Sugarcane Juice: வாரம் 2 டம்ளர்; உங்களை ஹெல்தியாக்கும் இயற்கை டானிக்..! Health Tips

எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம் கரும்புச்சாறுதான். கரும்புச்சாறில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன என்கிற சித்த மருத்துவர் வேலாயுதம், அதன் மருத்துவ பலன்களை சொல்கிறார். உடலில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும். இது, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். … Read more

ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட12 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கில்,  இயக்குனர் அமீர் உள்பட 12 பேர்மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே  மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை  வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல போதை பொருள் கடத்தல் மன்னாக திகழ்ந்த, முன்னாள் திமுக நிர்வாக ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால் கைது … Read more

திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

அமராவதி, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் கலப்படம் நடந்தது என பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். இதுபற்றி ஆந்திர பிரதேச மந்திரி நர லோகேஷ், அவருடைய தந்தையான முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசிய வீடியோ பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அதில் அவர் வெளியிட்ட செய்தியில், திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் … Read more

Doctor Vikatan: அடிக்கடி கை, கால் வலி… தொடரும் களைப்பு; கால்சியம் சப்ளிமென்ட் உதவுமா?

Doctor Vikatan: என் வயது 50. வாரத்தில் பல நாள்கள் அதிக களைப்பாகவே உணர்கிறேன். அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்படுகிறது. என்னுடைய தோழிக்கும் இதே பிரச்னை இருந்ததாகவும், அதற்கு அவள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டதாகவும் சொன்னாள். நானும் அவற்றை எடுத்துக்கொள்ளலாமா…. யாருக்கெல்லாம் இந்த சப்ளிமென்ட்டுகள் தேவை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை ஆரோக்கிய விஷயத்தில் அடுத்தவர் பின்பற்றும் சிகிச்சைகளை … Read more

இன்று சென்னையில் இந்தியா – வங்க தேச் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

சென்னை சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு இந்தியா வங்க தேசம் இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தியாவுக்கு ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது  உப்ர்க்.முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. … Read more

உ.பி.: சரக்கு ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன

மதுரா, உத்தர பிரதேசத்தில் பிருந்தாவன் பகுதியருகே நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூரத்கார் மின்சார ஆலைக்கு சென்று கொண்டிருந்தபோது, இந்த சரக்கு ரெயில் திடீரென விபத்தில் சிக்கியது. ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. இதனை ஆக்ரா பிரிவுக்கான மண்டல ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், இந்த வழியில் செல்ல கூடிய 3 ரெயில்வே வழிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். எனினும் இந்த … Read more

கைதானவரிடம் ரோலக்ஸ் வாட்ச், பணத்தை அமுக்கிய எஸ்.ஐ – ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்த எஸ்.பி!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீஸார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்படி, சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சோதனையின்போது, சீட்டு விளையாடிய ஒருவரின் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் அவரின் காரில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை தனிப்படை எஸ்.ஐ வினோத் எடுத்துள்ளார். அதை பறிமுதல் செய்த கணக்கில் காட்டாமல் தானே வைத்துக் கொண்டதாகச் … Read more

நேற்றைய ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர் நேற்று நடந்த ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இவற்றில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றுலடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் … Read more

ஜம்மு காஷ்மீர்: 7 சட்டசபை தேர்தல்களை விட அதிகம்.. முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வாரில் அதிகபட்சமாக 80.14%; குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் Source Link

ஜம்மு மற்றும் காஷ்மீர்: முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றது. லடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் … Read more