ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து துணை அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட தேவையான ஆதரவு அவருக்கு கிடைத்ததை அடுத்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்-பை எதிர்த்து களம்காண்கிறார். டிரம்ப்பை எதிர்த்து தனது பிரச்சாரத்தை துவங்க உள்ள கமலா ஹாரிஸ் அதற்கு முன் தனது துணை அதிபரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த வார இறுதியில் துணை அதிபரை வேட்பாளருக்கான நேர்காணலை அவர் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கென்டக்கி மாகாண ஆளுநர் … Read more

திருப்பத்தூர்: சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு… ஆபத்தை உணர்வார்களா?!

திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப வட்டம் அருகாமையில் அமைந்துள்ளது அந்த கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும்,சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்லும் அந்த சாலையின் மிக அருகில், தடுப்புச் சுவர் கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது அந்த கிணறு. இது குறித்து அப்பகுதியில் செல்பவர்களிடம் விசாரித்த போது, இந்த கிணறு சில மாதங்களுக்கு முன்பாக தோண்டப்பட்டது தெரிய வந்தது. கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் … Read more

நீலகிரியில் நிலச்சரிவு என்னும் வதந்தியை பரப்பாதீர் : ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி நீலகிரியில் வயநாட்டைப் போல் நிலச்சரிவு ஏற்ப்டும் என வதந்தி பர்ப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது குறைந்துள்ளது. கனமழை காரணமாக, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை மாற்றும் பணியில் மின்வாரியத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிக … Read more

திருமாவளவனே நேரில் வாங்க.. திடீரென பிடிவாரண்ட்டை ரத்து செய்த மயிலாடுதுறை நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாதத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஆகஸ்ட் 27 ம் தேதி நேரில் ஆஜராக அதிரடியாக Source Link

சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு; அடித்து ஆடும் எதிர்க்கட்சிகள் – சித்தராமையாவுக்கு நெருக்கடி?!

தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் ஆட்சியை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், ஆட்சியதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க., மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சித்தராமையா பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்திவருகிறது. எடியூரப்பாவுடன் விஜயேந்திரா சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தொடர்ந்து எழுப்பிவருகிறது. தற்போது, ‘மைசூரு நகர்ப்புற … Read more

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் நில நடுக்கம்

லஹால் ஸ்பிட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, நேற்றுறு காலை 9.45 மணிக்கு இமாசல பிரதேசத்தில் உள்ள லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கமாகும். நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக … Read more

ஆகஸ்ட் 14 வரை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து .

சென்னை ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, … Read more

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.   தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  இதில் சென்னையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுளது. இதற்கு மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். அமைச்ச்ர் நிதின் கட்கரி ”சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும்   ஏனெனில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மூன்று முக்கிய சாலை பணிகள் … Read more

முன்னாள் அமைச்சர்களை குட்கா வழக்கில் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை சிபிஐ நீதிமன்றம் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி ரமணா உள்ளிட்டோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. தமிழக்கத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக எழுந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  சிபிஐ மாதவ ராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் … Read more

'நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவ கல்வி வியாபாரமாக மாறியிருந்தது' – ஜே.பி.நட்டா

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நீட் தேர்வு தொடர்பான விவாதத்தின்போது மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பேசியதாவது;- “நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது, முதுகலை மருத்துவ படிப்புக்கான ஒரு இடம் 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கதிரியக்கவியல் போன்ற துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றால் அதற்கு 12 முதல் 13 கோடி ரூபாய் வரை ஆகும். நீட் தேர்வுக்கு முன்பு, மாணவர்கள் மருத்துவ தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் பயணம் செல்ல … Read more