ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோஷமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்.! <!– ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோ… –>

ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோஷமாக மோதியதில் படகில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். வடக்கு ஐரோப்பாவில் யெலேனியா என்ற புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜெர்மனியில் சொகுசுப் படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது மணிக்கு 94 மைல் வேகத்தில் காற்று வீசியது. இதில் படகின் மேல்தளத்தில் அடுத்தடுத்து வந்த அலைகள் அதிவேகத்தில் மோதின, இதில் படகில் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கி கடல் நீர் உள்ளே … Read more

இந்தியாவில் புதிதாக 25,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 25,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்து 25 ஆயிரத்து 920 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 492 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  2 புள்ளி 07 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும்  2 லட்சத்து 92 ஆயிரத்து 92 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் கையகப்படுத்தும் திட்டம் ரத்து.! <!– லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் கையகப்படுத்தும… –>

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சுற்றுலாக் கழகத்திற்கு தொழிலதிபர் பழனி பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் 18 கோடி ரூபாயை செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதுடன், திவால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனத்தை வாங்க எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமம் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை … Read more

அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… 5.18 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பல் <!– அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… 5.18 லட்சம் ஹ… –>

வடக்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகின. கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அதிவேகமாகப் பரவத் துவங்கியது. இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து போயின. இது அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பின் 6 சதவீதம் ஆகும். வறண்ட கால நிலையின் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் போராடி … Read more

குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தகவல்.! <!– குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்ற… –>

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஹராமி நல்லா பகுதியில் உள்ள சிற்றோடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் அழுகிய மீன்களுடன் 7 பாகிஸ்தான் படகுகளை கண்டுபிடித்த வீரர்கள் அதை பறிமுதல் செய்தனர். இந்திய எல்லைக்குள் நுழைகிற பாகிஸ்தான் மீனவர்கள் BSF ரோந்துப் படையினர் படகுகளைக் கண்டதும், தங்கள் படகுகளைக் கைவிட்டு தப்பிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

திருப்பூரில், கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘க்யூ ஆர்’ ஸ்டிக்கர் மீது வேறு ஸ்டிக்கர் ஒட்டி பணத்தை திருடும் மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்.! <!– திருப்பூரில், கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘… –>

திருப்பூரில், கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘க்யூ ஆர்’ ஸ்டிக்கர் மீது வேறு ஸ்டிக்கர் ஒட்டி பணத்தை திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்த துரைசாமி என்பவரது ஓட்டலில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ ஆர் கோடில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் செலுத்திய போது வேறு ஒருவரின் பெயரை காண்பித்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவியை பார்த்த போது நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒருவர், ‘ஸ்டிக்கர்’ மீது, ’க்யூ ஆரை மட்டும் வெட்டி … Read more

பிரேசில் நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113 ஆக உயர்வு <!– பிரேசில் நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை … –>

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மொரோ டா ஆஃபிசினாவில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன. காணாமல் போன 116 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். Source link

கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 28 பேர் மீட்பு <!– கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 28 … –>

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்திருந்த சிறுவர்கள் 14 பேர் உட்பட 28 பேரை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர். செல்லப்பம்பாளையம் பகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் வந்திருந்த தொழிலாளர் குழுவிடம், பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கர்நாடகாவைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவர் உதவியுடன், 28 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக வந்ததாகவும் இதில் 14 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, நேரில் சென்று வருவாய்துறையினர் … Read more

ஹசன் ஜகாங்கீரின் ஹவா.. ஹவா தான் அரபிக் குத்தானதாம்.. சுட்டாலும் பாட்டு ஹிட்டாச்சி..! <!– ஹசன் ஜகாங்கீரின் ஹவா.. ஹவா தான் அரபிக் குத்தானதாம்.. சுட்… –>

பாகிஸ்தானி பாப் சிங்கர் ஹசான் ஜகாங்கீரின்  ஹவா ஹவா என்ற இந்திப் பாடலின் மெட்டையும் பீட்டையும் சுட்டு அரபிக் குத்து பாடலை ஹிட்டாக்கியதாக விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் , தனது குழுவினர் உடன் அரபிக்குத்து பாடலுக்கு விஜய் போல நடனம் ஆட முயன்றதாக வீடியோ ஒன்றை முக நூலில் பகிர்ந்துள்ளார்.  மெட்டையும், பீட்டையும் எங்கிருந்து எடுக்கிறோம் என்று சொல்லாமலே பாடல்களை ஹிட்டாக்குவதில் வல்லவர் அனிருத். அந்தவகையில் சமீபத்தில் அவர் இசையில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து … Read more

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரும் திட்டமில்லை ; மத்திய அரசு <!– உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரும் திட்டமில… –>

ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில், உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் மற்றும் குடிமக்களை உடனடியாக இந்தியா அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, உக்ரைனுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றார். ஏர் பபுள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது … Read more