கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு நாளைய தினம் (04) ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவில் உள்ளடங்கியுள்ள விடயம் மேலும், கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

அரச காணிகளில், பலாக்காய்களை பறிக்க பொதுமக்களுக்கு அனுமதி

வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் பலாக்காய்களை பறிப்பதற்கு அனுமதிப்பத்திரங்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் இந்த ஆண்டு பலா மரங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர். அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 ஹெக்டேர் … Read more

தனிநபரொருவர் வீட்டில் சேமித்து வைத்துள்ள டீசல் களஞ்சியசாலை

அம்பந்தோட்டை – மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல் இதன்போது, 1,700 லீற்றர் டீசல் விசேட அதிரடிபடை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் டீசலை சேமித்து வைத்துள்ள நபர் … Read more

65,000 க்கு அதிகமான மெட்ரிக் தொன் எரிபொருள் கையிருப்பில்…….

நாட்டில் தற்போது மொத்தமாக 65 ஆயிரத்து 818 மெட்ரிக் தொன் (MT) எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) தரவுகளின் படி, 33 ஆயிரத்து 498 மெற்றிக் தொன் Octane 92 பெற்றோலும், 13 ஆயிரத்து 67 மெற்றிக் தொன் Octane 95 பெற்றோலும், 18 ஆயிரத்து 825 மெற்றிக் தொன் டீசலும் 42 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் அரசாங்கத்திடம் கையிருப்பில் … Read more

மட்டக்களப்புக்கு ,இந்திய நிவாரணப் பொருட்கள்

இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில் ஒரு தொகுதி இன்று (03) திகதி மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன. கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த், புகையிரத நிலைய பிரதம அதிபர் எஸ்.பேரின்பராசா உட்பட அதிகாரிகள் பலரும் சமுகமளித்திருந்தனர். இம்மாவட்டத்திற்கு 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பன பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மாவட்ட … Read more

நாட்டின் நெருக்கடி கடுமையாக உள்ளது – பிரதமர் அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவை ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி … Read more

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய கொவிட் நிதியிலிருந்து 1.8 பில்லியன்…                          

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். கொவிட் தடுப்புக்காக நன்கொடையாளர்களிடமிருந்து இந்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது. கொவிட் தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. உலக சந்தையில் மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டு மருந்துத் … Read more

யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய்

யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கண்காணிப்பு பொறிமுறை ஊடாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட விவசாய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான கால அட்டவணைகளை மாற்றுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் உணவு வீண்விரயத்தை குறைத்து வீட்டுத்தோட்ட உற்பத்திகளை அதிகரித்தல், விதைகளின் தேவைப்பாடு, விதை நெல் தேவைப்பாடு மற்றும் … Read more

லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

சமையல் எரிவாயுவை பல மாதங்களாக சந்தைக்கு விநியோகிப்பதை நிறுத்தி இருந்த லாஃப் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்துள்ள எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடைய உள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 3000 மெற்றி தொன் இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவோரில் கணிசமான தொகையினர் லாஃப் … Read more