தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7 ஆயிரமாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பிரிவில், 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7 ஆயிரமாக அதிகரிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெரும்பாலான பொதுமக்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், இந்த … Read more

டிசம்பர் 5ந்தேதி ரோடு ஷோ : புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரி தவெக கடிதம்…

சென்னை: டிசம்பர் 4ந்தேதி புதுச்சேரியில்  தவெக தலைவர்  விஜய் ரோடு ஷோவுக்கு  அனுமதி கேட்டு அம்மாநில  டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் 5 தேதி நடிகர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் புதுச்சேரி காவல்துறை இயக்குனருக்கு கடிதம் அளித்துள்ளார்/ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 2026  ஏப்ரல் , மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் களமிறங்குவதாக … Read more

ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ – இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் … Read more

“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி! மகன் – துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என, தனது மகன்  மற்றும்  துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  நெகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளார். இளைஞரணிச் செயலாளராக, விளையாட்டுத்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும் போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். தி.மு.கழக இளைஞரணிச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின், தனது 49ஆவது பிறந்தநாளையொட்டி, நாளின் தொடக்கத்தில் … Read more

“சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' – நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை நான்கு தலைமுறைகளாக இன்று வரை தொடர்கிறது. மயிலாடுதுறையில் சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வள்ளுவ தெருவைச் சேர்ந்த கனகராஜ் (80) வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார். இவரின் உடலை நல்லடக்கம் செய்ய … Read more

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை ‘டிட்வா’ புயலாக மாறும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை டிட்வா புயலாக மாறும்  என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதன்காரணமாக  நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.  திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை 28ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை … Read more

ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் கிருத்வீகா முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். சுரேஷ்குமாரின் மனைவி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து … Read more

இந்தோனேசியா அருகே சுமத்தா தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்… பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

இந்தோனேசியா அருகே சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதால், அண்டை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிறகு, நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கமானது,  இந்தோனேசியாவின் சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ … Read more