இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு! சந்தையில் குவிந்த பெருமளவான டொலர்கள்(Video)

இலங்கையில் நெகிழ்ச்சியுடைய நாணய மாற்று விகிதமே உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.  எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  நெகிழ்ச்சியுடைய நாணய மாற்று விகிதம் என்று சொன்னால் டொலர் வருகின்ற அளவு, டொலர் வெளியே செல்கின்ற அளவு. ஏற்றுமதி செய்யும் போது எங்களுக்கு டொலர் உள்ளே வருகின்றது. இறக்குமதி செய்கின்ற போது டொலர் வெளியே செல்கின்றது.  எனவே, இறக்குமதி … Read more

மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் கமத்தொழில் மேம்பாட்டுக்கு மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. விவசாயத்துறையில் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான கமத்தொழில் நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்துக்கு உலக வங்கியின் நிதியுதவி தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. மகிந்த அமரவீர வேண்டுகோள் கமத்தொழில் நவீனமயப்படுத்தல் செயற்திட்டம் தற்போதைக்கு குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும், அதற்கான நிதியுதவிகளை தொடர்ந்தும் … Read more

இலங்கை வரும் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றும் கும்பல்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளதுடன், இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரகு பணம் வாங்கும் இந்த தரகர்கள், விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தின் முன்பு காத்திருந்து, முகவர்கள் இல்லாமல் நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளை வாகனங்களில் … Read more

கடந்த ஆண்டு 1.1 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

கடந்த 2022ம் ஆண்டில் 1.1 மில்லின் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 27.6 வீதமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் கடந்த ஆண்டில் மொத்தமாக 1,127,758 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு 911757 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக 311,269 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு வெளிநாட்டு … Read more

கையடக்க தொலைபேசி SIM பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம்

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பட்டியல் நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் மாதத்திற்கு ஒருமுறை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். ஒருவர் இறந்தவுடன் தொடர்புடைய தொலைபேசி … Read more

லிஸ்டீரியா நோய் தொடர்பில் விசேட பரிசோதனைகள் ஆரம்பம்

லிஸ்டீரியா நோய்தொடர்பில் ஸ்ரீபாத வீதியில் மேற்தளம் வரையிலான கடைகளில் விசேட சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் இருந்து உணவு மாதிரிகளை எடுத்து இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார். லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் சமீபத்தில் இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். விசேட பரிசோதனைகள் ஆரம்பம் ஸ்ரீ பாத சாலையில் உள்ள பேருமண்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் குறித்து 21ம் திகதி அறிவிப்பு!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி குறித்து 21ம் திகதி முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்படவுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கூட்டம் மார்ச் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. முக்கிய தீர்மானம் அதன் பின்னர், இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி 20ஆம் திகதி பிற்பகல், அதாவது இலங்கை நேரப்படி … Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.  இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் … Read more

யாழில் ஆசிரியர்களிடம் விளக்கக் கடிதம் கோரிய பாடசாலை

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ். புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று விளக்கக் கடிதம் கோரியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசின் வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் 47 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. நாடளாவிய ரீதியில் பாடசாலைகளும் மூடப்பட்டன. பாடசாலை வராமைக்கான காரணம் இந்தநிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராமை தொடர்பான காரணத்தை குறித்த பாடசாலை விளக்கக் கடிதம் மூலம் கோரியுள்ளது. Source … Read more

குறைந்துள்ள தங்கம் மற்றும் டொலரின் பெறுமதி! மக்கள் உணரத் தொடங்கியுள்ள மாற்றம்

தற்போது, பொருட்களின் விலைகள் குறைந்து செல்கின்றன. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பயப்படவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எமது கட்சிக்குத்தான். 2018 இல் தேர்தலில் அதிக சபைகளைக் கைப்பற்றியதும் நாங்கள்தான். அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை ரணில் விக்ரமசிங்க … Read more