மட்டக்களப்பு முகத்துவாரம் விரிவாக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆற்று வெள்ளப் பெருக்கினால் வயற்காணிகளில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில்  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளதனால் 5000 ஏக்கருக்கு மேற்ப்பட்ட வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியமை சுட்டிக்காட்டப்பட்டது. ஆற்றுவெள்ளத்தை அகற்றாவிடின் விவசாயிகள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என மாவட்ட விவசாயிகள்மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் … Read more

முல்லைத்தீவில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் – மாணவர் உள்ளிட்டோர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியரும் மாணவரும் விளக்கமறியலில் இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் பொலிஸார்  முன்னிலைப்படுத்தியுள்ளனர்.   இதன் போது, மாணவர் ஒருவர் எதிர்வரும் 30.6.2022 வரை … Read more

இலங்கையில் 45 இலட்சம் பேருக்கு காத்திருக்கும் சிக்கல்! தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம்

இலங்கையில் எதிர்காலத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளதுடன் தொழில் வாய்ப்புகள் இல்லாது போனால் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 45 இலட்சம் தொழில்வாய்ப்புகள் மேலும் தெரிவிக்கையில், 45 இலட்சம் தொழில்வாய்ப்புகள் தொடர்பில் நான் இங்கு கருத்து … Read more

அடுத்த வார பாடசாலை நடவடிக்கை: இறுதித் தீர்மானம் வார இறுதியில்

போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை இந்த வாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை ,அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த வார இறுதிப் பகுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்து 193 பாடசாலைகளில் 9 ஆயிரத்து 567 பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடந்த வருடங்களில் பாடசாலை … Read more

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று பதிவாகியுள்ள வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.16  ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 356.12 ரூபாவாக பதிவாகியுள்ளது. யூரோவொன்றின் பெறுமதி மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 388.41 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Source … Read more

கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் … Read more

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகள்: 5 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று(24) நடைபெறவுள்ளது. ஏற்கனவே தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து விட்ட ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது. அவுஸ்திரேலிய துடுப்பட்ட வீரர் டிராவிஸ் ஹெட் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை! லிட்ரோவின் இன்றைய அறிவிப்பு

எதிர்வரும்  ஜூலை மாதம் ஆறாம் திகதி வரை  சமையல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என  கோரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பான அறிவித்தலை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் விடுத்துள்ளார்.  நாட்டை வந்தடையும் எரிவாயு கப்பல்  ஜூலை 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையும். அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் தற்போது … Read more

எரிபொருள் வரிசையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹொரண, அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறை

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக ,ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களை வெளிநாடுகளில் பணியமர்த்துவதற்காக வடிவமைக்கப்படதல்ல. அரச உத்தியோகத்தர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்பினால், அவரே வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவைக் காலம் … Read more