தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயல்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்

ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பலை அலுவலகம் மீண்டும் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தலைமையில் (27) திறந்து வைக்கப்பட்டது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பலையில் உள்ள வீடுஇ அலுவலகம் மற்றும் கேட்போர் கூடம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக தீயினால் அழிக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை உடுகம்பளை அலுவலகத்தில் பொது மக்கள் தினத்தை நடத்த முடியாத நிலை … Read more

10 வருடங்களின் பின்னர், கடந்த ஆண்டு ஒரு ஹெக்டேருக்கு 3, 207 கிலோ நெல் விளைச்சல்

2022ஆம் ஆண்டுக்கான போகத்தில் ஒரு ஹெக்டேருக்கு மூவாயிரத்து 207 கிலோ நெல் விளைச்சல் பதிவாகியுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு சிறுபோகத்தில் யூரியா உரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் பின்னர், ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டது. இதன்படி, 10 வருடங்களின் பின்னர், 2022ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நாட்டில் அதிகளவு நெல் பயிரிடப்பட்டது. அத்துடன் பெறும்போகத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தின் தரம் அதிகமாக இருந்ததால் விளைநிலங்கள் வளமாக இருந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த … Read more

இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட உத்தரவு

இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பெப்ரவரி நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அனைத்து அரச கட்டடங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு கோரப்பட்டுள்ளது. … Read more

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! அரசாங்கத்திற்கு தேவைப்படும் பெருந்தொகை பணம்

அரசதுறையின் சம்பளத்துக்காக மாத்திரம் ஏறத்தாழ ஒரு ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  கடன்களை மீளச்செலுத்துவதில் நாம் பல சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதுடன், அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், உதவிக்கு கூடுதல் செலவு எதுவும் எடுக்கப்படாமல் நாங்கள் மிகவும் சிரமத்துடன் நிர்வகித்து வருகிறோம். நிலைமை முற்றாக சீரடைந்துவிடவில்லை அரசதுறையின் சம்பளத்துக்காக மாத்திரம் ஏறத்தாழ ஒரு … Read more

சட்டவிரோதமாக கடத்தப்படும் தொலைபேசிகள்! நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

நாட்டிற்குள் சட்டவிரோதமான  முறையில்  கையடக்க தொலைபேசி இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் இவ்வாறு பொதிகள் ஊடாக இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். இத குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,   கைத் தொலைபேசிகள்  இறக்குமதியின் போது, ​​அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைசெலுத்தாமல் … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம். மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் … Read more

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை இலங்கை பணத்திற்கு வரி! செய்திகளின் தொகுப்பு

சில ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் ஐம்பத்து மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பான வரிகளை அறவிடுவதற்கான சட்டங்களை தயாரிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்கள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், பல்வேறு வரி ஆலோசனை நிறுவனங்களும் … Read more

மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு அரசியலில் அரங்கேறும் நாடகம்(Video)

13 ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று(28.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர். அதற்காகவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது என கூறியுள்ளார். இது தொடர்பான பல … Read more

நாட்டில் டெங்கு நோயாளர்களின் தொகை அதிகரிப்பு:சி.யமுனாநந்தா

நாட்டில் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் நேற்றைய தினம் (28.01.2023) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுகின்றது. டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அதேபோன்று … Read more

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் விபரம் இதன்காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது. குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக கரையோரப் பாதுகாப்பான இடத்திற்கு … Read more