கொரோனாவுக்கு பலியான திருச்சி இளைஞர்! நடந்தது என்ன? – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

கோவிட் தொற்றுடன் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத்தான் தெரிகிறது என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் தேதி கோவிட் தொற்றால் இணைநோய்களுடன் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கோவிட் தொற்றிற்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? … Read more

ஆஸ்கரில் இந்தியா! RRR-க்கு முன்பும் பின்பும்.. இதுதான் இந்த விருதுகளை ஸ்பெஷலாக மாற்றியது!

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸில் நடைபெற்றிருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக நேரடி இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்று இந்திய திரைத்துறைக்கு மிகப்பெரிய பெருமையை கொடுத்திருக்கிறது. ஆஸ்காரை அலங்கரிந்த ஏ.ஆர்.ரஹ்மான்! 1929ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆஸ்கர் விருது விழா தற்போது 95வது ஆண்டை எட்டியிருக்கிறது. இத்தனை ஆண்டு காலத்தில் முதல் முறையாக ஒரு நேரடி இந்திய படத்துக்கான அங்கீகாரம் RRR படத்துக்கு கிடைத்தது எந்த அளவுக்கு பெருமையோ … Read more

ஆஸ்கர் விருதினை தட்டித் தூக்கியது ’நாட்டு நாட்டு’ பாடல் – மகிழ்ச்சி வெள்ளத்தில் படக்குழு!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. ஆஸ்கர் மேடையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர். … Read more

RRR-ஐ பாலிவுட் படம்னு அழைப்பதா? ஆஸ்கர் தொகுப்பாளர் பேச்சால் கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!

உலக சினிமாத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கரை வென்ற முதல் நேரடி இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது RRR. ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணியும் சந்திரபோஸும் இணைந்து சிறந்த பாடலுக்கான விருதை பெற்றிருக்கிறார்கள். இந்திய திரையிசை உலகில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கரை கையில் ஏந்திய இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் கீரவாணி என்கிற மரகதமணி. இந்த விருதை அலங்கரித்ததற்காக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே தற்போது … Read more

''அகதிகள் படகில் தொடங்கி ஆஸ்கரை தொட்ட பயணம்” – மேடையில் நடிகர் கீ ஹூங் குவான் நெகிழ்ச்சி!

சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கீ ஹூ குவான், “அம்மா, நான் ஆஸ்காரை வென்றுவிட்டேன்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகளவில் திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக நடிகர் கீ ஹுங் குவான் தட்டிச்சென்றார். இவ்விருதை … Read more

”என் பிள்ளை இறந்தப்போ கூட நான் குட்டியை விட்டுட்டு போகல“ – ஆஸ்கர் ஆவணப்பட பெள்ளி பேட்டி

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவணப்படத்தில் நடித்த பெல்லி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒருசில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் … Read more

ஆஸ்கர் விருதை வென்றது முதுமலை தம்பதி குறித்த ’THE ELEPHANT WHISPERERS’ ஆவண குறும்படம்

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒருசில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி. இவர்கள் இந்த … Read more

”பத்திரப்பதிவு முறைகேடுகள் மீது 3 மாதத்துக்குள் நடவடிக்கை” – அமைச்சர் பி மூர்த்தி பேட்டி

கடந்த ஆண்டை விட வணிவரித்துறையில் 24 ஆயிரம் கோடி ரூபாயும், பதிவுத்துறையில் 3500 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “மகிழட்டும் மாற்றுத்திறனாளி வழங்குவோர் திராவிட போராளி” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூர் அருகே பாடி இளங்கோ நகர் பகுதியில் நடைபெற்றது. ஆதிதிராவிட நலக்குழு … Read more

”அழகான குடும்பம் கிடைத்தும்..” – ஒரே வாரத்தில் ஆன்லைன் ரம்மியால் பறிபோன இரண்டாவது உயிர்!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், மனம் உடைந்த சென்னை கேகே நகரை சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் சேர்ந்த சுரேஷ் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீதுள்ள மோகத்தால், அதிகளவு பணத்தை கட்டி விளையாடி வந்துள்ளார். பணத்தை இழக்க இழக்க, அதை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என தொடர்ந்து பணத்தை போட்டு விளையாடிய சுரேஷ், சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக … Read more

”ஆய்வு செய்தோம்; தமிழ்நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை” – இந்தியில் பேசிய பீகார் அதிகாரிகள்

தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் திருப்திகரமாக உள்ளது, தமிழக அரசுக்கு நன்றி என பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வதந்திகள் பரப்பப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய, பீகார் மாநில அரசு, குழு ஒன்றை தமிழகம் அனுப்பியது. நேற்று சென்னை … Read more