நிறுத்தப்படும் அரச கொடுப்பனவுகள்! நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகளதும் உத்தியோகபூர்வ  வெளிநாட்டுப்  பயணங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மாநகர சபை முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை  தலைவர்கள் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கொடுப்பனவுகைள நிறுத்தவே நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இத்தீர்மானம் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி  முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைக்கப்படும் கொடுப்பனவுகள் ஆய்வுகள், … Read more

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து வெளியான தகவல்!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தின் முதல் இருவாரங்களுக்குள் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இம்மாதம் (மார்ச்) முதல் 13 நாட்களில் 53,838 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர்களில் 12,762 பேர் ரஷ்யப் பிரஜைகள் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதற்கு மேலதிகமாக 7,348 இந்தியர்கள், … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் இலங்கை மத்திய வங்கி..! வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் இலங்கை மத்திய வங்கி அதன் பிடிக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மசோதாவை தாக்கல் செய்வதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும். ஆனால் இன்று நாம் கடன் வாங்குவோம். நாளை அந்தப் … Read more

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்திற்குப் பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை நேரப்படி 08.00 மணிக்கு கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, … Read more

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய எண்ணும் இலங்கையர்கள் ஒருபோதும் நுழைய முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் எச்சரித்துள்ளார். எனவே ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை அரசும், அவுஸ்திரேலிய அரசும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய உயர் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் இவ்வாறு சென்ற பலர் இலங்கை கடற்படையினராலும், அவுஸ்திரேலிய படையினராலும் … Read more

வருடாந்தம் ஆயிரக்கணக்கில் காச நோயாளிகள்: மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால் மரணம் கூட நேரிடும் என்றும் சுவாச நோய் தொடர்பான நிபுணர் டாக்டர் போதிக சமரசேகர கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற காசநோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த மருத்துவர் சமரசேகர, நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் காசநோய் காற்றினால் பரவும் நோய் என்பதால் … Read more

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

இலங்கையில் தங்கப் பவுணொன்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமையளவில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140000 என்ற பெறுமதிக்கு குறைந்திருந்தது. மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் … Read more

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே விசாரிக்கப்படவுள்ளது.  அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரச திணைக்களங்கள் பலவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு உச்ச நீதிமன்றம் … Read more

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம்(16.03.2023) வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த ஒருநாள் வேலைநிறுத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் கூறுகையில்,அரசாங்கத்தின் வரிக் கொள்கையை எதிர்த்து ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆசிரியர் தொழிற்சங்கமும் நேற்று(15.03.2023) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. இதனால் பாடசாலைக் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று … Read more