உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று (18) ஆரம்பமாகின்றது. வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடித்தக்கது. மேலும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் … Read more

ஆரோக்கிய தயாரிப்புக்கள் பாரிய கிராமிய திட்டம்: இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்

ஆரோக்கிய தயாரிப்புக்கள் பாரிய கிராமிய திட்டத்தை இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பஸ்குவெல் தெரிவித்தார். மேற்கொள்ளப்படும் உற்பத்திகளின் கீழ் செயற்படும் பொருளாதாரத்தை To create a functioning economy உருவாக்கவுள்ளதாக கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய போது இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒரு புதிய கிராமம் – ஒரு புதிய நாடு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் … Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தரும் செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கு நிதிச் சலுகை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்னதாக தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி  இந்த நிலையில் குறித்த நிதிச்சலுகைகளை 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை, மேலும் ஐந்து மாத … Read more

யாழ். அரச அதிபர் நியமனம்: அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் சிவசேனை

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவ பாலசுந்தரனை நியமித்தமைக்கு அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கும்பல் அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருள் கும்பல்களையோ மதமாற்றக் கும்பல்களையோ ஆட்சியில் அதிகாரத்தில் நிர்வாகத்தில் விடக்கூடாது என்பதில் சிவ சேனையில் உள்ள நாங்கள் மிகத் தெளிவாக செயல்படுகிறோம். மார்கழி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30.12.2022) அன்று சிவ சேனை உருத்திரசேனை மற்றும் சைவ அமைப்புகள் இணைந்து … Read more

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாகம் சேவையில் மூத்த அதிகதரியான அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மட்டக்களப்பு, கொழும்பு வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் 2013ஆம் ஆண்டு தொடக்கம் வட மாகாண சபையில் பேரவை செயலாளராகவும் பிரதிப் பிரதம செயலாளராகவும் மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளராகவும் கடமையாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன்,  இறுதியாக மாகாண சபை விவசாய … Read more

கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கம் வழங்கிவரும் இலட்சக்கணக்கான பணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கத்தினால்  வழங்கப்படும் பணம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி,  கோட்டாபயவுக்கு  அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.  அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், … Read more

இரட்டை குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நயன்தாரா.. அழகிய குடும்ப புகைப்படம்

நயன் – விக்கி நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய், தந்தை ஆன இருவரும் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டனர். அதற்க்கெல்லாம் தக்க பதிலை கொடுத்துவிட்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். குடும்ப புகைப்படம் இந்நிலையில், நேற்று பொங்கல் பண்டிகையை தனது கணவர், மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நயன்தாராவின் குழந்தைகள் உயிர், உலகம் … Read more

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவுடனும் சீனாவுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றி

மக்கள் நலனுக்காக புதிய அரசியல் பயணத்தை தொடங்குவோம் 75 ஆவது சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு இந்த ஆண்டு மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு 30-40 பில்லியன்– ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து … Read more