நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்யுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்து வெளியிட்ப்பட்டுள்ள  புத்தகத்தை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட  சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், நாளை தொடங்கி வைக்க இருக்கும்,   தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சியில்,  கீழைக்காற்றை பதிப்பகம்  வெளியிட்டுள்ள புத்தகமான,   “திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமி நாதன்: நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற … Read more

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த … Read more

ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிறப் பால் பாக்கெட்டின் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு தகவல் … Read more

அணைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள  90 அணைகளை கண்காணிக்கும் வகையில்,  ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீர்வளத்துறையின் சார்பில் 32.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களுக்கான நீரியல் தரவு கண்காணிப்பு … Read more

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு…

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து,   மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே நீதிமன்றத்தில் ஆஜராக  உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தின்  விற்பனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி,   பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து … Read more

ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு இந்த  ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி,  ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 8ந்தேதி)  தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெற உள்ளது. நடப்பாண்டு ரேசன் அடைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் 3 மாதத்தில் தேர்தல் நடைபெற … Read more

காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா? பிரவீன் சக்ரவர்த்தி மீண்டும் சர்ச்சை…

சென்னை: காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா?   காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், டேட்டா பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ள  பிரவீன் சக்ரவர்த்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பிரவீன் சக்ரவர்த்தி ஏற்கனவே தவெக தலைவரை சந்தித்து பேசியது சர்ச்சையான நிலையில், தொடர்ந்து, திமுக அரசை விமர்சிக்கும் வகையில்,  “தமிழகத்தின் கடன் குறித்த அவரது சர்ச்சை பதிவு கூட்டணிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட  பலரும் கடும் … Read more

2027ல் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை:  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, அதாவது எ2027 ஜனவரியில்  அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்தை தொடர்ந்து, திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2027 ஜனவரியில் அமலுக்கு வர உள்ளது. இந்த   திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு … Read more

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு…

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.  மேலும்,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.  அத்துடன் இந்த விஷயத்தில், மாநில அரசு இந்த அளவிற்கு கீழ் நிலைக்கு செல்லக்கூடாது என்றும் கண்டித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் … Read more

மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து! உயர்நீதிமன்றம்..

சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து  செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்றும் சாடியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் … Read more