இன்று அசாம் மாநிலத்தில் இணைய சேவை துண்டிப்பு

கவுகாத்தி இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணிவ்ரை அசாம் மாநிலத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட உள்ளது. இன்று அசாமில் மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. எனவே இந்த தேர்வு நடைபெறும் நேரமான காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அசாம் மாநில உள்துறை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் … Read more

உத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கீழே இறங்கி வர முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்தன. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். இதனால், ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் … Read more

நாட்டின் முதல் முன்பதிவில்லா 'வந்தே மெட்ரோ' சேவை: குஜராத்தில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத், பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் குஜராத் பயணத்தின் போது, நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவையை நாளை மறுநாள் (செப்டம்பர் 16-ந் தேதி) தொடங்கி வைக்க உள்ளார். இதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் – புஜ் இடையேயான வந்தே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரெயிலாக ‘வந்தே மெட்ரோ’ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக மேற்கு ரெயில்வே (அகமதாபாத் பிரிவு) மக்கள் தொடர்பு அதிகாரி … Read more

மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!

நெல்லை: கல்லூரி மாணவியை மது விருந்துக்கு மாணவியை அழைத்த நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர் தலைமறைவான  நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளி மதுபோதை கலாச்சாரம் ஊடுருவி உள்ள நிலையில் சமீப காலமாக பாலியல் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. வேலையே பயிரை மேய்வது போல, பள்ளி மாணாக்கர்களுக்கு குருவாக செயல்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளி மாணவிகளை மேயத்தொடங்கி உள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள … Read more

கொல்கத்தா பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தை? கல்லூரி முன்னாள் டீன், போலீஸ் அதிகாரியை தூக்கியது சிபிஐ!

கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்தது மற்றும் ஆதாரங்களை அழித்ததற்காக ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் Source Link

மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக 2 பெண்களை அடித்துக்கொன்ற கிராமத்தினர் – அதிர்ச்சி சம்பவம்

கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்கள் லோக்கி கிஷு, டோலி சோரன். இவர்கள் இருவரும் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக அந்த கிராம மக்கள் கருதினர். இதையடுத்து, நேற்று இரவு வீட்டில் இருந்த இருவரையும் கிராமத்தினர் 15க்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்துள்ளனர். பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில் கிராமத்தினர் சேர்ந்து இருவரையும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து … Read more

கோவை அன்னபூர்ணா ஓட்டல் ஓனரை புண்படுத்த வேண்டாம்! வானதி சீனிவாசன் வேண்டுகோள்…

கோவை: கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை யாரும் புண்படுத்த வேண்டாம் என வானசி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து விவாதித்தது சர்ச்சையான வீடியோ வைரலான நிலையில், பின்னர், அதற்காக அவர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரிய வீடியோவும்  வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தை, ஆளும் திமுகவினர் மற்றும் பாஜகவுக்கு எதிராக உள்ள ஊடகத்தினர் தங்களது இஸ்டம்போல திரித்து வீடியோவையும், செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர். … Read more

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. கடலூருக்கு ஷாக்.. உடனே களத்தில் இறங்கிய தமிழக அரசு!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க, வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில், Source Link

'அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறை வெற்றி பெறும்' – பிரதமர் மோடி

சண்டிகர், அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரியானா மாநிலம் குருஷேத்திரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. … Read more

`அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால்…’ – திருமா பதிவும் மதுரை கொடி கம்ப விவகாரமும்

‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி பின்பு நீக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலை சூடாக்கியுள்ள நிலையில் மதுரையில் விசிக-வின் கொடிக கம்பம் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி கம்ப விவகாரம்- போராட்டத்தில் விசிக-வினர் கொடி கம்பம் அகற்றப்பட்டதை எதிர்த்து விசிகவினர் போராட்டம் நடத்திய நிலையில் மதுரை வந்த திருமாவளன், ‘இதற்கு காரணம் மதுரை கலெக்டர்தான்’ என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார். கூட்டணியில் இருந்தாலும் முரண்பாடான விஷயங்களில் … Read more