டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த்கெஜ்ரிவால், ராஜினாமா செய்ததால் புதிய முதல்-மந்திரியாக பெண் மந்திரி அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். புதிய மந்திரிசபையில் ஏற்கனவே உள்ள மந்திரிகள் சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீட்டிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் தவிர 2 புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. புதியவர்களில் ஒருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என தெரிகிறது. டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முதல்-மந்திரி … Read more

ஆற்றுக்குள் சிக்கிய மகன், வளர்ப்பு நாய் – காப்பாற்றச் சென்ற போலீஸ் எஸ்.ஐ உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 56. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார். ராஜா தன் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். அவரின் குடும்பத்தினர் அந்த நாய் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த வளர்ப்பு நாயை ஆற்றில் குளிப்பாட்ட முடிவு செய்தார் ராஜா. அதன்படி நாயை … Read more

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு : படகு போக்குவரத்து 3 நாட்களாக தாமதமாக தொடக்கம்

கன்னியாகுமரி கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்துள்ளதால் கடந்த 3 நாட்களாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கி உள்ளது. தினமும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். தினமும் இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் காலை … Read more

பீகார்: ஆளுங்கட்சி மகளிரணி தலைவரை அடித்து, செருப்பு அணிவித்து ஊர்வலம்

பாட்னா, பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த மாவட்ட மகளிரணி தலைவராக இருப்பவர் காமினி பட்டேல். இந்நிலையில், சீதாமார்ஹி மாவட்டத்தில் பைர்கனியா பகுதியில் அக்கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு காமினியை அழைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காமினி பேஸ்புக்கில் அதுபற்றி பதிவிட்டு உள்ளார். விமர்சனங்களை வெளியிட்ட சிலருக்கு எதிராக காரசார பதில் விமர்சனங்களும் வெளியிடப்பட்டன. இந்த சூழலில், அக்கட்சியின் வார்டு கவுன்சிலர் சஞ்சய் சிங்கின் … Read more

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று (19.09.2024) முதல் 25.09.2024 வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (19.09.2024 மற்றும் 20.09.2024)  அதிகபட்ச வெப்பநிலை ஒருசில … Read more

மணிப்பூர்: ராணுவம், போலீசார் கூட்டு நடவடிக்கையில் 28 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

இம்பால், மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் பல மாதங்களாக அமைதி காணப்பட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்தில் வன்முறை சம்பவம் ஏற்பட்டது. இதனால், மணிப்பூர் டி.ஜி.பி. ராஜீவ் சிங், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கினார். வெவ்வேறு பாதுகாப்பு படையினர் இடையே முறையான ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மத்திய … Read more

சென்னையில் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் சடலம்

சென்னை சென்னையில் ஒரு பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக இருந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னையில் துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்ததில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது. காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு உடனடியாக விசாரணையை … Read more

NPS Vatsalya: குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு ஏற்றது.. யார் முதலீடு செய்யலாம்… விதிமுறைகள் என்ன?

‘குழந்தைகளுக்கு எதாவது சேர்த்து வெச்சுடனும்பா’ என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. இந்த ஆசை நிறைவேறும் விதமாக, கொஞ்சம் நஞ்சமல்ல… கோடிக்கணக்கில் குழந்தைகளுக்கு சேர்க்கலாம், ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம் மூலம். கடந்த ஜூலை மாதம் தாக்கலான 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா” என்று பேசினார். இதனையடுத்து, இந்தத் திட்டம் நேற்று நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். … Read more

வரும் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக அதிஷி பதவி ஏற்பு

டெல்லி வரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்ற்ம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்றம் அவர் முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு நிபந்தனை விதித்ததால் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் … Read more

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்: `செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு..!'- ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் பெரம்பூரில் வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், பல ரவுடிகளின் பெயர்கள் அடிபட்ட அதேவேளையில், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்ந்தது. ஆம்ஸ்ட்ராங் – பகுஜன் சமாஜ் கட்சி இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் காங்கிரஸ் … Read more