இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின்  தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் மேஜெட் மொஸ்லா (Maged Mosleh) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (26) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பதற்கான தனது ஆர்வத்தை எகிப்து தூதுவர் வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கைக்கும் எகிப்து அரபுக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 65 வருடத்தைப் நிறைவுசெய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக் … Read more

இலங்கையை வந்தடைந்துள்ள நிலக்கரி

60,000 மெற்றிக் டொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரை இறக்கும் பணிகள் இன்று (26) மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் 05 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, லக் விஜய அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான பெறுகை டுபாயில் அமைந்துள்ள … Read more

மேல் மாகாணத்தில் இருந்து சிறுவர்கள் தொடர்பாக, அதிக முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் … Read more

நீர் மின் உற்பத்தியில் 65 சதவீத அதிகரிப்பு

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பதனால் நாளாந்த நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்படிஇ நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 65 வீதமானவை நீர் மின் நிலையங்களினால் பூர்த்தி செய்யப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதனால் நாளாந்த மின் துண்டிப்பை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது

நாட்டின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு அமைவாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ,வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகல் அல்லது நீக்கம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தீர்ப்பதற்கு நீதிமன்றத்தின் … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களால்,இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தின் 50%க்கு பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணத்தையனுப்பிய இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய தகுதியுடையவர்கள் என்றார். அரசாங்க தகவல்திணைக்களத்தில் ,இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 2022 மே 1 … Read more

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு – கடற்றொழில் அமைச்சர்

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று (25) நடைபெற்றது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் … Read more

இலங்கையில் கேளிக்கை பூங்கா (Disneyland)

இலங்கையில் Disneyland கேளிக்கை பூங்கா ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘அநேகமான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது,  Disneyland பூங்காவை இலங்கையில் அமைப்பது குறித்து என்னுடன் கலந்துரையாடினர். உலக நாடுகளில்  டிஸ்னிலேண்ட்டை அமைத்தவர்கள் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் டிஸ்னிலேண்ட்டை இலங்கையிலும் அமைக்க எதிர்பார்த்துள்ளனர். அதன் மூலம் எமக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும்’ என்றும் … Read more