தேனி நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமை? – புகாரும் விசாரணையில் நீடிக்கும் குழப்பமும்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவி, நேற்று காலை திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தான் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார். பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் ) அந்த புகாரில், `தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவியான நான், நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் … Read more

கிராம் ரூ.7ஆயிரம்: வரலாறு காணாத விலை உயர்வால் எட்டாக்கனியாகும் ‘தங்கம்’

சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலை இதுவரை  இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7ஆயிரம் ஆக இன்று உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி  உள்ளது. தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும்,  கடந்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். … Read more

இலங்கை நாடாளுமன்றம் இன்று இரவு கலைப்பு? டிசம்பரில் தேர்தல்? இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு!

கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தலைமையில் இன்று இடைக்கால அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் Source Link

நில முறைகேடு விவகாரம்: சித்தராமையா வழக்கில் இன்று தீர்ப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனு குறித்து விளக்கம் … Read more

Doctor Vikatan: மீன் முட்டைகளை எல்லோரும் சாப்பிடலாமா… அலர்ஜியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:  அசைவம் விற்கும் கடைகள் சிலவற்றில் மீன் முட்டைகள்  என்று விற்கிறார்களே, அவை ஆரோக்கியமானவையா? எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? மீன் முட்டைகள், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி  ரேச்சல் தீப்தி அடர்த்தியான ஊட்டச்சத்துகளைக் கொண்டது என்ற வகையில் மீன் முட்டை மிகவும் ஆரோக்கியமானது.  மீன் முட்டைகளில் அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.  மீன் முட்டைகளில் உள்ள சத்துகள் மீன் முட்டைகளை ஆங்கிலத்தில் … Read more

சென்னை, குமரி உள்பட பல மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

சென்னை: தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் தமிழ்நாட்டின் தலைநகர்  சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ராயப்பேட்டை, வண்ணார்பேட்டை, … Read more

Tirupati Laddu: திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் என புகார்..! வைரலான வீடியோ; தேவஸ்தானம் விசாரணை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே லட்டு பிரசாதம்தான் பிரதானம். ஆனால், சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் “திருப்பதி பிரசாத லட்டு செய்ய விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டது” என ஒய். ஆர். எஸ் கட்சி மீது குற்றம்சாட்டியது தெலுங்கு தேசக் கட்சி. இந்தக் குற்றச்சாட்டை பல வழிகளில் மறுத்த ஒய்.ஆர். எஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இறுதியில் பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று, ‘இந்தக் குழப்பத்துக்கு காரணமானவர்கள் மீது … Read more

தொடர்ந்து 191 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 19 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 191 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

நமக்குள்ளே… ஒருவேளை, அந்த வீடியோ வெளியாகாமல் இருந்தால்… 10 வயது குழந்தையின் கதி?!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றிய செய்திகள் வெளியாகும்போதெல்லாம், மக்கள் மனதில் அச்ச ரேகைகள் படர்கின்றன. அதைப் போக்க வேண்டிய பொறுப்பு, காவல்துறையுடையதே. ஆனால், சென்னை மாநகரக் காவல்துறையினர் ஒரு போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரையே தாக்கியிருப்பது, அச்ச ரேகைகளை அதிகப்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த 10 வயதுச் சிறுமியின் ஏழைத் தந்தையை, குற்றம் சுமத்தப்பட்ட பக்கத்து வீட்டு இளைஞரின் முன்னிலையிலேயே தாக்கியிருக்கிறார், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி. அதுகுறித்து சிறுமியின் … Read more

அரியானாவில் கார்கேவின் தேர்தல் பிரசாரம் ரத்தூ

அம்பாலா அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. . மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டஅரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக … Read more