தேனி: அதிமுக உட்கட்சிப் பிரச்னை; பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய நகரச் செயலாளர் – நடந்தது என்ன?

தேனி மாவட்டம், சின்னமனூர் அ.தி.மு.க நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38). இவர் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் நேரில் ஆய்வு செய்தார். சின்னமனூர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். பெட்ரோல் குண்டு பிச்சைக்கனி வீடு அருகே உள்ள வங்கி, கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரித்தனர். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது … Read more

கனமழை காரணமாக மோடியின் புனே பயணம் ரத்து

புனே மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்த் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த கனமழையால் மும்பை, புனே நகரங்களில் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரதமர் மோடி இன்று புனேவுக்கு பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று புனேவில் பிரதமர் மோடி புதிய வழித்தடத்தில் மெட்ரோ … Read more

மதுரை: அடைக்கப்பட்ட கால்வாய்… குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; கவனிக்குமா பேரூராட்சி?

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் கோகுல் நகர் தெருப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கழிவு நீர் கால்வாய் செல்லும் வழி அடைக்கப்பட்டிருப்பதால், கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்புவரை இத்தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய், தெருவைத் தாண்டி பக்கத்திலுள்ள ஒடைக்கு அருகில் திருப்பப்பட்டிருந்தது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. மதுரை – கோகுல் நகர் தெரு இந்த நிலத்தின் … Read more

இன்று புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்கு சந்தை

மும்பை’ இன்று இந்திய பங்குச் சந்தை ஒரு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பங்குச் சந்தை வணிகம் கடந்த சில நாட்களாக எழுச்சியுடனே காணப்படுகிறது. இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 211 புள்ளிகள் அதிகரித்து 26,216 ஆகவும் இருந்தது. சென்செக்ஸ் -ஸின் 45 ஆண்டு … Read more

மராட்டிய மாநிலத்தில் கனமழை; பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து

மும்பை, மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் மும்பை, புனே நகரங்களில் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, பிரதமர் மோடி இன்று புனேவுக்கு பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புனேவில் பிரதமர் மோடி இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாகவும், சுமார் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளர்ச்சி … Read more

தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா' | பகுதி 1

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..! `தாராவியின் கதை’ இந்தியா மட்டுமன்றி, ஆசியாவிலே அதிக அளவிலான குடிசைகள் எங்கு இருக்கிறது என்று கேட்டால், … Read more

43 பேரை பலி வாங்கிய பீகார் புனித நீராடும் பண்டிகை

சம்பாரன் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் கொண்டாடப்பட்ட பண்டிகையின்போது, தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். பிறகு குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த பண்டிகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், … Read more

காஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு

ஸ்ரீநகர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், நேற்று 2-வது கட்ட … Read more

'அடேங்கப்பா 11'ல காத்தாடி தான் பெரிய பிளேயர்! -Bala Saravanan |Lubber Pandhu| Harish Kalyan |Dinesh

இந்த உரையாடலில் நடிகர் பால சரவணன், “லப்பர் பந்து ” குழுவினருடனான தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவர் எப்படி  இந்தப்படத்தில் ஒரு பகுதியாக சேர்ந்தார். அவரது கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பின் போது குழுவுடன் பகிர்ந்து கொண்ட நகைச்சுவையான தருணங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அவரின் முழுபேட்டி இவ்வாறு பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பாலசரவணன். அவற்றை முழுமையாகக் காண லிங்கை க்ளிக் செய்யவும். Source link

காவல்துறை மரியாதையுடன் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்துறை மரியாதையுடன் எஸ்றா சற்குணத்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 22-ந் தேதி இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியாவின் (இ.சி.ஐ.) பேராயருமான 86 வயதாகும் எஸ்றா சற்குணம், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார்.. சென்னை வானகரத்தில் எஸ்றா சற்குணம் உடலுக்கு பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்றா சற்குணம் உடலுக்கு … Read more