நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – ஹர்ஷ டி சில்வா கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி புதிய அணியொன்றுக்கு நாட்டை மீட்டெடுக்க இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் தமது பிரிவினர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான பணம் அச்சடிக்கப்பட்டதன் விளைவுகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடனை … Read more

இலங்கையின் பணவீக்கம் சடுதியாக உயர்வு

2022 ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், போக்குவரத்து பணவீக்கம் 128 வீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

மட்டக்களப்பில் சிறுபோக வேளாண்மை அறுவடை விழா

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக வேளாண்மை அறுவடை விழா இன்று (30) காலை 10 மணிக்கு கிரான் தவணை கண்டத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. வாகனேரி திட்ட முகாமைத்துவக்குழுவின் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டார். மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்னர். ஆலய … Read more

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமனம்

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ விடமிருந்து ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று (30) பெற்றுக்கொண் டார். ஆளுநரின் பதவிக்காலம் இன்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களின் திகிலூட்டும் பயணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.   எரிபொருள் தட்டுப்பாட்டால் பலரின் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாழ்வாதாரத்தை இழக்கும் இக்கட்டான நிலையையும் சந்தித்துள்ளனர்.  இலங்கையர்களின் திகிலூட்டும் பயணம்  தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள்  கடுமையான போக்குவரத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் முழுமையாகச் செயற்படாததால், குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதிகமான பயணிகள் அவற்றில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் கூரையில் பயணிகள்  … Read more

அமைச்சர் தம்மிக்க பெரேராவின் புதிய அறிவிப்பு! நாளை முதல் நடைமுறை

இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட வேலை விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தம்மிக்க பெரேரா இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.   நாளை முதல் நடைமுறை குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். Source link

இந்தியாவில் இருந்து கிடைக்கும்  யூரியா உரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல் 

இந்திய அரசாங்கத்தினால்  கிடைக்கும் யூரியா உரத்தை நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு  இன்று பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து நெற்செய்கையாளர்களுக்கும் நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது.  இதன் காரணமாக அந்த விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர் விநியோகிக்கப்படும் முறை தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் … Read more

13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயார்! சாணக்கியனின் அறிவிப்பு (Video)

ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும், இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்து பேசிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில், பல்வேறு காலக்கட்டங்களில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த அல்லது வெளியேற்றப்பட்ட புலம்பெயர் இலங்கையர்களை நோர்வேயில் சந்திக்கிறேன். கடந்த இருவாரங்களில் சுவிட்சர்லாந்தில் … Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை வழமைபோன்று மிகச் சிறப்பாக  நடைபெறும்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இம்முறை மிகச் சிறப்பாக  இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்  தெரிவித்துள்ளார்.. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு … Read more