மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில்  நடைபெற்றுள்ள  சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும்,   தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம்  என உயர்நீதிமனற்ம் மதுரை கிளை பச்சைக்கொடி காட்டி உள்ளது. மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது.  மாநகராட்சி மேயராக  திமுகவைச் சேர்ந்த இந்திராணி இருந்து வருகிறார். இவரது கணவரின் மேற்பார்வையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150 கோடி ரூபாய்க்கு சொத்து வரி ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.   தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி … Read more

TVK மதுரை மாநாடு: "தவெக யாருடன் கூட்டணி என்ற கேள்விகள் வரும்; அதற்கு…" – சஸ்பென்ஸ் வைத்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது. TVK மதுரை மாநாடு இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய விஜய், “1967, 1977-ல் தமிழக அரசியலில் நடந்த … Read more

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்… ஒருவர் பலி 15 பேர் படுகாயம்…

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. லிவிவ் நகர் மீது நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 15 பேர் படுகாயமடைந்ததாக உக்ரைன் கூறியுள்ளது. கடந்த வார இறுதியில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவராகளைச் … Read more

TVK மதுரை மாநாடு:“தென் தமிழ்நாட்டில் கூட்டம் வருமா எனக் கேட்டார்கள்; ஆனால் இப்போது…" – ஆனந்த் உரை

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது. தவெக தலைவர் விஜய் இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், “மாபெரும் அரசியல் … Read more

தூய்மைப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டாலும், அவர்கள் வாங்கிய சம்பளத்தை குறைக்க கூடாது! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும்  சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு  அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம்,  தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும் சம்பளத்தில் எத்த குறைப்பும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பல்வேறு அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்து கழகங்களிலும் ஒப்பந்த முறையில் பணி நியமனம் மற்றும், தற்போதைய மின்சார … Read more

TVK மதுரை மாநாடு: "வேலை இல்லாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்" – தவெக தொண்டர்களைச் சீண்டிய சீமான்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி வருகிறார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் விஜய். அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தவெக: தொடங்குகிறது பிரம்மாண்ட மாநாடு – தயார் நிலையில் திடல்! அப்போது, “தெரு நாய்கள் … Read more

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! 26ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படஉ ள்ளது. இந்த விரிவாக்கத்தை வரும் 26தேதி (ஆகஸ்டு 26, 2025)  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம்,  மேலும்,  3.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.  கடந்த … Read more

பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள்.. வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமானந்த குப்தா, ஒரு இளம்பெண் மூலமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து உள்ளார். அந்த பெண்ணுடன் இணைந்து, தனது சொந்த பெயரில் 18 புகார்களையும், பெண் மூலம் 11 புகார்களையும் பதிவு செய்தார். இந்த பொய் புகார்களில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அடங்கும். இந்த புகார்கள் … Read more

Shruti Haasan: "இது எனது தனிப்பட்ட விருப்பம்" – பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்கள் குறித்து ஸ்ருதி ஹாசன்

நடிகைகள் சிலர் தங்களது தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்வது வழக்கமான ஒரு விஷயம்தான். அப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் நடிகைகள் விமர்சனங்களுக்கு ஆளாவதும் உண்டு. ஸ்ருதி ஹாசன் அந்தவகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து ட்ரோல்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தார். இந்நிலையில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ இந்தியப் பதிப்பகத்திற்கு ஸ்ருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார். அதில் பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான ட்ரோல்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “என்னுடைய … Read more

சோனியா, ராகுல், கார்கே முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி…

டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள  துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா  மற்றும் கார்கே முன்னிலையில் தனது  வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,  கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை  திடீடரென ராஜினாமா செய்தார். இதையடுத்து  நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   அதன்படி,  குடியரசு … Read more