கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பேராசிரியர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்தநிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை நாகேஷ்வர் பலாத்காரமும் செய்துள்ளார். மேலும் அதனை வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மாணவி, வெளியே யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கல்லூரி மாணவியை நாகேஷ்வர் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் … Read more

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா | Kia Seltos Launch soon | Automobile Tamilan

வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் நடுத்தர எஸ்யூவி சந்தையில் மீண்டும் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் நவீன அம்சங்கள் மட்டுமல்லாமல் மிக முக்கியமாக ஹைபிரிட் சார்ந்த பவர்டிரெயின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. Kia Seltos Launch soon செல்டோஸ் பார்ப்பதற்கு இப்போது இருப்பதை விட மிகவும் கம்பீரமாகவும், முரட்டுதனமான தோற்றத்தை வெளிப்படுத்த இந்நிறுவன பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் அமைப்புடன், செங்குத்தான ரன்னிங் எல்இடி விளக்கு கொடுக்கபட்டு … Read more

H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க்

ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் ‘பீப்பிள் பை WTF’ என்கிற பாட்காஸ்டில் கலந்துகொண்டிருக்கிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அந்தப் பாட்காஸ்ட்டில் எலான் மஸ்க் இந்தியர்கள் குறித்தும், ஹெச்-1பி விசா குறித்தும் பேசியுள்ளார். “திறமையான இந்தியர்களால் அமெரிக்கா நிறைய பலனடைந்திருக்கிறது. தற்போதைய ஹெச்-1பி விசா கெடுபிடி நடைமுறைக்கு, அதில் செய்யப்பட்ட மோசடிகளே காரணம். முந்தைய அரசாங்கம் எந்தவொரு கெடுபிடியும் இல்லாமல், ஹெச்-1பி விசாவை மிகவும் எளிதாகக் கொடுத்தது. அதுவும் ஒரு காரணம். People … Read more

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இயங்கும் ஒரு இணையதளம் மூலமாக குழந்தை துஷ்பிரயோகப் படங்கள், வீடியோக்களை வைத்திருந்ததும், பகிர்ந்ததும், பரப்ப உதவியும் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடந்த ரெய்டில், 26 வயது இளைஞர் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 26 வயது நபர் … Read more

‘இந்தியர்கள் சிலருக்கு தங்களின் தாய் மொழியே தெரியவில்லை’ – மோகன் பகவத்

மும்பை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- “ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தகவல் தொடர்பும், அன்றாட பணிகளும், பகிர்தலும் சமஸ்கிருதத்தில் இருந்தது. தற்போது சில அமெரிக்க பேராசிரியர்கள் நமக்கு சமஸ்கிருதம் கற்று தருகிறார்கள். உண்மையில் நாம் தான் உலகிற்கு சமஸ்கிருதத்தை கற்று கொடுத்து இருக்க வேண்டும். பல குழந்தைகளுக்கு இன்று வீட்டில் பேசும் தாய் மொழியில் சாதாரண வார்த்தைகள் கூட … Read more

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' – நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் … Read more

யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்தவர்,   அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்காததால், கடுப்பான பிரேமலதா, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேவேளையில் திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனால், தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு  இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்த … Read more

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கி (வயது 22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார். பின்னர் வெங்கி, சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல், அவர் பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் … Read more

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதற்காக கோபிசெட்டிபாளையம் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொண்டயம்பாளையம் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்பவரும் கலந்துகொண்டார். அர்ஜுனன், எடப்பாடி பழனிசாமி … Read more

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமல்….

டெல்லி:  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில்  இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகளில் மிக முக்கிய மாற்றங்களை அறிவித்து உள்ளார். இந்த புதிய நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. இதன்மூலம் நீதிமன்றங்களில்  வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவும்,  விரைவான நீதியை வழங்கும் வகையில்  புதிய சீர்திருத்தங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, புதிய வழக்குகளைப் … Read more