காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலை கொண்டிருக்கும் வரை மழை தொடரும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப ஜான் தெரிவித்து உள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பரப்பில் நிலை கொண்டிருக்கும் வரை இப்படி மழை பெய்து கொண்டே இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். வலுவிழந்த டிட்வா புயல், கடந்த 6 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை அருகே 35 கி.மீ தூரத்தில் நிலை … Read more

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு இணைப்பு கட்டாயம்

புதுடெல்லி, சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து குறுஞ்செய்தி செயலிகளும் இனி சிம் கார்டுடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. செயலியை பயன்படுத்தும் சாதனத்தில், கணக்கை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட அதே சிம் கார்டு இருந்தால்தான் தொடர்ந்து சேவையை பெற முடியும். சிம் கார்டு இல்லாவிட்டால், சேவை முடக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் … Read more

Doctor Vikatan: `அடிக்கடி முடியை வெட்டிவிட்டால்தான், தலைமுடி ஆரோக்கியமாக வளரும்' என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழி, மாதம் ஒருமுறை தானாகவே தன் முடியின் நுனிகளை வெட்டிவிடுவாள். அப்படி வெட்டினால்தான் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை. வெட்ட, வெட்ட முடி வளர்ச்சி அதிகரிக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கீதா அஷோக் முடியை அடிக்கடி வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை, குறைந்தபட்சம் அரை அங்குலம் அளவுக்காவது முடியின் நுனியை ட்ரிம் (Trim) … Read more

‘மக்கள் மாளிகை’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது தமிழ்நாடு ஆளுநர் மாளிகை!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அது லோக் வன்  ‘மக்கள் மாளிகை’ என பெயர் மாற்றம் பெற்றது செய்யப்பட்டு உள்ளதாக  ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, ‘மக்கள் மாளிகை தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த பெயர் மாற்றம்,  இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் … Read more

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம், கேரளாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வெளிநாடுகளில் நிதி திரட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்குச்சந்தை மூலம் நிதி திரட்டுவதற்காக ரூ.2 ஆயிரத்து 672 கோடிக்கான ‘மசாலா’ கடன் பத்திரத்தை வெளியிட்டது. இந்த நிதியில் ரூ.466.91 கோடி முறைகேடாக நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் … Read more

பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பல் தூரிகைகளை (டூத் பிரஷ்) கழிவறையில் அல்லது அதனருகில் உள்ள சுவரில் வைப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? வீடுகளில் நாம் பயன்படுத்திவிட்டு வைக்கும் டூத் பிரஷ்களை கழிவறைகளிலோ அல்லது அதன் பக்கவாட்டு சுவர்களில் வைப்பதோ சுகாதாரமற்றது என்கிறது அறிவியல் முடிவுகள். மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டுக்குப் பிறகு மூடியை மூடாது, கழிவுகளை அகற்ற அதிக அழுத்தத்தில் வெளிவரும் நீரால், … Read more

தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் 103 படகுகள் உடன்  22ஆயிரம் ஊழியர்களை சென்னை மாநகராட்சி  களமிறங்கி இருந்தாலும், ஒருபுறம் மழைநீர் வெளியேற்றப்பட மற்றொருபுரம் இருந்து மீண்டும் மழைநீர் வந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர். இந்த நிலையில்,   தொடரும் மழை மற்றும் அதனால் மழைநீர் தேங்கி வருவதால்,  … Read more

மெட்ரோ ரயில் பணிக்காக வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை:  மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல்  கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் … Read more

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது,  புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல  வழக்கறிஞருமான  அபிசேங் மனு சிங்வி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு … Read more