பணவீக்கம் 2022 யூனில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 54.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் … Read more

மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விலை

லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது குறித்து அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, எரிவாயுவின் விலையை மீளவும் அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.  200 ரூபாவால் அதிகரிக்கப்படும் விலை மீண்டும் எரிவாயு கொள்கலன்கள்  விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்கமைய, கொள்கலன்  ஒன்றின் விலையை 5,100 ரூபா … Read more

லாப் எரிவாயு நிறுவனம் தற்போது வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல்

லாப் எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அந்த  நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீண்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான அறிவித்தல் விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவானவற்றை தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச … Read more

சைக்கிளை ஓட்டும்போது பாதுகாப்பு தலைக் கவசத்தை பயன்படுத்த வேண்டும்

சைக்கிள் ஓட்டுபவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது சிறந்தது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இரவு நேரத்தில் சைக்கிளில் பயணிக்கும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் விளக்கமளித்தார்.. ஒரு மிதிவண்டியின் அடிப்படை அங்கமாக இரவில் பிரதான பிரதான மின் குமிழ் (head lights) பிரதான குமிழ் வேண்டும். மேலும் மிதிவண்டியின் பின்புறத்தில் ஒரு பிரதிபலிப்பு … Read more

புதிய பஸ் கட்டணம் இன்று முதல் அமுல்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் இன்று முதல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 22 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார். பஸ் கட்டண மறுசீரமைப்பு தேசிய கொள்கைத் திட்டத்திற்கமைய வருடாந்தம் ஜுலை மாதம் 1ம் திகதி கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. புதிய கட்டண மறுசீரமைப்பின்படி 22 வீதத்தினால் பஸ்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறுந்தூரத்திற்கான ஆகக்குறைந்த கட்டணம் … Read more

மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.   எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பல தொழிற்துறைகள் முடங்கியுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் எரிபொருள் விற்பனை செய்யும் நடைமுறையும் வெகுவாக அதிகரித்துள்ளது.   2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் இந்த நிலையில், கலன் பிந்துனு பிரதேசத்தில் பெட்ரோல் போத்தல் ஒன்று 2500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக விலைக்கு … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மெட்டரி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். 2022ஆம் ஆண்டில் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற பன்முக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் மெட்டரி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் குறித்து தூதுவர் … Read more

அடுத்த வார அமர்வு: 4,5 மற்றும் 06ம் திகதிகளில் 

பாராளுமன்றம் அடுத்த வாரம் 4,5 மற்றும் 06ம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (30) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.   • நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் 6ஆம் திகதி  பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் கேட்கப்படாத 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக எதிர்வரும் … Read more