லக்னோ – பெங்களூர் அணிகளுக்கிடையில் இறுதி சுற்றுக்கு தகுதி காணும் போட்டி இன்று

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (25) நடைபெறும் வெளியேற்றல் சுற்றில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நேற்று (24) தொடங்கிய ‘பிளே ஆப்’ சுற்றில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. … Read more

பலர் வேலை இழக்கும் அபாயம்! இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் போதுமான பொருட்களை வாங்குவதற்குக் கூட வருமானம் இல்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று கூற முடியாது. நாட்டில் தற்போது உள்ள வெளிநாட்டு கையிருப்பு ஒரு வாரத்திற்கு போதுமானதாக … Read more

உணவு பொருட்களின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கிறது! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறும், அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதனால் அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.  எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது. எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் … Read more

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வளைகுடா நாடு

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியாவில் நேற்று(24) முதலாவது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வெளியில் பரவியுள்ள வைரசினை கண்டறிய 18 நாடுகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மேற்கு ஆப்பிரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பயணி ஒருவரின் மூலமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பரவியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .மேலும் அங்குள்ள அதிகாரிகள் எந்தவொரு தொற்று பரவலை … Read more

இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை … Read more

எரிபொருள் விநியோக தடைகள் குறித்து பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று (24) வரை நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கோரப்பட்டிருந்த அனைத்து எரிபொருட்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்பதுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் … Read more

டொலரொன்றின் இன்றைய மதிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 35 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது.  அதேசமயம், யூரோ ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி ரூபா 391.02 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி  ரூபா 380.22 சதமாக பதவாகியுள்ளது.  Source link

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் , தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 25.05.2022

கோட்டாபய ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் – தனிநபரின் கடன் சுமை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525,200 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் அதிகரிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனிநபர் கடன் சுமை 882,150 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது அந்த தொகை 643,422 ரூபாயாகும். அதற்கமைய, கடந்த … Read more

இன்று விநியோகம் இல்லை: லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு (Video)

இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம், Source link