திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகச் சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி சிறப்பான பல்வேறு திட்டங்களைச் … Read more

5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!

சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெற்கு சீனாவைச் சேர்ந்த சென் யூவென் என்ற நபர், தனது ஐந்து வயதில் விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்திற்கு 140 யுவான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அவரது தேசப்பற்றுக்கு மதிப்பளித்து, தற்போது சீன அரசு அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து, … Read more

25இடங்களில் சோதனை: ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்! என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக  அல்-ஃபலா பல்கலைக்கழகம் உள்பட 25க்கும் மேற்பட்டஇடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில்,  டெல்லியில்  நடைபெற்ற  கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.  … Read more

நெல்லை பாய்ஸ்: “நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" – திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் … Read more

ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரயில் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக சென்னை சென்ட்ரல் … Read more

திருப்பூர்: கர்நாடக `நந்தினி’ நிறுவனம் பெயரில் கலப்பட நெய் – ஒரு வருடமாக இயங்கி வந்த போலி ஆலை

கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில் கலப்பட நெய் உள்ளிட்ட பால் பொருள்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, அக்ரஹாரா பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் அந்த மாநில காவல் துறை மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், … Read more

எஸ்ஐஆர்: வாக்காளர்கள் வசதிக்காக இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாடு முழுவதும்  இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள்   இன்று (நவ.18) முதல் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.  இது  நவ.25ம் தேதி … Read more

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்து வரும் நிலையில் நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட மஹிந்திராவின் மூன்றாவது BE வரிசையின் XEV 9s மற்றும் பிரபலமான ஐகானிக் சியரா மாடலை தழுவிய சியரா.EV என மூன்று விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. நவம்பர் 27 மஹிந்திரா XEV 9s ஏற்கனவே மஹிந்திரா காட்சிப்படுத்தி XUV.e8 கான்செப்ட் ஆனது சந்தையில் உள்ள XUV700 எஸ்யூவி அடிப்படையிலான மாடல் தற்பொழுது XEV … Read more

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' – முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A … Read more

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? – மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் … Read more