நளினி இந்திய மற்றும் தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்

நளினி ஒரு  துரோகி, கொலைகாரி, தற்போதாவது நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு இந்திய மற்றும் தமிழக மக்களிடையே நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரியும், ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவருமான அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன், முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை … Read more

சேலையில் வந்த மணமகன் தோழர்கள்… அன்னநடை போட்டு அதகளப்படுத்திய அமெரிக்கர்கள்!

ஆண்களுக்கு என வடிவமைக்கப்பட்ட உடைகளான, முழு கை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றை பெண்கள் அணியத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் தாண்டியிருக்கும். ஆனால், இன்னும் பெண்கள் சார்ந்த உடைகளை ஆண்கள் மிக மலிவானதாக பார்க்கும் பார்வை மற்றும் கடந்த நூற்றாண்டோடு நின்றுவிட்டதாகவே தெரிகிறது.  மாறாக, இந்த பாலின பேதங்களை அடித்து நொருக்கும் வகையில், அமெரிக்கவில் இந்தியாவை சேர்ந்த நண்பரின் திருமணத்திற்கு, மணமகனின் தோழர்கள் சேலை அணிந்து, பொட்டு வைத்து வந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  … Read more

மசூதி மதராசாவுக்கு செல்லும் மோகன் பகவத்! தேர்தல் பராக் பராக்!

புதுடெல்லி: செளதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் பிரதமர் மோடி ‘தொப்பி’ அணிந்துள்ளார், ஆனால் இந்தியாவில் மட்டும்அவர் தலையில் ‘தொப்பி’ போடுவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நக்கல் செய்கிறார். பாஜக மற்றும் சங்பரிவாரை சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதரஸாக்கள், மசூதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கிண்டல் … Read more

அதிமுக ஆட்சியில் மெகா ஊழல்! மேல் விசாரணைக்கு அரசின் ஒப்பதல் தேவை

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிரான குற்றசாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவு … Read more

G20 Summit: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தோனேசிய தலைநகர் பாலியில் இன்று (நவம்பர் 15, 2022) வருடாந்திர ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது, உலகத் தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் உண்டாகியுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வில் “உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று … Read more

ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

சென்னை: 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின்  காலில் தசைநார் கிழிந்தததை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வலி குறையாததால், கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைநார்கள் அழுகிய நிலையில் இருப்பதால், காலை அகற்ற வேண்டும் எனக்கூறி, அவரின் வலது கால் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு … Read more

அடுத்தடுத்து விடுதலையாகும் குற்றவாளிகள்! 32 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் கூட்டாளிகள்

Coimbatore: கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறுதியாக விசாரணை முடிவில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து … Read more

அடுத்த 3 மணி நேரம்; இந்த மாவட்டங்களில் மழை..எச்சரிக்கும் வானிலை மையம்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-15-12:27:41 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/QgV7iqgmgL — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 15, 2022 … Read more

பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்!

நெய்வேலி அருகே கொளப்பாக்கத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நெய்வேலி அடுத்த அரசகுழி அருகே மாட்டு வண்டியில் சென்ற பொழுது திருச்சி கோட்டத்தை சேர்ந்த அரசு பேருந்து மாட்டு வண்டியின் மீது மோதியதில் இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதில் மாட்டு வண்டி முற்றிலும் சேதம் அடைந்தது மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த பச்சைமுத்து காயமடைந்துள்ளார்.  இந்த வழக்கு விருத்தாச்சலம் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2017 … Read more

ரஞ்சிதமே பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஷிவானி, இன்ஸ்டாகிராமில் தெறி ஹிட்

ஷிவானி நாராயணன் டான்ஸ் வீடியோ வைரல்: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு … Read more