ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ரூ.3,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். ஸ்கூட்டர் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உலக அளவில் அதிகரித்திருப்பதும், அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இறக்குமதி செலவை அதிகரிப்புடன், முக்கிய எலக்ட்ரானிக் உதிரிபாகங்களின் விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளதால் உயர்வை தவிர்க்க இயலவில்லை என தெரிவிக்கப்படுள்ளது. மேலும் டிசம்பர் … Read more

ஊட்டி: யானை – மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" – வனத்துறை நம்பிக்கை

இந்திய அளவில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது பெரும்பாலான மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பணப்பயிர்களான தேயிலை, காபி தோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில் தொடங்கி தற்போதைய வளர்ச்சிப் பணிகள் வரை யானைகளின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றன. ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு இதன் துயர்விளைவுகளை அப்பாவி யானைகளும் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடிகள் … Read more

‘காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது’ – கிரண் ரிஜிஜு

ஜெய்ப்பூர், காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோதமாக ஊடுருவி இந்தியாவில் வசித்து வருபவர்களை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை, வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. … Read more

‘சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சகோதரர்கள் போல் பணியாற்றி வருகின்றனர்’ – சச்சின் பைலட்

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆட்சிக்காலத்தில் பாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2.5 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி … Read more

கேரளா: பத்தனம்திட்டாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்த நிலையில், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 1 More update தினத்தந்தி … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: கனிமொழி தலைமையில் கூடியது திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு…

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  திமுக தேர்தல் அறிக்கை  தயாரிப்பு குழு, திமுக எம்.பி.  கனிமொழி தலைமையில் கூடியது. இதில் தேர்தல் அறிக்கை, அதில் இடம்பெற வேண்டிய ஷரத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவை திமுக தலைமை கடநத வாரம் அறிவித்தது. அதன்படி, கடந்த தேர்தலில்போது தேர்தல் அறிக்கை தயாரித்தத கட்சியின்  துணைப் பொதுச் செயலா் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை … Read more

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தைகள் நிறைவு

புதுடெல்லி, இந்தியா-நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி அடுத்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் தொலைபேசியில் உரையாடினார். இதைத் தொடர்ந்து, இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததக் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த … Read more

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட டிசம்பர் 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி…

நெல்லை: தமிழகத்தின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில்  நெல்லையில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியனம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக, நெல்லயில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 20ந்தேதிஅன்று  திறந்து வைத்தார். தமிழகத்தின் 3, 200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன்,  அருங்காட்சியக … Read more