உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா – பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உக்ரைனுக்கான சமீபத்திய ஆயுதப் பொதிகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா உக்ரைனுக்கு இரண்டு NASAMS ஏவுகணை அமைப்புகள், நான்கு கூடுதல் எதிர்ப்பு பீரங்கி ரேடார்கள் மற்றும் 150,000 ரவுண்டுகள் 155 மிமீ பீரங்கி வெடிமருந்துகளை அனுப்பவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிப் பொதி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் கவனம் செலுத்திய நேட்டோ தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைனால் வியாழன் அன்று மாட்ரிட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது. “பொதுமக்கள் நிரம்பிய … Read more

காலியில் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

காலியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் சுவரொட்டிகளை அகற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி, கட்டளை அதிகாரி – காலி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகளினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலி கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த “கோட்டா கோ ஹோம்” மற்றும் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இராணுவத்தினர் அகற்றி பறிமுதல் … Read more

Consular Affairs Division of Ministry of Foreign Affairs Resumes its Regular Services

Considering the heavy demand for Consular Services and in order to provide for the public needs in this regard, the Consular Affairs Division will be open to the public on all weekdays, Monday to Friday commencing July 04, 2022. The Regional Consular offices in Jaffna, Matara, Kandy, Trincomalee and Kurunegala will also follow the same working arrangements. … Read more

இலங்கை நாணயம் மதிப்பை இழக்கும் அபாயம் – பொருளாதார ஆய்வாளர் கடும் எச்சரிக்கை

இலங்கையில் பணவீக்கம் 60 வீதம் முதல் 70 வீதம் வரை அதிகரித்தால் நாட்டின் நாணயத்தின் பெறுமதி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் நிதிச் சிக்கல்கள் உள்ளவர்களின் கைகளுக்குப் பணத்தைச் சேர்ப்பதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் பணவீக்கம் 54 சதவிகிதம் என்பது முற்றிலும் உலகளாவிய காரணிகளால் ஏற்பட்டதல்ல, உள்ளூர் காரணிகளும் இதில் பாரிய … Read more

நுவரெலியா பொருளாதார நிலையங்களுக்கு மரக்கறி கொண்டும் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து கொழும்பு மெனிக் சந்தை உட்பட ஏனைய மாகாணங்களிலுள்ள பொருளாதார நிலையங்களுக்கு நாளாந்தம் மரக்கறி கொண்டும் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் சிங்க ஜெரிமென்ட் இராணுவ முகாமில் குறித்த வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. நுவரெலிய பொருளாதார மத்திய நிலையத்தினால் லொறிகளின் விபரம் இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்டிருப்பதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட கூறினார். இதேவேளை … Read more

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், டொலரொன்றின் விற்பனை விலை 367 ரூபா 24 சதமாகவும் பதிவாகியுள்ளது. பிரித்தானிய பவுண்ட்  பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 447 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது. யூரோ  யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி … Read more

இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

சுற்றுலா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்யில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலி;ல் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்hடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுடிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கான உறவுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்;கான ஜப்பான் தூதுவர் ஹிதஹி மிசிகோசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இதனைக் கூறினார். இந்த பேச்சுவார்த்தை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இலங்கையுடனான பொருளாதார சமூக கலாசார உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார். இலங்கைக்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி … Read more