தொலைநோக்குடன் கூடிய தலைவர் இலங்கையில் இல்லை! எரிக் சொல்ஹெய்ம் பகிரங்க அறிவிப்பு

ராஜபக்சக்களின் வீழ்ச்சியின் வேகம் பல சர்வதேச அவதானிகளிற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி ராஜபக்சவினர் மிகப்பெரும் பெரும்பான்மையைப் பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன. அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும், பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். கோவிட் வைரஸ் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வராததால் பெருமளவு வருமானத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கை … Read more

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இந்திய உரம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் உரம் கிடைக்கும் என்பதை விவசாய அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ். யோகவேள் தெரிவித்தார். அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்களுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு ,அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எச். சமரகோன் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 02.06.2022 விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சமகாலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் … Read more

பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயிரிட ஆரம்பியுங்கள்…ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தேயிலை ஏலம் டொலர்களில்… பெருந்தோட்டத் துறையின் தேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை… அனைத்துப் … Read more

லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் – செய்திகளின் தொகுப்பு

மறு அறிவித்தல் வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு (12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம்) விநியோகம் நடைபெற மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. “எம்மிடம் தற்போதைய இருப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டன, மறு அறிவித்தல் வரும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று மூத்த லிட்ரோ நிறுவன அதிகாரி கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய … Read more

இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகன விலைகள் அதிகரிப்பு டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் … Read more

வலியை உணரக்கூடிய "எலக்ட்ரானிக் தோலை" உருவாக்கி இந்திய வம்சாவளி பொறியாளரின் குழு சாதனை

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா தலைமையிலான பொறியாளர்கள் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியின் பேராசிரியராக உள்ள நிலையில், இந்த சாதனையை படைத்துள்ளார். எலக்ட்ரானிக் தோலின் பயன்கள் இது குறித்து ரவீந்தர் எஸ் தஹியா கூறுகையில், “இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர்திறன் கொண்ட புதிய தலைமுறை ஸ்மார்ட் … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் … Read more

இன்றைய மின் துண்டிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)  இன்று (04)சனிக்கிழமை ஒரு மணிநேரம் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.  

"ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்"

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மத்திய வங்கியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ் வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். கோபமடைந்த ஜனாதிபதி  எவ்வாறாயினும் இதற்கு ஜனாதிபதி தனது … Read more

கஜபா படையணியின் 'வீரர்களின் புயல்' கொபி புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கஜபா படையணியின் படைவீரர்களான புதிய பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே ஆகிய இருவரும் அவர்களின் சிறந்த படையணிக்கு நிரந்தர நினைவுகளைச் சேர்க்கும் வகையில், படையணியின் வரலாற்றின் பாரம்பரியம், அது நிறுவப்பட்டதில் இருந்து பரிணாமம், அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஒப்பிடமுடியாத இயற்கையின் போர்க்கள சாதனைகள், வீரம் மற்றும் தாய்நாட்டின் விடுதலையில் அதன் போர்வீரர்களின் இணையற்ற பங்களிப்பு போன்றவற்றை ஆவணப்படுத்திய புத்தகமான ‘போர்வீரர்களின் புயல்’ … Read more