இலங்கையின் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் நாணயக் குற்றி

இலங்கை மத்திய வங்கியானது 2023.02.04 அன்று இடம்பெறவுள்ள நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக ரூ.1000 நாணய வகை சுற்றோட்டம் செய்யப்படாத ஞாபகார்த்தக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது. இது, இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் 71ஆவது ஞாபகார்த்தக் குற்றியாகும். குற்றி பற்றிய விரிவான விபரணங்களும் விபரக்குறிப்புக்களும் கீழே தரப்பட்டுள்ளன. முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/P.R_20230202_the_cbsl_issues_a_coin_to_mark_the_75th_independence_celebration_of_sri%20Lanka_t.pdf

சிலாபம் கடற் பிரதேச பகுதியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழப்பு

  சிலபத்தில் தெதுரு ஒயா கடலுடன் கலக்கும் முகத்துவார பிரதேசத்தில் நீராடச் சென்ற குழு ஒன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நீர்கொழும்புஇ தலுபொத பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைஇ மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்கள்இ திடீரென்று நீரோட்டத்தில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த குழுவொன்று … Read more

“ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா” ஓவியக் கண்காட்சி பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நடைபெறும்

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஆர்ட் ஒப் ஸ்ரீ லங்கா” (Art of srilanka) ஓவியக் கண்காட்சியை இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் (Poj Harnpol) கொழும்பு 07 இல் அமைந்துள்ள கட்புல ,அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ. பெரேரா கலையரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய மற்றும் திறமையான கலைஞர்களின் பங்களிப்புடன் நாட்டின் … Read more

இலங்கை ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது போட்டி

இலங்கை ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான போட்டி நாளை (07) காலியில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. இலங்கை ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 333 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் 200க்கும் மேற்பட்மோர் உயிரிழப்பு

துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலும் அதனை அடுத்துள்ள சிரியாவின் எல்லை பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (06) ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரிய நாட்டு சுகாதார அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள பிந்திய தகவலில் 237 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   இரு நாடுகளிலும் 100 மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன. அவற்றில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.     இந்த சம்பவத்யைடுத்து துருக்கியில் அவசர கால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   மீட்பு பணிகளின் … Read more

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா உள்ளிட்ட பல … Read more

கிழக்கு, ஊவா முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 பெப்ரவரி 06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 06ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின்  கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்  ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய  பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்50 மி.மீ க்கும் அதிகமான … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு  விஜயம் செய்துள்ளார். இன்று (06) காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவரை வரவேற்பதற்காக சுட்டுநாயக்க விமான சிறப்பு விருந்தினர்களின் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை

தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளினால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் வசூலிக்கும் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகளின் மற்றும் பிரிவேனாக்களின் அதிபர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. Source … Read more

எதிர்வரும் 09 ,10ஆம் திகதிகளில்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம்

ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் எதிர்வரும் 08ஆம் திகதி முன்வைக்கவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  (03)  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடறவிருப்பதுடன், … Read more