இலங்கையில் அதிர்ஷ்டமும் இல்லை! கவலையில் மக்கள்

இலங்கையில் தற்போது அதிர்ஷ்டமும் இல்லை என அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும் நபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்களை அச்சடிக்கும் காகிதத் தாள் தட்டுப்பாட்டினாலேயே அதிர்ஷ்ட லாப சீட்டுக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லொத்தர் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக 12 வகையான நாளாந்த அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்கள் விற்பனைக்காக கிடைப்பதாகவும் ஆனால், தற்போது 5 வகையான டிக்கெட்டுக்களே கிடைக்கின்றன. அவையும் கேள்விக்கு குறைந்த அளவிலேயே கிடைப்பதாகவும் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். … Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரம் வரையில் நீடிக்கும்

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சமையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ரெஸ்டுரன்ட்கள் மூடப்பட்டுள்ளன. சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, சுமார் 2600 மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு இன்றையதினம் சந்தைக்கு விடப்பட்டதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் … Read more

உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கிய ரஷ்ய ராணுவம்! பீதியில் மக்கள்

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் போர் நிலை உக்கிரமடைகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய படைகள்  உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ தொலைவு வரை ரஷ்ய படைகள் முன்னேறி இருக்கின்றன. எப்போது குண்டு விழும்? … Read more

இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி

பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இலங்கையில் தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான தொகையே இருப்பதாக மக்களுக்கான அறிவுசார் மன்றம் தெரிவித்துள்ளது.   வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.   கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் எஞ்சிய கையிருப்பு யுவானில் இருப்பதாகவும், யுவான் நாணயத்தில் ஜேர்மனி மற்றும் இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய … Read more

இலங்கைக்கு கிடைக்கவுள்ள கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்

 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.. 600 இற்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலில் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி யோசனை முன்வைத்திருந்தது. எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மாத்திரமே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இறக்குமதி கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்வைத்த பொருட்களின் பட்டியலிற்கமைய, ஒவ்வொரு மாதமும் … Read more

யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! வெளியான முக்கிய தகவல்

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக்க நேரிடும் சாத்தியங்கள் காணப்படுவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாட்டை உருவாக்கி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் எண்ணெய் விலையை அதிகரிக்க பல்தேசிய நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புத்திக்க டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு புத்தாண்டு காலத்தில் பாரிய … Read more

திறைசேரியில் 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை! – நாடு திவாலாகும் அபாயம்

திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறுகிய கால நெருக்கடியாக மத்திய வங்கி விளக்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கி ஆளுநருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை … Read more

வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு பெப்ரவரி மாதத்தில் 2.31 பில்லியன் டொலர்களாக பராமரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு 2,025 மில்லியன் டொலர்களாகவும் தங்கம் கையிருப்பு 98 மில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 2021 இல், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நிலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு 1.6 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த வியாழன் (3) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வாராந்திர பொருளாதார குறிகாட்டியின் … Read more

அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால் ஏற்பட்ட வினை! – சந்திரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு சீரழிந்துள்ளது விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்று விட்து. இந்நிலையில், சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசாங்கம் புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு … Read more