லெபனானுடன் வெடிக்கும் போர்? இஸ்ரேலுக்காக பெரும் படையை அனுப்பிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் பதற்றம்

ஜெருசலேம்: காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் என்பது உச்சமடைந்துள்ளது. இதனால் விரைவில் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா தனது 50 ஆயிரம் படை வீரர்கள், 6 போர் விமானங்கள், 12 போர் கப்பல்களை இஸ்ரேலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இதனால் இஸ்ரேல் Source Link

"ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…" – பவன் கல்யாண் பதிவு

ஆந்திரா, ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஏழுகொண்டலவாடா..! மன்னிக்கவும்… புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம்… கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட போக்கின் விளைவாக தூய்மையற்றதாகிவிட்டது. விலங்கு எச்சங்களால் மாசுபட்டது. திறந்த மனங்கள் மட்டுமே இத்தகைய பாவத்திற்கு அடிபணிய முடியும். இந்தப் பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து இனத்தின் மீதான கறை. லட்டு பிரசாதத்தில் மிருக எச்சங்கள் இருந்ததை அறிந்த நொடியில் மனம் உடைந்தது. குற்ற உணர்வு … Read more

TVK: தவெக-வின் முதல் மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரம் – என்ன திட்டம் வைத்திருக்கிறார் விஜய்?

மாநாடு அறிவிப்பு! தமிழகத்தில் உச்ச சினிமா நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி மற்றும் பாடலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாட்டில் அறிவிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், மாநாட்டுத் தேதியும் அறிவித்திருக்கிறார் விஜய். முதல் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மாநாடு அறிவிப்பு மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி சார்பில் … Read more

சீக்கியர் குறித்து தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்த பாஜக : ராகுல் கண்டனம்

டெல்லி பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தினார். அப்போது ராகுல் காந்தி , “இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதையொட்டி […]

கொடைக்கானல் மலை கிராமத்தில் திடீரென 200 அடிக்கு பள்ளம்! எட்டி பார்த்தால்.. ஆனைமலையால் மக்கள் பீதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிளாவரை கிராமத்தில் திடீரென 200 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதனால் ஏற்பட்ட பள்ளம் என தெரியவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகிறார்கள். Source Link

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மல்லேஸ்வரா பகுதியில் வீராண பவன் பகுதியருகே வியாலிகாவல் என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த பகுதியருகே வசித்தவர்கள் மூக்கை பொத்தி கொண்டு சென்றனர். இதன்பின் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த குடியிருப்பின் உள்ளே இருந்த பிரிட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. அந்த உடல் 30 துண்டுகளாக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து போலீசார் … Read more

Simran: "எனக்குச் சுயமரியாதை முக்கியம்; இதோடு நிறுத்துங்கள்…" – வதந்திகளுக்கு நடிகை சிம்ரன் பதிலடி

90-களின் இறுதியில் கோலிவுட்டில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து சற்று விலகியிருந்த சிம்ரன், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறது. சிம்ரன் சமீபமாகச் சமூகவலைத்தளங்களில் சிம்ரன் பற்றிய வதந்திகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் … Read more

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே முன்னிலை

கொழும்பு நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியத்துக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 8.20 மணிப்படி ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 2,62,057 வாக்குகள் (16.37 சதவீதம்) அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 7,96,941 … Read more

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ராணுவ அதிகாரி, அவருடைய வருங்கால மனைவியுடன், கடந்த 14-ந்தேதி இரவில் காரில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது புகாரளிக்க பரத்பூர் காவல் நிலையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது, ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய வருங்கால மனைவியை காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதுடன், அந்த பெண்ணிடம் போலீசார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்பேரில் ஒடிசா … Read more

Bigg Boss Tamil 8: `கேட் தொறந்தாச்சு' ஒளிபரப்பு தொடங்கும் தேதி என்ன தெரியுமா?

விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இந்த வருடம் தொடங்கவுள்ளது. அதன் குறித்த லேட்டஸ்ட் தகவல் இதோ! பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை விஜய் டிவியையே சேரும். கடந்த 2017ம் ஆண்டு இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பானது. நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு டிவி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க முன்வந்தார். நிகழ்ச்சியானது தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் புதிதாக இருந்தாலும் விஜய் டிவியின் திறமையான கன்டென்ட் குழுவினரால்  தொடங்கிய சில நாட்களிலேயே ஹிட் ஆக்கப்பட்டது. … Read more