இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டி நாளை

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ரி20 போட்டி நாளை (04) நடைபெறவுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இவ் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி குவஹாத்தியில் நேற்று (02) இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு … Read more

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி வழங்கும் வேலைத்திட்டம் ஆயிரம் பாடசாலைகளில் இன்று (03) தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். மாணவர்களின் மந்த போசாக்கு நிலைமைக்கு தீர்வாக 2 ஆயிரம் சமூக வைத்திய சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி மேலும் தெரிவித்தார்.

“புனர்வாழ்வு பணியகம்” சட்டமூலத்திற்கு எதிராக 6 மனுக்கள்

“புனர்வாழ்வு பணியகம்” என்ற சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனுக்கள் அரசியல் யாப்பின் 121 (01) அரசியலமைப்புக்கு அமைவாகவே ஆகுமென்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கோப் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர் 

    பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல்  2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.   இதற்கமைய, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய … Read more

முல்லைத்தீவு மாவட்ட மென்பந்தாட்ட துடுப்பாட்ட அணி முதலாம் இடம்

வட மாகாண ஆண்களுக்கான மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 1ஆம் இடத்தை பெற்றுக் கொண்டது. நேற்றைய தினம் (02) மன்னாரில் நடைபெற்ற போட்டியில்,முல்லைத்தீவு மாவட்ட அணி கால் இறுதி போட்டியில் யாழ் மாவட்ட அணியை வெற்றி கொண்டு, அரையிறுதியில் மன்னார் மாவட்ட அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, கிளிநொச்சி மாவட்ட அணியை வெற்றி கொண்டு முதலாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அணி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மூன்று … Read more

இலங்கையர்களுக்கு ஜப்பானில் ஆயிரம் பராமரிப்பு ஊழியர்களுக்கான சந்தர்ப்பம்

ஜப்பானில் பராமரிப்பு சேவை பிரிவில் 1000 க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் அடுத்த வருடத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானில் க்ளோபல் ட்ரஸ்ட் நெட்வொர்க் Global Trust Network நிறுவனத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் உடன்பட்டுள்ளது. இந்த வருடத்தில் விரைவாக 150 ஊழியர்களை இணைத்துக் … Read more

பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் உலக குடியிருப்பு தின நிகழ்வு

உலக குடியிருப்பு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு பிரதான வைபவம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர்ப்புற குடியேற்ற மேம்பாட்டு திணைக்களத்தினால் இது தொடர்பான நிகழ்வுகள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டன. யாரையும் எங்கும் பாதுகாப்பதே இவ்வருடத்தின் தொனிப்பொருள் என நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் … Read more

ஐக்கிய நாடுகள் பேரவையின் புதிய தீர்மானம்! இலங்கையின் அரசியல் தலைமையை ஆட்டிப்படைக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்றி, அக்டோபர் 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன. அரசியல் தலைமை வெளிவரும் விடயங்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்கால தீர்மானம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறித்த தீர்மானம் செல்லுபடியாகும் என்பதால், … Read more

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான மூன்றாவது இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாடு

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக 2022 செத்தெம்பர் 23ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருளானது கடந்த ஆண்டினைப் போன்று ‘பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள்’ தொடர்பில் அமைந்திருந்தது. மாநாட்டினை ஆரம்பித்துவைத்த மத்திய வங்கி ஆளுநர் முனைவர். … Read more

மத்திய மலையக பிரதேசத்தில் கடும் மழை :நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

காசல்ட்ரீ மற்றும் மௌசாகல நீர்த்தேக்க பிரதேசங்களில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (03) அதிகாலை திறக்கப்பட்டுள்ளன. நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்தேக்கத்தில் நேற்று முதல் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். தற்பொழுது பெய்து வரும் கடும் மழையினால் காசல்ட்ரீ மற்றும் மௌசாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நீர்மட்டத்தை எட்டியிருப்பதாகவும் நீர்மட்டம் அதிகரித்ததை … Read more