இலங்கையில் ,மின்சார முச்சக்கரவண்டி

இலங்கையின் முன்னணி முச்சக்கர வண்டி விநியோகஸ்தரான தனியார் நிறுவனம் மின்சார முச்சக்கர வண்டியை (16) அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி – மினுவாங்கொட நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 11 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நம்பிக்கை மீறல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை நாளை (19ம் திகதி) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நான்கு நிதி மோசடி வழக்குகள் தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர் சிறையில் இருப்பதாக மினுவாங்கொடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு சந்தேக நபரை மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு 12, மெசஞ்சர் வீதியை … Read more

தமிழகத்தில் 21 ஆம் திகதி 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 34ஆவது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதல் தவணை, 2ஆவது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் … Read more

கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்திருப்பவர்களுக்கு…..

தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்கான, கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2022.08.22 முதல் 2022.08.26 வரை இணையவழியூடாக வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கடவுச்சீட்டு கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் அதனைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்த்துடன் இணைந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் விசேட நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பணியகத்தின் மாகாண அலுவலகங்கள் ஊடாக இம் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் … Read more

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமாயின் போட்டித்தன்மையுடைய  ஏற்றுமதி பொருளாதாரத்தை தவிர வேறு மாற்றுவழி இல்லை – தொழில் வல்லுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமாயின் போட்டித்தன்மையுடைய  ஏற்றுமதி பொருளாதாராத்தை தவிர வேறு மாற்றுவழி இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற “தொழில் வல்லுநர்கள் சங்கங்களின் சம்மேளனம் ஏற்பாடுசெய்த – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இன்று இந்த இடத்தில் தொழில் வல்லுநர்களுக்கு … Read more

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 10 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை, நாட்டை சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோர பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வட மத்திய கடற்படை கட்டளைக்கு … Read more

தூதுவர் , உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது நன்சான்றிதழ் பத்திரங்களை, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர். அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ( Paul Wesley Stephens) மற்றும் நேபாளத் தூதுவராக பாசூ தேவ் மிஷ்ரா (Bashu Dev Mishra) ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2022-08-17

RPL-2022 வெற்றிக்கிண்ணம் யங் சோல்ஜர்ஸ் வசமானது

பிறைந்துரைச்சேனை றோயல் விளையாட்டுக் கழகத்தின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட “றோயல் பிறீமியர் லீக் – 2022” – RPL – 2022 கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது. இச்சுற்றுத்தொடரில் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றியிருந்தன. சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் (YoungSoldiers SportsClub-Yssc) விளையாட்டுக்கழக அணியும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக அணியும் (ValarPirai-VP) மோதின. ஓட்டமாவடி அமீர் அலி வைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் … Read more

இலங்கை திரும்பும் கோட்டாபய! வெளியானது புதிய அறிவிப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1 இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் … Read more

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் பங்களிப்புடன் நேற்று(17) முதல் பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல்லை ஒரு கிலோ கிராம் 125 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல் 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 2,000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் 30,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை … Read more