ஹிருணிக்கா கைது செய்யப்பட்டதன் எதிரொலி! கொழும்பு கோட்டை பகுதியில் களமிறங்கி நாடாளுமன்ற உறுப்பினர் – பதற்ற நிலை (Live)

கொழும்பு – கோட்டை பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுயில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  ஹிருணிக்கா கைது சிறிது நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.  இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் அங்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  Source link

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

புதிய இணைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தாம் அவ்விடம் வரும் வரை பாதுகாப்பு பிரிவினர் யாரும் அறிந்திருக்கவில்லையென கூறியுள்ளார்.   இந்நிலையில் திடீரென ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலில் முளைத்த ஹிருணிக்காவைக் கண்டதும் ஜனாதிபதி மாளிகையின் வாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.  எனினும் ஹிருணிக்கா தரப்பினர், ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளில் அர்ச்சனை செய்தவண்ணம் மாளிகையின் பிரதான … Read more

வலி நிவாரணி மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபர் கைது

வலி நிவாரணி மருந்தாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபரொருவர் நேற்று முன்தினம் (04) கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புட்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து Pregazime 150mg வகையிலான 530 வலி நிவாரண மாத்திரைகள், Pregabalin 150mg வகையிலான 190 வலி … Read more

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மின்சார தடை! கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள இரு பொறியியலாளர்கள்

கடந்த ஜூன் 9ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் இரண்டு பொறியியலாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொறியியலாளர்கள் தரப்பில் இருந்து இன்னும் கருத்துக்கள் வெளியாகவில்லை என தெரியவருகிறது. இந்த இருவரும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார். கட்டாய விடுப்பு இதன்படி, மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு துணை பொது மேலாளர் மற்றும் கணினி கட்டுப்பாட்டு … Read more

கோப் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை

கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தெரிவித்தார். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் விசேட கூட்டம் நேற்று (04) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கோப் குழு உறுப்பினர்கள் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் தொடர்பில் குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. … Read more

ஓமான் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று முன்தினம் (04) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். எரிபொருள், எரிவாயு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஓமன் தூதுவர் தெரிவித்தார். அத்துடன், இலங்கை – ஓமன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை … Read more

மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம்

மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சரையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இதற்கான இணக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  யோசனை சமர்ப்பிப்பு இந்த யோசனையை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.  ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு விமான நிலையம் உள்ளூர் விமான சேவைகளை மேற்கொள்வதற்கான தளமாக மாற்றி அமைக்கப்பட்டது. இலங்கை விமான படையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இந்த விமான தளத்தை உள்ளூர் சேவகளுக்காக … Read more

டோக்கியோ இலங்கைத் தூதரகத்தில் சிலோன் தேயிலை கருத்தரங்கு

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான் தேயிலை சங்கத்தால் 2022 ஜூன் 25ஆந் திகதி தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலோன் தேயிலை பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. ஜப்பானிய நுகர்வோர் மத்தியில் சிலோன் தேயிலையை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 35 க்கும் மேற்பட்ட ஜப்பானிய தேயிலைப் பிரியர்கள் கலந்து கொண்டனர். தூதரகத்தின் பொறுப்பதிகாரி சேசத் தம்புகல தனது உரையில் சிலோன் தேயிலையின் தனித்தன்மைகள், பிராந்திய வகைகள் மற்றும் தேயிலைப் பாவனையின் ஆரோக்கிய … Read more

நடக்க முடியாதவர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டதால் நெருக்கடி – மைத்திரி ஆதங்கம்

பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அவர்கள் எதிர்பார்க்கும் உலகை சென்றடைய பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “நாடு மிகவும் மோசமான முறையில் நெருக்கடி நிலையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் நாடு எந்த திசையில் பயணிக்கும் என்பது நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு … Read more