“உழவுத் தொழில் துன்பம் மிகுந்தது: ஆனாலும், அதுதான் தலையானது…" வைரலாகும் நம்மாழ்வார் கடிதம்!

மானுடம் நிலைத்திருக்க வையத்து புதுமை செய்வோம். எனது நெஞ்சிற்கினிய உள்ளங்களுக்கு இது ஒரு திறந்த அஞ்சல் உங்களுக்குள்ள நேரப்பற்றாக்குறை நான் அறிந்ததே. உடம்பைச் சுற்றி மொல்லை இருக்குது. ஒன்னுக்கு ஆயிரமா என்று எரியோட்டுத் தாத்தா பாடியது நினைவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பல வேலைகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டியுள்ளது. நீண்டதொரு கடிதத்தின் வழியாக உங்கள் நெஞ்சத்தைத் தொட்டுப் பார்க்க விரும்புகிறேன். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். படித்துவிட்டு … Read more

அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் – கங்கனாவை அறைந்த பெண் காவலர்

சண்டிகார், நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றிபெற்றார். அவர் டெல்லி செல்வத்ற்காக நேற்றுமுன் தினம் பிற்பகல் சண்டிகர் விமான நிலையம் வந்தார். அப்போது, விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் … Read more

பாஜகவை புறக்கணித்த பெரும்பான்மை இந்துக்கள் : திருமாவளவன்

சென்னை விடுதலை சிறுட்தைகள கட்சி தலைவர் திருமாவளவன் பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவை புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்களவைக்கான பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலுக்கும் சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது. இத்தேர்தல், “சனாதன – கார்ப்பரேட்” கொள்ளைக் கும்பலுக்கு எதிராக இந்திய மக்கள் … Read more

நாளை மறுநாள் இரவு 7.15 மணிக்கு பிரதமருக்கு பதவி பிரமாணம் – ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

புதுடெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி … Read more

ஆவின் பால் விநியோகம் முடங்கும் அபாயம் : சென்னை மக்கள் அச்சம்

சென்னை ஆவின் பால் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளன்ர். தமிழக தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்கள் ஆவின் பாலையே அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.  ஆவின் பால் சென்னையில் உள்ள அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால்பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் பாக்கெட்டுகள் … Read more

'தேர்தல் ஆணையம் சுதந்திரமானது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும்' – சிவராஜ் சிங் சவுகான்

போபால், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், நாடாளுமன்ற தேர்தலில் விதிஷா மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 8,21,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;- “நமது தேர்தல் ஆணையம் சுதந்திரமானது மற்றும் நடுநிலையானது என்பது உலகத்திற்கே தெரியும். எதிர்கட்சிகளுக்கும் இது … Read more

ஓடும் பேருந்தில் கீழே விழ இருந்த பயணியை காப்பாற்ற்ய நடத்துனர்

திருச்சூர் கேரள பேருந்தில் இருந்து கீழே விழ இருந்த பயணியை நடத்துனர் மின்னல் வேகத்தில் காப்பாற்றி உள்ளார். கேரளாவில் பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பஸ்சில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பேருந்தில் ஏறிய வாலிபர் ஒருவர் உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு … Read more

நடிகை வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை கனிமொழியிடம் நேரில் வழங்கிய ராதிகா

சென்னை நடிகை வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை கனிமொழியிடம் நேரில் சந்தித்து ராதிகா வழங்கி உள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். வரட்சுமிக்கு இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் புகழை பெற்றுத்தந்தது/ பிறகு விக்ரம் வேதா, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி குணசித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து இருந்தார். கடந்த மார்ச் மாதம் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், … Read more

வெ(ற்)றிக் கொண்டாட்டம்; வெட்டப்பட்ட ஆடுகள்… முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இதுதானா உங்கள் முற்போக்கு?

இந்தத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு நடுவே நடந்திருக்கும் ஒரு கொடுமை… கொதிக்க வைக்கிறது. அதிலும் அந்த வீடியோபலரையும் அதிர வைத்திருக்கிறது… பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. கூடவே, குழந்தைகளையும் நிற்க வைத்துக் கொண்டு அவர்கள் நடத்தியிருக்கும் கொடுமை… உச்சபட்ச கொடுமை! தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விவசாயம் செய்கிறார்… ஆடு வளர்க்கிறார் தன் சொந்த ஊரில். அதனால், அவரை ‘ஆடு அண்ணாமலை’ என்று சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினரும் எதிரிகளும் விமர்சித்து வந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் அவரும் பெரிதாக அலட்டிக் … Read more

உயர்நீதிமன்றம் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு நடத்த அனுமதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு நடத்த அனுமதி அளித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த … Read more