தட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் முருகானந்தம் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலண்டர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்தியஅரசு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை கட்டுப்படுத்தி விட்டு,  வீட்டு உபயோக சிலிண்டருக்கு … Read more

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள்: சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கும்பலால் மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்  பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல, அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் தினசரி பல பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் தகவல்களும் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மாணவிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட … Read more

2026 ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியீடு! பிசிசிஐ

மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  2026 ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  முதல் போட்டியில் பெங்களூரு – சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இரு கட்டங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலயில். .ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க கால அட்டவணை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. .உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் … Read more

ஈர சாக்கு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் கடுமையாக அடித்தனர்! காவல்துறையினர் மீது சிவகங்கை இளைஞர் மரண வாக்குமூலம்…

சிவகங்கை:  விசாரணைக்குஅழைத்து செல்லப்பட்ட இளைஞர், மரணமான வழக்கில்,  அவரது இறுதி வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அவரது காலில் ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில்  கடமையாக தாக்கினர் என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த வழக்கில் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கையில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், தன்னையும் தனது நண்பர் குணாவையும் சீருடை இல்லாத 10 காவல்துறையினர் … Read more

அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைத்திருங்கள்! அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்,  வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.   மேலும், கச்சா எண்ணை போக்குவரத்துக்கு உதவிகரமாக இருந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக,  இந்தியாவிலும் … Read more

தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும்  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் , தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி , மேற்குவங்கம், அசாம் , கேரளா   ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் இந்த வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  அதனால், இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தீவிர வாக்காளர் … Read more

பராமரிப்பு பணி: திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்..

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பெங்களூரு – திருப்பதி இன்டர்சிட்டி ரெயில் சேவையில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் … Read more

பிரதமர் மோடி வருகை எதிரொலி: திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்

திருச்சி: பிரதமர் மோடியின்  திரசசி வருகையை ஒட்டி திருச்சியில் பேருந்துகள், இலகுரக மற்றும் கனரக வாகனகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி  இன்று (மார்ச் 11) தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெறும் அரசு மற்றும் கட்சிகளில் பங்கேற்கவுள்ளார். இந்த பயணத்தின் அங்கமாக திருச்சி அருகே பஞ்சப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5,650 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் … Read more

மேற்கு வங்கம் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று எதமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்துக்கு குடியரசு தலைவர் மாற்றினார்.  கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் ஆளுநராக  இருந்து வந்த  ஆர்.என். ரவிக்கும்,  திமுக தலைமையிலான ஸ்டாலின்  அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.  இதையடுத்து அவர் … Read more

“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்”! நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : “சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்”! என நூலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை வெளியிட்டு, 2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2026) … Read more