வேலன் சுவாமிகள் கைது பொலிஸாரின் வன்மம் நிறைந்த நடவடிக்கை! அருட்பணி கந்தையா ஜெகதாஸ் கண்டனம் (Video)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமியை யாழ். பொலிஸாரின் கைதுக்கு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  பொலிஸாரின் இந்நடவடிக்கை வன்மம் நிறைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறிக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  Source link

<span class="follow-up">NEW</span> வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி! (Photos)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.  வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகளை யாழ்ப்பாண … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய 1000 பேருந்துகள் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் – அமைச்சர் பந்துல

சுதந்திர தினத்திற்கு அமைவாக  1000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக 800 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாதிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற 75 பேருந்துகள் கிராமப் புற … Read more

gre

  சிறுநீரக கடத்தல் சம்பவம் பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவரும், வெல்லம்பிட்டிய … Read more

கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்களில் நேற்று (17) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 113.72 புள்ளிகளால் அதிகரித்து 8,376.30 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 79.43 புள்ளிகளால் அதிகரித்து 2,607.51 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் முறையே 1.38% மற்றும் 3.14% ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய பண பரிவர்த்தனை 1.24 பில்லியன் ரூபாவாக பதிவாகியது. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் தனியார் நிறவனத்தின் பங்கின் விலை நேற்று (18) அதிகரித்ததனால், அனைத்து … Read more

உத்தியோகத்தர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18.01.2023) காலை மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது புதிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.  கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் ,மாவட்டத்தின் கீர்த்திக்கு வழிகாட்டியாக இருந்த முன்னாள் அரசாங்க அதிபர்கள் மற்றும் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் இப்பதவி தனக்கு … Read more

வெளிவிவகார செயலாளருக்கும் – பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக நிரந்தர துணை செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டன் ஆகியோர் 2023 ஜனவரி 17, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர். ஐக்கிய இராச்சிய – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டில் இந்த ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாடு இடம்பெற்றது. வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, நாட்டின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான சமூகப் … Read more

உள்ளூராட்சித் தேர்தல்:மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சித் தேர்தல் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ,மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம். பி.எம்.சூபியான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்வில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வேட்புமனு தாக்கல்  தொடர்பாகவும், வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதியான இன்றிலிருந்து (18) இறுதி நாளான எதிர்வரும் 21ஆம் … Read more

பிரதமரின் அழைப்பையேற்று சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வோம் – ஊருவரிகே வன்னியலே அத்தோ தெரிவிப்பு

75வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி சார்பில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் உள்ள சகல ஆதி வாசிகள் தலைவர்களுடன் இந்தத் தேசிய நிகழ்வில் கலந்துகொள்வதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ 2023.01.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தபோது தெரிவித்தார். இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தன்னைச் சந்தித்த ஆதிவாசிகள் தலைவரிடம் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

மின்சாரம் – எரிபொருள் – வைத்தியசாலை சேவைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

நாட்டின் மின்சாரம், எரிபொருள் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு இன்று (18.01.2023) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சார வழங்கலுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அதாவது, கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தல் மேலும, வைத்தியசாலைகள், மருந்தகங்கள், மற்றும் தாதியர் இல்லங்கள் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய … Read more