2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு – பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் ஜுனகத்தில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:- இந்தப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் உற்சாகம், மன உறுதி, ஆர்வம் ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையின் ஒரு சிறு பார்வையை என்னால் காண முடிந்தது. வீரர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அதே நம்பிக்கையை ஊட்டுகிறது. அதனால்தான், ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி, அறிவியல், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் … Read more

விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்! ஆனால்…?

சென்னை: சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் நாளை முதல் (டிசம்பர் 26) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் இதுகுறித்து முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் விக்டோரியா பப்ளிக் ஹால் என்பதை தேர்வு செய்து கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம். காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பார்வையிடலாம். விக்டோரியா அரங்கை பாா்வையிட … Read more

“தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ராஜாஜி இந்திய ஜனநாயகத்தை அதிகாரத்தின் மேடையாக அல்ல, மனச்சாட்சியின் வெளிப்பாடாகவே பார்த்தவர். பலர் ஆட்சியைப் பற்றியும், வெற்றியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவர் தேர்தல் என்ற அமைப்பை பற்றி ஆழமாக சிந்தித்தார். தேர்தல் என்பது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; … Read more

திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 மட்டுமே நிறைவேற்றம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள்  மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ, இது திமுக அரசு விவசாயிகளுக்கு  செய்த துரோகம் என கூறி உள்ளார். தமிழ்நாட்டில்,  கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து  இழப்பீடு  வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதுதான் திமுகவின்   உழவர்கள் மீதான அக்கறையா என்றும் கேள்வி எழுபியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு … Read more

உன்னாவ் வழக்கு: “நீதிபதி முன்பே இறந்திருப்பேன்" – குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் … Read more

பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள் மற்றும், பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை  ரூ.289.63 கோடி நிவாரண நிதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவ மழை நவம்பர் / டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ரூ.289.63 கோடி … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா   இன்று (டிசம்பர் 25ந்தேதி)  கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன்  இன்று துவங்கியது.  கோவில் மூலரான நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது. விழாவன் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 2026 ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் … Read more

தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? – தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி அஜிதாஆக்னல் என்பவரும் தனக்கு மா.செ., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அவரை சில மீட்டர் தூரத்திற்கு முன்பே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், தனக்குப் பதவி இல்லை என்ற தகவலை … Read more

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் விவரம் அறிவிப்பு…

சென்னை:  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் முழு விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு Multi Axle கொண்ட 20 அதி நவீன வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 24ந்தேதி அன்று சென்னை தீவுத்திடலில்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் … Read more