வெள்ளைநிற மான்,வங்கப்புலி ரூ.235 கோடி மதிப்புடைய பதப்படுத்திய விலங்குகள்; ஸ்பெயினை அதிரவைத்த மனிதன்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பல்வேறு பதப்படுத்தப்பட்ட விலங்குகளைத் தனக்குச் சொந்தமான இடத்தில் சேகரித்து வைத்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிழக்கு வெலன்சியா (Valencia) பகுதியைச் சேர்ந்த ஒருவர் 1000 -க்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட விலங்குகளைச் சேகரித்து வைத்துள்ளார். இதில் 400 பாதுகாக்கப்பட்ட உயிரினங்களும்,ஒரு அழிந்த உயிரினமும்(Extinct organism) அடங்கும். பெடரா (Betera) என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் இந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50,000 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த … Read more

வேலூர்: போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி! – பறிபோகும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி?

தமிழகத்தில், மறு சீரமைக்கப்பட்ட ஒன்பது புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்பவர் 609 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். போலி சாதிச் சான்றிதழ் இந்த நிலையில், கல்பனா சுரேஷ் மாற்றுச் சமூகத்தைச் … Read more

“தமிழுக்கு போராடுவது போல நடிப்பது; இந்தியில் விளம்பரப்படுத்திக் கொள்வது!" – திமுக-வை சாடிய ஓ.பி.எஸ்

தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில் இந்தி மொழியை வளர்த்து வருகிறார் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் இதுகுறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பிற மொழி பேசுபவர்களைத் தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், பெரும் மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையாகும். ஸ்டாலின் ஆனால், தமிழக முதல்வர் தன்னை வளர்த்துக் கொள்ளும் … Read more

"கோவிந்தா,கோபாலா" கோஷத்துடன் சாத்தூர் வைப்பாறில் இறங்கிய அழகர்!-திரளான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோயிலில், சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சித்ராபெளர்ணமியை முன்னிட்டு, சாத்தூர் வைப்பாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. சாத்தூர் வேங்கடாசலபதி திருக்கோயிலில் காலையில், வேங்கடாசலபதி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வேங்கடாசலபதிக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அழகர் பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதியினா் இதில் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான … Read more

கர்நாடகா: வலைதள பதிவால் வெடித்த வன்முறை; நள்ளிரவில் காவல்நிலையம் மீது தாக்குதல் – 12 காவலர்கள் காயம்

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை அந்த நபரைக் கைது செய்துள்ளது. போலீஸ் தடியடி இந்த நிலையில், அவர் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையில் திருப்தியடையாததால், நள்ளிரவில் கும்பல் ஒன்று கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களை வீசி … Read more

Kgf-2 : "வடசென்னை படம் பாத்துட்டுதான் கேஜிஎப் டைரக்டர் கூப்பிட்டார்" – சரண் சக்தி

`கடல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கவனத்தை ஈர்த்து, வடசென்னை படத்தில் பிரபலமான நடிகர் சரண் சக்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே ஜி எப் -2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவருடனான நேர்காணல் இதோ: கே ஜி எப் -2 போன்ற பெரிய திரைப்படத்தில் நீங்கள் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? KGF Chapter 2 இவ்வளவு பெரிய படத்தில் நான் ஒரு கதாப்பாத்திரம் என்று சொல்லும்போது அதைவிட … Read more

உணவு டெலிவரி ஊழியரை நடுரோட்டில் ஷூவால் அடித்த இளம்பெண்… வைரலான வீடியோ – என்ன நடந்தது?

உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் Zomato, Swiggy, Uber போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை, நடுரோட்டில் மக்கள் முன் இளம்பெண் ஒருவர் ஷூவால் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த … Read more

Kgf -2 படத்துக்காக Beast படக்காட்சிகள் குறைக்கப்பட்டதா? – விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

கே.ஜி.எஃப் -2 படத்திற்கு ஏற்கெனவே 350 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று விஜய்யின் ‘பீஸ்ட்’டும், அதனைத் தொடர்ந்து 14-ம் தேதியன்று யஷ் நடித்த கே.ஜி.எஃப் -2 படமும் வெளியானது. இதில் பீஸ்ட் படத்துக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு கே.ஜி.எஃப் -2 படத்திற்கான திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. என்ற தகவல் கோடம்பாக்கத்தில் உலாவுகின்றன. இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியத்திடம் … Read more

தூத்துக்குடி பாகம்பிரியாள் திருக்கோயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரதவீதிகளில் வலம் வந்த திருத்தேர்!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருத்தேர் கயத்தாரைத் … Read more

5,500 அடி உயரத்தில் சித்திரை முழுநிலவுத் திருவிழா; கண்ணகி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்குத்தொடர்ச்சிமலை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்குக் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் கேரளாவின் குமுளியில் … Read more