3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் வவுனியா டிலக்சினி கந்தசாமி

பாக்கிஸ்தானில் நடைபெறும் 3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர். கடந்த கடந்த 27 ஆம் திகதி பயணமான இந்த போட்டியாளர்களில் வவுனியாவை சேர்ந்த செல்வி டிலக்சினி கந்தசாமியும் இடம்பெற்றுள்ளார். இவர் வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஏற்றுமதி ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (நுனுடீ) தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (9.9%)அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ஆடை கைத்தொழில்,பலசரக்கு பொருட்கள், தென்னை சார்ந்த உற்பத்திகள்,அலங்கார மீன் மற்றும் மின்சார உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. இந்த பொருட்களில் அதிக … Read more

ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.6 வீதமாக வீழ்ச்சி

இந்த ஆண்டின் (2022) முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2021 முதல் காலாண்டில் பதிவான 4.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 3,519,921 மில்லியன் ரூபாவிலிருந்து 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,463,101 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. 2021 … Read more

முப்படைகள் வசமானது எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (29) எரிபொருள் விநியோகத்தை முப்படை, பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க தீர்மானித்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும், இந்த முறை இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் அரசாங்கத்தின் இந்த சமீபத்திய உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை எந்த இலங்கை பெற்றோலிய … Read more

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக்கான குற்றம் வரையறுக்கப்படவில்லை என்ற காரணத்தினால் அவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கும், தீர்ப்பதற்கும் தெளிவான மற்றும் சீரான நடைமுறைகள் தற்போது நாட்டில் பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக, நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதற்கான வரம்புகள் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் கீழுள்ள வரையறைகளை புரிந்துகொள்வது கடினம் என்று … Read more

கடும் எரிபொருள் நெருக்கடி – புடினுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சு

ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கான எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கூற்றுப்படி, இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஜூலை 10ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்தியாவுடன் கலந்துரையாடல்களை … Read more

13 இலட்சத்திற்கும் அதிகமான எரிபொருள் கண்டுபிடிப்பு  

வவுனியா, வேப்பம்குளம் பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக டீசல் சேகரிக்கும் வியாபாரி ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நெளுக்குளம் பொலிசார் அறிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் சட்டவிரோதமான முறையில் 15 பீப்பாய்கள் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எரிபொருளை சேகரிக்கும் … Read more

புதுமுறிப்பு மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டி: ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வு

கிளிநொச்சி மாவட்ட புதுமுறிப்பு பகுதிக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமார் 16.2 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை பார்வையிட்டார். இதன்போது குறித்த தொட்டிகளின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார். துறைசார் அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பணம் அச்சிடுவது தொடர்பில் பிரதமர் ரணிலின் புதிய அறிவிப்பு

பணம் அச்சிடும் நடைமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.   பணம் அச்சிடும் நடைமுறை நிறுத்தப்படும என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் அச்சிடுவது நிறுத்தப்படும் அடுத்த வருடத்தின் முற்பகுதி முதல் இவ்வாறு பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல்  எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று … Read more

அமைச்சர் பீரிஸ் ருவாண்டாவின் கிகாலியில், நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பு

2022 ஜூன் 24 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 23ஆந் திகதி பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ருவாண்டாவின் ஜனாதிபதி பால் ககாமே தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், அரச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் … Read more