மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு

இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் … Read more

15 வருஷத்துல இதை யாருமே என்கிட்ட சொல்லல – Sasikumar's Subramaniapuram Memories| Vikatan Pressmeet

நடிகர் சசிகுமார் தமிழில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லாவற்றிலும்  வெற்றியை கொடுத்து பல திறமையான நபர்களை உருவாக்கியிருக்கிறார். நந்தன் படம்  செப்டம்பர்  20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவர் எக்ஸ்ளுசிவ்வாக தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களையும், நந்தன் படத்தைப் பற்றியும் குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தைப் பற்றி அந்த படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் நினைவலைகளையும் இந்த பகுதியில் விகடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.   … Read more

திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் : சபாநாயகர் அப்பாவு

கன்னியாகுமரி விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் மூலம் சுமார் 7,500 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது வருங்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. நான் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் எனக்கு சபாநாயகர் பதவியை முதல்வர் வழங்கியுள்ளார் என்று … Read more

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த மீன்பிடி படகு – விசாகப்பட்டினம் அருகே பரபரப்பு

அமராவதி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு படகில் 5 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், நடுக்கடலில் இன்று மதியம் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் இருந்த மோட்டார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் படகில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனைக் கண்டு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் தீப்பிடித்து எரிந்த படகிற்கு அருகே சென்றனர். இதையடுத்து தீப்பற்றி எரிந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கடலில் … Read more

Monkey Pox Explained in தமிழ் | MPOX என்றால் என்ன? எப்படி அது பரவுகிறது? | Vikatan

இந்த வீடியோவில், MPOX  எனப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி வருகிறது. MPOX -ன் தோற்றம், அதன் அறிகுறிகள் மற்றும் மிக முக்கியமாக, அது மனிதர்களிடையே எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றியும்,   கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்  தடுப்பு குறிப்புகள் மற்றும் உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது  தகவல் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு குரங்கு அம்மை நோயின்  அடிப்படைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.   முழுமையாக அறிந்து கொள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள். விழிப்புணர்வை … Read more

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்பு

ஆதிகைலாஷ் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று உத்தரகாண்ட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களையும் பார்வையிட்டனர். கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ.தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஆதில், 30 பேரும் சிக்கிக் … Read more

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் பிகாரில் மதுவிலக்கு ரத்து : பிரசாந்த் கிஷோர்

பாட்னா தாம் பீக்கார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்ஹ்டு செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் வியூக நிபுணரானபிரசாந்த் கிஷோர், தனது ‘ ஜன் சுராஜ்’ அமைப்பை புதிய கட்சியாக தொடங்க திட்டமிட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் வரும் 2 ஆம் தேதி தனது கட்சியை முறைப்படி தொடங்குகிறார். அடுத்த ஆண்டு பீகாரில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோர் ஆயத்தமாகி வருகிறார். இன்று, … Read more

”நாங்கள் எல்.கே.ஜி, பா.ம.க பிஹெச்டி”- தஞ்சாவூரில் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறியதாவது, “மது ஒழிப்பில் பா.ம.க பி.ஹெச்.டி முடித்திருப்பதாகவும், திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி வந்திருப்பதாகவும் பா.ம.கவினர் சொல்கிறார்கள். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் எல்கேஜிதான். பா.ம.க பிஹெச்டி தான். ரொம்ப மகிழ்ச்சி. பா.ம.க-வுடன் எங்களுக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. சேர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு அவர்கள்தான் எங்களை தள்ளிவிட்டனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லாத … Read more

முதன்முதலாக சென்னையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் கச்சேரி

சென்னை முதன் முதலாக சென்னையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் அக்டோபர் 19 ஆம் தேதி கச்சேரி நடத்த உள்ளார், பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், ஐயா, திருட்டுப் பயலே, முனி, அசல் போன்ற படங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி இடம் பிடித்தவர் ஆவார். சென்னையில் முதல் முறையாக இசையமைப்பாளர் பரத்வாஜின் … Read more