TVK: கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அளித்த தவெக; வங்கியில் நேரடி டெபாசிட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அன்றிரவே இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்த முதல்வர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்திருந்தார். கரூர் துயரம் மேலும், அன்றிரவே எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்த விஜய் அடுத்த நாள் காலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு … Read more

தீபாவளி அன்று ஞாயிறு அட்டவணை படி மின்சார ரெயில்கள் இயக்கம்!

சென்னை: தீபாவளியன்று (திங்கட்கிழமை)  ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 21ந்தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி, அன்றைய தினமும், அடுத்த நாளும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில்,  21ந்தேதேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  … Read more

சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி, தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் வரும் 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில், மாளிகைபுரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று நடைபெற்றது. குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாளிகைபுரம் … Read more

சிறுதொழில் பிசினஸ்மேன்களே… நிதி நிர்வாகம் செய்வதில் குழப்பமா? கவலை வேண்டாம்! இதைப் படியுங்கள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான மிகப் பெரிய பிரச்னையே, அவர்கள்தான் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும். இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்? யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்? யாருக்குப் பணம் தரவேண்டும்? இது மாதிரி ஒரு நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSMEகள் இருக்கிறார்கள். இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்? யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க … Read more

தமிழ்நாட்டில் 22, 23ந்தேதிகளில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் தகவல்

சென்னை: வரும் 22, 23ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 22, 23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். சென்னையில் மிக கனமழைக்கு … Read more

குஜராத்: சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி நிதி ஒதுக்கிய முதல்-மந்திரி

காந்திநகர், குஜராத்தில் சாலைகள் மற்றும் கட்டிட துறைகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 124 திட்ட பணிகள் நடைபெறுவதற்காக முதல்-மந்திரி புபேந்திரா பட்டேல் ரூ.7,737 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் எள்ற தொலைநோக்கு பார்வைக்கான இலக்கை நிறைவேற்றுவதற்காக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒருங்கிணைந்த மற்றும் சிறந்த முறையிலான சாலை உட்கட்டமைப்பு நெட்வொர்க்கை குஜராத்தில் கட்டமைப்பதற்காகவும், வளர்ச்சியடைந்த குஜராத் என்பதன் வழியே எளிமையான போக்குவரத்து வசதியை முதல்-மந்திரி உறுதி செய்து … Read more

Insta Influencer-ஐ ஏமாத்திய ஸ்கேம்மர்கள்! புஸ் ஆன பட்டாசு புரமோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகி இருந்தார். பாலாஜி மற்றும் அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோரின் காமெடி வீடியோக்களைப் பார்த்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சுமார் 1.15 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பாலாஜியைத் தொடர்பு கொண்ட ஒருவர், “பாண்டியன் கிராக்கர்ஸ்” பட்டாசு கடையின் தீபாவளி விளம்பரத்திற்காக ப்ரமோஷன் வீடியோ செய்யச் சொல்லிக் கேட்டுள்ளார். அதற்காக ₹35,000 தருவதாகக் … Read more

“2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" – டிடிவி தினகரன் சந்தேகம்

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க அந்தக் கூட்டணிக்குள் வந்ததும் எடப்பாடி பழனிசாமியை 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிராக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போதுவரை இந்தக் கூட்டணியில் இணையப்போகிறார் என்பது பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை. விஜய் இவ்வாறிருக்க, கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.க கூட்டணியில் இணையப்போவதாக ஒருபக்கம் … Read more

கரூர் துயர சம்பவம் குறித்து நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலர் வரதராஜனுக்கு ஜாமின் மறுப்பு…

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெக தலைவர் விஜய் விமர்சித்தை,  பிரபல யுடியூபரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான   வரதராஜன் விமர்சித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கடந்த 7ந்தேதி கைது … Read more