மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி இன்று மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அதன்படி, இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதில் குறிப்பாக ‘சந்திரயான்-4’ திட்டத்தின் மூலம் இந்தியா மீண்டும் நிலவுக்கு செல்ல இருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் … Read more

கடும் வறட்சி, பசி.. யானைகளை கொன்று சாப்பிட வனத்துறை ஒப்புதல்.. ஜிம்பாப்வே அதிர்ச்சி

விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வசித்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் Source Link

Seeman: “உதயநிதி தெரிந்த கதைதான்; அடுத்து இன்பநிதி; இதுதான் கொடிய சனாதனம்” – சீமான் காட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு வெளிவரலாம் என்ற தகவலும், விஜய் பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியதும் இன்று தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “இன்னும் ஏன் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” எனப் பேசியிருந்தது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. இதையடுத்து இன்று அல்லது விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் … Read more

இன்று தொடங்கியது மகாளய பட்சம்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 தேதி வரை பித்ருகளை வழிபடுவதற்கான நாட்கள்.,..

சென்னை:  இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்  காலம்  வருடத்தில்  ஒருமுறை  விசேச நாட்களாகும்.  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களும் மகாளாய பட்சம் தினங்களாக அனுசரிக்கப்பட்டுகிறது.  இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. அதன்படி, மகாளய பட்சம்   இன்று … Read more

ஆந்திராவை அதிர வைத்த பாலியல் புகார்..ஜானி மாஸ்டருக்கு அடுத்தடுத்து சிக்கல்! இனி வேலை செய்ய முடியாதே!

அமராவதி: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் துறையில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஆந்திர திரையுலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் மீது எழுந்திருக்கும் பாலியல் புகார் பரபரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் Source Link

CID சகுந்தலா: "குணசித்திர நடிகையாக கோலோச்சியவர்" – கலங்கிய டி. ராஜேந்தர்

நாடகங்களில் அறிமுகமாகி, அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர், நேற்று (செப்டம்பர் 17ம் தேதி), தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். நடன கலைஞர், குணச்சித்திர நடிகை, பிறகு கதாநாயகி என பல ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் CID சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோருடன் பல … Read more

நாகை மீனவளக்கல்லூரி பட்டமளிப்பு விழா! ஆளுநர் பங்கேற்பு – அமைச்சர் புறக்கணிப்பு…

நாகை: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை  அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும்,  திமுக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் மாநில முதல்வரே இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரிவில்லை. மேலும், இதுபோன்ற மேற்குவங்க அரசு இயற்றிய தீர்மானத்துக்கு அதிகாரமில்லை  உச்சநீதிமன்றமும்  … Read more

ஒரே நாளில் மிரண்டு போன லெபனான்.. பேஜர் தாக்குதலுக்கு காரணமே இதுதான்! வெளியான முக்கிய தகவல்

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று, பாலஸ்தீன ஆதரவு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இப்படி இருக்கையில், இந்த தாக்குதலுக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாலஸ்தீன போர்: ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் Source Link

Wayanad: `ஒரு உடல் தகனம் செய்ய ரூ.75,000; உணவுக்கு ரூ.10 கோடி?' – அரசின் பேரிடர் கணக்கால் சர்ச்சை

வயநாடு துயரம் கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 400 பேர் மரணமடைந்துள்ளனர். காணாமல்போன பலரின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட உடல்களுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தியும் முழுமையாக கண்டறியப்படாத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் வயநாடு மீட்புப்பணி மற்றும் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான செலவு, மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கான உணவுச் … Read more

ராகுல் காந்திக்கு மிரட்டல்! முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்…

சென்னை:  ராகுல் காந்திக்கு பாஜக உள்பட  பல மட்டங்களில் இருந்து பகிரங்க மிரட்டல் வந்துள்ள நிலையில்,  நமது ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறியிருப்பதுடன், இந்த மிரட்டல் போக்கிற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சமீப காலமாக ராகுல்காந்தியின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பிரதமர் மோடியையும், இந்தியாவையும் தரக்குறைவாக பேசி வருவதாக அவர்மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவர் சந்தித்த நபர்கள் குறித்து … Read more