'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை – தயாரிப்பாளர் டிவிவி தனய்யா

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஆஸ்கர் விருதுக்காக புரமோஷன் செய்வதற்கு ராஜமவுலி சுமார் 80 கோடி வரை செலவு செய்தார். விழாவில் கலந்து கொள்ள 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் கலந்து கொண்டார் என்ற செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் படத்தின் … Read more

ஹீரோ ஆனார் முரளியின் 2வது மகன்

சென்னை: மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முரளியின் மூத்த மகன் அதர்வா, தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது தம்பி ஆகாஷ் முரளி, மாஸ்டர் …

பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? – மஞ்சு வாரியர்

இந்தாண்டு துவக்கத்தில் ‛துணிவு' என்கிற படத்தின் மூலம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதற்கு அடுத்ததாக மலையாளத்தில் தற்போது அவர் நடித்துள்ள வெள்ளரி பட்டணம் என்கிற படம் வரும் மார்ச் 24 அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஒரு கிராமத்து பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்தபோதுதான் தனது இரு சக்கர வாகன உரிமத்தை … Read more

பத்து தல படத்தில் கவர்ச்சி நடனமாடிய சாயிஷா

சென்னை: பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் சாயிஷா.  வனமகன், கஜினிகாந்த், டெடி, காப்பான் படங்களில் நடித்தவர் சாயிஷா. இவர் இந்தியில் அஜய் தேவ்கனுடன் ஷிவாய் படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும்போது …

சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு?

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இவருக்கும் ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் சில நாட்களாகவே நிஹாரிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை … Read more

மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி

சென்னை: மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.  பிசாசு-2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா, பூர்ணா ஆகியோருடன் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் …

130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானி ஜோடியாக அவர் நடித்துள்ள படம் 'தசரா'. இந்த மாதம் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. 'தசரா' படம் கீர்த்தியின் மனதிற்கு நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளதாம். படப்பிடிப்பு முடிந்த அன்று குழுவை விட்டுப் பிரிவதை நினைத்து மிகவும் வருந்தினாராம். வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தனது மனதைக் கவர்ந்த படம் கதாபாத்திரம் என்பதால் படத்தில் பணியாற்றிய 130 … Read more

பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மிஸ்ஸஸ் சட்டர்ஜி வெசஸ் நார்வே. இந்த படத்தில் ஒரு பெங்காலி தாய், நார்வே நாட்டில் கணவனுடன் வசித்து வரும் நிலையில் தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி அவரிடமிருந்து குழந்தைகளை பறித்து காப்பகத்தில் வைக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் உதவியோடு சட்டப் போராட்டம் நடத்தி எப்படி அந்த தாய் தனது குழந்தைகளை மீட்கிறார் என்பது தான் படத்தின் கதை. … Read more

'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார்

பிரபல மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணா(54), உடல்நலக்குறைவால் கோவையில் காலமானார். சின்னத்திரை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் குணா. கோவையை சேர்ந்த இவர் கோவை குணா என்றே அழைக்கப்பட்டார். சின்னத்திரை மட்டுமல்லாது ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றவர்களின் குரலையும், அவர்களது உடல் மேனரிசத்தையும் அப்படியே வெளிப்படுத்தும் திறமைப்படைத்தவர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வணங்கான்?

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட படம் வணங்கான். இந்த படத்தை சூர்யா தயாரித்து, அவரே நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று அவரும் நடித்து வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக பாலா அறிவித்தார். தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் பாலா. இத்திரைப்படத்திற்காக கேரளாவில் இருந்து சில துணை நடிகைகளை அழைத்து வந்துள்ளார் ஜிதின் என்கிற ஒருங்கிணைப்பாளர். … Read more