சிலாபம் கடற் பிரதேச பகுதியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழப்பு

 

சிலபத்தில் தெதுரு ஒயா கடலுடன் கலக்கும் முகத்துவார பிரதேசத்தில் நீராடச் சென்ற குழு ஒன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில்

நீர்கொழும்புஇ தலுபொத பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைஇ மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்கள்இ திடீரென்று நீரோட்டத்தில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த குழுவொன்று அவர்களைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் இவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.