விரைவில் தமிழக சுங்கச்சாவடிகள் முன்பு போராட்டம் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் தம்ழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்கள் 5 முதல் 7 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தேசிய … Read more

சேலம் மாவட்ட கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம்

சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே உள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை ஒன்று உலா வந்து அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயன்று வருகின்றனர்.  ஆனால் வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நேற்று … Read more

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளது. 2011 முதல் 2016 வரை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அவரது உதவியாளர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் மீதான விசாரணை 2015ம் ஆண்டு துவங்கிய நிலையில் 2021 ஜூலை மாதம் … Read more

ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி மனைவியிடம் டிஜிட்டல் முறையில் பணம் பறிப்பு; சைபர் க்ரைம் கும்பலுக்கு வலை

சென்னை தி.நகர் கண்ணதாசன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஸ்ரீபால். இவரின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). இவரை செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அந்த நபர், உங்களின் செல்போன் நம்பர் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் செல்போன் நம்பரின் இணைப்பு இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட … Read more

யூடியூபர் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்…

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கஞ்சா வைத்து இருந்ததாகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் … Read more

மின் கட்டண உயர்வு.. பொறுப்பற்ற நிர்வாகம்.. ஜம்மு காஷ்மீரில் வெகுண்டெழுந்து வாக்களித்த மக்கள்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதில் மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு என தேர்தல் ஆணையமே பெருமையாக கூறியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க நிறைய காரணங்கள் உள்ளன. ஜம்மு ஜகாஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி Source Link

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 65 நாடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்ற காரின் அறிமுக விபரம்

வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிசான் மேக்னைட் காம்பேக்ட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடிப்படையான மெக்கானிக்கல் மாற்றங்கள் மற்றும் எஞ்சின் தொடர்பான எந்தவொரு மாற்றங்களும் இருக்காது. மற்றபடி, டிசைன் மாற்றங்கள் கூடுதலான புதுப்பிக்கப்பட்ட பல்வேறு வசதிகள் மட்டும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மேக்னைட் முன்புறத்தில் புதிய கிரில் டிசைன், எல்இடி ஹெட்லைட் மற்றும் பம்பர் ஆகியவை புதுப்பிக்கப்பட … Read more

Sobhita Dhulipala: `மனதிற்கு நெருக்கமானது' நிச்சயதார்த்தம் குறித்து நெகிழ்ந்த சோபிதா துலிபாலா

இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சோபிதா துலி பாலா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனிடையே சில மாதங்களாக சோபிதா துலிபாலாவும், நாக சைதன்யாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரும் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அதனை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் அதிகாரப் பூர்வமாக அறிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். … Read more