தலைப்பு செய்திகள்
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம்
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் … Read more
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் : சென்னையில் உற்பத்தி நிறைவு
சென்னை செனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தியை டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் நிறைவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடிமதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, … Read more
திருநெல்வேலியில் நில அதிrவு : மாவட்ட நிர்வாகம் விளக்கம்
திருநெல்வேலி திருநெல்வேலியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் விள்க்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அம்பாசமுத்திரம் பகுதியில் உணரப்பட்ட நிலஅதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் இந்திய தேசிய கடலியல் தகவல் சேவைகளுக்கான மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட நிர்வாகம், ”அம்பாசமுத்திரம் உள்ளிட்ட … Read more
வேள்பாரி: `உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது… படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள்' – இயக்குநர் ஷங்கர்
எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுத்தில் தொடராக வெளிவந்த நாவல், வீரயுக நாயகன் வேள்பாரி. இந்த நிலையில், இந்த நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் இயக்குநர் ஷங்கர். முன்னதாக இந்தப் படம் குறித்து உரையாற்றிய இயக்குநர் ஷங்கர், இயக்குநர் ஷங்கர் “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது வேள்பாரி நாவலை வாசித்து முடித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக திரைப்படமாக்குவது குறித்து பேசி முடிவு செய்திருக்கிறேன். விரைவில் … Read more
உ பி ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர் : காவல்துறையினர் விசாரணை
பிரேஸ்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இன்று காலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது பிரேம்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்தது. ஓட்டுநர் இதைக் கவனித்து உடனடியாக ரயிலை நிறுத்தி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் … Read more
ஆட்சியை பிடித்த “மூன்றெழுத்து மந்திரம்\"! வெறும் 3%ல் இருந்து 5 ஆண்டுகளில் அதிபராகவே ஆன அநுர குமார!
கொழும்பு: 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 3.1 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசநாயக்க, 2024 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. இலங்கையில் “ஏகேடி” எனும் மூன்றெழுத்து மந்திரம் வென்றுள்ளது. “தலைவன் யுகம் பொறக்குது.. மூணெழுத்து Source Link
நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : கெஜ்ரிவால்
டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. … Read more