போலந்து: 15 வயதில் மகளைப் பூட்டி வைத்த பெற்றோர்; 42 வயதில் காவலர்களால் மீட்கப்பட்டது எப்படி?

போலந்து நாட்டில் 15 வயது மகளை, பெற்றோர் 27 ஆண்டுகளாக ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நடக்கக் கூட முடியாத நிலையில் 42 வயதில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார். போலந்தின் ஸ்விடோச்லோவிஸ் நகரில்தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரேலா என்ற 42 வயது பெண், அவரது பெற்றோரால் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 15 வயதில் கடைசியாக வெளியில் காணப்பட்ட … Read more

வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல்! சென்னை காவல்துறையை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்…

சென்னை: வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல்  நடத்திய விவகாரத்தில்  சென்னை காவல்துறைமீது உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது.  காவல்துறையினன் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், யாரை திருப்தி செய்ய காவல்துறை வேலை செய்கிறது என்று கேட்டதுடன், தாக்குதலுக்கு ஆளானவர்மீது எப்படி வழக்கு பதியப்பட்டது என கேள்வி எழுப்பியது. சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் அருகே அக்டோபர்  7ஆம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் சென்ற  கார் மோதியது. இதையடுத்து வண்டியை … Read more

Diwali Leave: “அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" – தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், அக்டோபர் 21-ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குப் பொது விடுமுறை அறிவித்து அதற்குப் பதில் அக்டோபர் 25-ம் தேதி வேலைநாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது … Read more

24 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை! பேரவையில் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி…

 சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த  விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட  ஆய்வு செய்யவில்லை என  பேரவையில் எடப்பாடி பழனிச்சாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டு, மத்தியப்பிரதேசத்தில் 24 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்குசீல் வைக்கப்பட்டு, அந்த மருந்துகளும் … Read more

ஆணவப் படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர்  ஸ்டாலின் கூறினார். மேலும் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின்,  சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக   உரையாற்றி வருகிறார்.  அப்போது, சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

கேரளா: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – குடும்பத்தினருக்கு கவர்னர் பாராட்டு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மலையங்கிலு பகுதியை சேர்ந்த இளைஞர் அமல் பாபு (வயது 25). இவர் கடந்த 12ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமல் பாபு படுகாயமடைந்தனர். இதையடுத்து அமல் பாபுவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அமல் பாபு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, … Read more

சென்னையில் நடக்கப் போகும் மாபெரும் 'விண்டெர்ஜி இந்தியா 2025' மாநாடு!

காற்றாலை எரிசக்தித் துறையின் சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டின் 7-வது ஆண்டு நிகழ்வு (Windergy India 2025) சென்னையில் வரும் அக்டோபர் 29–31 ஆகிய நாள்களில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை இந்திய விண்ட் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் PDA Ventures பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். இந்த மாநாட்டை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ப்ரகலாத் ஜோஷி மற்றும் ஒன்றிய அமைச்சர் ஸ்ரீபாத் … Read more

“எதிர்கால மருத்துவம் 2.0”: சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு  சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சார்பில் மருத்துவத்தின் எதிர்காலம் எனும் தலைப்பில் (Future of Medicine) “எதிர்கால மருத்துவம் 2.0” இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாடு தொடங்கி வைத்து, மின் இதழை வெளியிட்டு, துணைவேந்தர் மரு.நாராயணசாமி … Read more

எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி, எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி பதர் அப்துல்லாதி. இவர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியா – எகிப்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடு உறவு, வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பதர் அப்துல்லாதி பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது , காசாவில் போர் நிறுத்தம், காசா அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றிய … Read more

குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு' இளம் துணை முதல்வர் – புதிய அமைச்சரவை!

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக முதலமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் நேற்றையதினம் (அக்டோபர் 16 – வியாழன்) ராஜினாமா செய்தனர். கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா மற்றும் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி ஆகிய நான்கு அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாமல் அவர்கள் … Read more