ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ரஸ்யாவில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஸ்யாவில் வீசா மற்றும் மாஸ்டர் கார்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்ததை தொடர்ந்து பல நாடுகள் தடைகளை விதித்துள்ளன. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வருவதாகவும், நேற்று முதல் வீசா மற்றும் மாஸ்டர் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக ரஸ்யாவின் நாணய அலகான … Read more

இலங்கையில் 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு டொலர் (Video)

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது. அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், … Read more

நாட்டு மக்கள் அதிகமாக கேட்கும் பாடல்! தேடிச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் – சபையில் அம்பலம்

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பி கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இந்த நாட்களில் மக்கள் வேலை செய்யும் எம் வீரன் என்ற பாடலையே மக்கள் அதிகம் கேட்கின்றனர். நான் நினைக்கவில்லை, யொஹானியின் மெனிகே மகே ஹித்தே பாடலை விடவும் இந்தப் பாடல் பிரபல்யமடைந்துள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதே … Read more

கோட்டபாய ஜனாதிபதியாவதற்கு உதவிய இந்திய வம்சாவளி சட்டத்தரணி! ரகசியத்தை பகிரங்கப்படுத்திய விமல்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்ச தயரான போது அந்த கனவை தான் உட்பட தனது கட்சியும் தகர்த்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்து கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ‘கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பசில் ராஜபக்ச தயார் நிலையில் இருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்ததாகவும் விமல் … Read more

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்! – வரலாற்றில் மிகப் பெரிய உயர்வு பதிவானது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (10) வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 692.35 புள்ளிகள் அதிகரித்து 10,856.07 புள்ளிகளாக இருந்தது. இது 6.81 சதவீதம் அதிக உயர்வாகும். அதேபோன்று, S&P SL20 இன்டெக்ஸ் இன்று 29.5.89 புள்ளிகள் அதிகரித்து 8.52 சதவீதமாக இருந்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வாகும். எவ்வாறாயினும், 2022ம் ஆண்டு இன்று … Read more

நாடாளுமன்றில் விரையாமாகும் மின்சாரம்!

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் இன்று செயற்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து கவலைகள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் இன்று சகல மின்விளக்குகள் மற்றும் குளிரூட்டிகள் செயற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் தியாகம் செய்ய வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எரிசக்தி நெருக்கடியை அடுத்து நாட்டிற்கு உதவுவதற்காக இந்த வளாகத்திற்குள் கூடுதல் … Read more

ஒட்டு மொத்த ரஷ்யாவையும் மிரளவைத்த கோரச்சம்பவம்! விடைதெரியாத மர்மம்

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link

இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. … Read more

நாளையும் மின்வெட்டு

நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் … Read more

இலங்கையில் புதிய நடைமுறை! இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என பெண்களுக்கு அறிவிப்பு

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இலவச சேவை வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை … Read more