கடும் மழையினால் சேதமடைந்த மனம்பிட்டி – அரலகங்வில தற்காலிக இரும்பு பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு நாட்களில் நிறைவு

கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்க அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இரவு பகலாக இடைவிடாது உழைத்து சேதமடைந்த, மனம்பிட்டி – அரலகங்வில (B-502) வீதியில் 19/1 பாலத்திற்குப் பதிலாக தற்காலிக இரும்புப் பாலத்தை விரைவாக நிர்மாணித்தனர். அதன்படி நேற்று (30) காலை முதல் அப் பாலம் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. பொதுவாக 15 நாட்கள் வரை எடுக்கும் இப்பணி, பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறை மாவட்டத்திற்கு வெள்ள நிலைமைகள் தொடர்பாகக் கண்காணிப்பு விஜயம்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் மற்றும் தற்போதைய அவசர நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்கான கள விஜயம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க இன்று (30) மேற்கொண்டார். இதன் போது ஆளுநர், கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு விநியோகிக்குமாறு, அம்பாறை மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைத்தார். … Read more

இலங்கையின் பல இடங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 30ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (FENGAL) பெஞ்சல் சூறாவளி நேற்றிரவு (29) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது மேற்கு திசை ஊடாக, வடமேல் திசை நோக்கி நகர்ந்து இன்று … Read more

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி புணரமைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி(மருதங்கேணி பளை சுனாமி அபாய வெளியேற்றபாதை) புணரமைக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் சேதத்துக்கு உள்ளாகவிருந்த நிலையில் குறித்த பாதையின் இரு பக்கமும் மண் மூடைகள் அடுக்கப்பட்டு குறித்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களம், பளை பிரதேச சபை மற்றும் பலாலி பாதுகாப்பு படை தரப்பினர் அடங்கிய குழுவினரின் ஒத்துழைப்புடன் குறித்த வீதி இவ்வாறு சீரமைக்கப்பட்டது. அனர்த்த காலத்தில் இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு அரசாங்க அதிபரினால் உதவி!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் குறித்த உலருணவுப் பொதிகள் சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக மக்களை தங்கவைத்துள்ள இடைத்தங்கல் முகாமில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது மேலதிக அரசாங்க அதிபார் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் … Read more

திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை

திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை

யாழ்ப்பாணத்தில் வெள்ள  அனர்த்த நிலைமைகள்    தொடர்பான விசேட கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட  கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர்   தலைமையில் நேற்றைய தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா்  கூடத்தில்  நடைபெற்றது. இவ் விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் தூயகொந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை ஆராய்வதே … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் திரு. காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சேவையாற்றும் திறமையான மற்றும் நிபுணத்துவமிக்க இலங்கையர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் தூதுவர் தெரிவித்தார். தூதரகத்தின் இரண்டாவது … Read more

தென்னாபிரிக்க அணி 281ஓட்டங்களால் முன்னிலை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (28) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய  தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளுக்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.   அதன்படி, தென்னாபிரிக்கா அணி 281 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ள அணித்தலைவர் டெம்பா பவுமா 24 ஓட்டங்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.   தென்னாப்பிரிக்கா அணி சார்பில் … Read more

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வட்டுவாகல் பாலத்தின் நிலை தொடர்பில் ஆராய நேரடி கள விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியின் இணைப்பாக இருக்கின்ற வட்டுவாகல்பாலம் நீட்டகாலமாக பழுதடைந்த நிலையில் மீள் நிர்மாணிக்கப்படாமையினால் முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான போக்குவரத்துக்கு இடையிடையே தடை ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற பயணமாகவும் அமைந்துள்ளது. வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க குறித்த பாலத்தை இன்றையதினம் (29) பி.ப 1.00 மணியளவில் நேரடியாக சென்று  பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.  மிகப் பழமையான வட்டுவாகல் பாலம் மழை காலத்தில் நந்திக்கடல் முகத்துவாரத்தின் இணைப்புடன் … Read more