ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் பதவி விலக தயார்: பிரதமர் தெரிவிப்பு

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறுவது போன்று ஆறு மாதங்களுக்குள் வீழ்ச்சிக்கண்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமென்றால், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (05) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரை ஆற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தற்போது காணப்படும் சவாலான பொருளாதாரத்தை ஒரே இரவில் மீட்டெடுக்க முடியாது எனவும் அதற்கு பல வருடங்கள் ஆகும் எனவும் … Read more

இராணுவத்தினரின் கருத்தை மறுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்தினரால் கோட்டையிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் என்ற காரணத்திற்காக காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டார்கள் என இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்த செய்தியை சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நிராகரித்துள்ளனர். அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் என்ற காரணத்திற்காக காலியில் … Read more

அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் வழங்கப்படும்

IOC நிறுவனம் திருகோணமலையில் உள்ள எரிபொருள் வளாகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் வளாகத்திற்கு 7,500 மெட்ரிக் டொன் டீசலை அனுப்பியுள்ளது. இது அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதற்காகும். மேலும், இன்று முத்துராஜவெல எரிபொருள் வளாகத்தில் இருந்தும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பல பவுசர்களில் டீசல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பேருந்து சாரதியை தாக்கிய கடற்படை அதிகாரி

எரிபொருள் வரிசையில் இருந்த தனியார் பேருந்து சாரதி ஒருவரை, கடற்படை அதிகாரி தாக்கியதில் சாரதி காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி தெவட்ட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த போது இந்த தாக்குதல் நடந்ததாக சாரதி முறைப்பாடு செய்துள்ளார் என காலி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனக்கூறிய கடற்படை அதிகாரி பேருந்துக்கு டீசலை பெற்றுக்கொள்ள வரிசையில் இருந்த போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்த கடற்படை அதிகாரி … Read more

மட்டு மாவட்டத்தில் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் அரச அதிபரால் ஆரம்பம்

சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரனின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய இக்கட்டான கால கட்டத்தில் பயிர் செய்கையை மேற்கொண்டு ,உணவு பற்றாக்குறையை ஓரளவுக்கு தீர்த்துக் கொள்வதற்கான செயற்திட்டமாகவே இது கருதப்படுகின்றது. மிக முக்கியமாக மரவள்ளி, வற்றாளை, கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களை நடுவதன் மூலம் நம் அன்றாட தேவையினை ஓரளவேனும் தீர்ப்பதற்கு இது வழி சமைக்கும். இவ்வேலைத்திட்டம் 05 … Read more

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  அதன்படி எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வது எமக்கு சவாலான ஒரு விடயமாக மாறியுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. எரிபொருள் சுத்திகரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை விற்பனை செய்யவும் … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது தொடர்பான சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து 2022 ஜூலை 04ஆந் திகதி நடைபெற்ற சந்திப்பில், நாட்டின் தற்போதைய சூழலில் இன்றியமையாத வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் உள்ள இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்படக்கூடிய வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் … Read more

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி அறிவிப்பு

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 355.95 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 367.29 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 429.06 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது 446.34 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் குவைத் தினாரின் பெறுமதியானது 1172.54 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் … Read more

முச்சக்கரவண்டியில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை! பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் இப்போது  முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முச்சக்கர வண்டி சாரதிகள் பலர்  பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடியில் ஈடுபடும் சாரதிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னிச்சையாக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதிலிருந்து விலகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். சில முச்சக்கர வண்டி சாரதிகள் பயணிகளிடம் மோசடியாக பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி … Read more

முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்! வழங்கப்பட்டது அமைச்சரவை அனுமதி

கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பின்னர் ஏற்பட்ட கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் மோசமடைந்து வருவதுடன் பொதுவாக அனைத்து துறைகள் மீதும் நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்: தீர்மானத்தை … Read more