புதிய தொழிலாளர் சட்டம்: “ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு" – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் … Read more

“டிரம்ப் ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதால் மோடி பாதுகாப்பாக பங்கேற்கிறார்” காங்கிரஸ் கிண்டல்

புதுடெல்லி, தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோக்கனஸ்பர்க்கில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக கூறி உள்ளார். இது குறித்து காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறக்கணிப்பதால், பிரதமர் நரேந்திரமோடி பாதுகாப்பாக கலந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் … Read more

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியைக் கடத்திச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேட்டைக் கும்பல்களின் வேட்டைக்களமாக நீலகிரி காடுகள் மாறி வருகிறது. கடமான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி தோடர் பழங்குடிகளின் வளர்ப்பு எருமைகளையும் கேரள கும்பல்கள் வேட்டையாடிச் செல்கின்றன. கைதான ரெஜி தமிழ்நாடு வனத்துறை மற்றும் … Read more

பெங்களூரு டிராபிக்கை சுட்டிகாட்டிய சுபான்ஷு சுக்லா

பெங்களூரு, பெங்களூரு தகவல் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் கடந்த 17-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கடைசி நாள் மாநாட்டில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்து கொண்டு பேசினார். அவர் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் பேசியதாவது:- “விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதை விட … Read more

கன்னியாகுமரி: "ஏரியில் மீன் பிடிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை மேயராக்கினார்" – மா.சு

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்த அரசு மீனவர்களுக்குச் செய்துள்ள நலத்திட்டங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேசினார்கள். மீன்வளத்துறை என்றுதான் முன்பு பெயர் இருந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலன் என இந்த அமைச்சகத்துக்குப் பெயர் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீன்வளத்துறைக்குத் … Read more

ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழில் அதிபர் மகளின் திருமணம்; டிரம்ப் மகன் பங்கேற்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபரின் மகள் திருமணம் நடக்கிறது. இதில் டிரம்ப் மகன் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜூ ராமலிங்கம், பிரபலமான தொழில் அதிபராக உள்ளார். அவரது மகளின் திருமணம், இந்தியாவின பூர்வீக பகுதியான ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. அவரது மகள் நேத்ரா மந்தேனா, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வம்சி கதிராஜுவை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. … Read more

அக்காளுக்கு உதவியாக வந்த கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர்; ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பெங்களூரு, யாதகிரி மாவட்டம் கெம்பாவி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறை கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு உதவியாக அவரது 16 வயது தங்கை வீட்டுக்கு வந்திருந்தார். அவர், அக்காள் மற்றும் குழந்தைகளை பார்த்ததுடன், வீட்டு வேலைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவி … Read more

மியான்மர் அகதிகளின் பயோமெட்ரிக் பதிவு 58 சதவீதம் நிறைவு; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஐஸ்வால் மியான்மரைச் சேர்ந்த 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் 12,361 குழந்தைகள் அடங்குவர். இவர்களில் பெரும்பாலோர் மியான்மரின் சின் மாநிலத்தின் சின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு அகதிகள் வரத் தொடங்கினர். இதையடுத்து மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் வீட்டில் 7 மணி நேரம் நீண்ட சோதனை – ஆவணங்களுடன் சென்ற அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் ‘அலமேலு மில்ஸ்’ என்ற கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்று மதியம் 2 மணி அளவில் இந்திராணியின் வீடு மற்றும் மில்லிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு ( Directorate General of GST Intelligence (DGGI) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட … Read more

திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா  நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார்  மலை மீது  மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், ஆவினில்  கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்த உடனேயே முக்தியை அருளும் ஆன்மீக தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை. இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் முதன்மையானது கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் … Read more