பயங்கரவாத ஊடுருவலை தடுப்பது குறித்து கங்கையில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை

லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது, வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினர். இதில் கங்கை நதி வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், அவர்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பான ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து … Read more

மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: மேகதாது அணை  கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி  வழங்கி இருப்பது, தமிழக விவசாயி களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது., இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர்  வெளியிட்டுள்ள … Read more

பீகார் சட்டசபை தேர்தலில் தோற்ற போதும்… பா.ஜ.க., ஜே.டி.யூ.வை பின்னுக்கு தள்ளி தேஜஸ்வி யாதவ் சாதனை

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி … Read more

’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ – மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார். மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர் நம் நாட்டில் எத்தனையோ விமான நிலையங்கள் இருந்தும், இன்னும் எளிய மக்களுக்கு விமானத்தில் பயணம் செய்கிற வாய்ப்பு எளிதாகக் கிடைப்பதில்லை. பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்யாமலேயே விமானம் குறித்த பாடங்களைக் கற்கின்றனர். விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி அரசு … Read more

சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும என தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய   முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும்,  தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு … Read more

மோசமான தோல்வி.. பீகார் தேர்தல் குறித்து கார்கே, ராகுல்காந்தி ஆலோசனை

புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களிலும், தனியாக களம் கண்ட ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. … Read more

IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு | முழு பட்டியல்

2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் மற்றும் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பதற்கான இறுதிநாள் இன்று (நவம்பர் 15). இந்த நிலையில், 10 அணிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டிருக்கிறது. IPL (இந்தியன் பிரீமியர் லீக்) 1. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): தக்கவைக்கப்பட்டவர்கள் – ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமாத், எய்டன் … Read more

எஸ்ஐஆர் நடவடிக்கை: அதிமுக பூத் ஏஜெண்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை…

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,   அதிமுக பூத் ஏஜெண்டுகளுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என   அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குகள் போன்றவைகளை சரிபார்த்து உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் … Read more

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில் இருந்தே சறுக்கலை சந்தித்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இப்போது தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். இத்தோல்வியை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹினி ஆசாரியா புதிய குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள … Read more

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1’ விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். … Read more