“உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது"- அமைச்சர் ஜெய்சங்கரின் 'அபாய குறியீடு' உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல… அமைச்சர் ஜெய்சங்கர் சமகால வர்த்தக … Read more

`செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க!'- கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டம் கோபிசெட்டிபாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். … Read more

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தப் பதபதைக்க வைக்கும் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் பேருந்து விபத்து இதுவரை 11 … Read more

கர்நாடகா: புகையும் `ரகசிய ஒப்பந்தம்' – மறுக்கும் ஆளும் தரப்பு – என்ன நடக்கிறது?

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமானாதப்படுத்தியே தேர்தலை நடத்தி முடித்திருந்தது. அப்போதே இருவரும் 5 ஆண்டுகள் ஆட்சியை சரிசமமாக பிரித்து ஆட்சி செய்துகொள்ளலாம் என ‘ரகசிய ஒப்பந்தம்’ மூலம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா தலைமையிலான அரசு 2.5 … Read more

Andre Russell: "வேறு ஜெர்சியில் என்னைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது" – IPL-ல் இருந்து ஓய்வு

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல். 2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து 12 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2026ம் ஆண்டுக்கான சீசனில் ரசலை ஏலத்திற்காக வெளியிட்டது கேகேஆர் அணி நிர்வாகம். இதனால் அவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே … Read more

ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் நிற்காமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லவில்லை. தொடர் மழை ஆடுகள் உயிரிழப்பு … Read more

2026முதல் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கும் ‘போர்வை’! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ரயில் பெட்டியில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கு  ‘போர்வை’ வழங்கப்படும் என  தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதாவது,  தொலைதூரம் பயணம் செய்யும்,  NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்  வழங்கப்படும் என  தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம்  அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே ஜனவரி 1, 2026 முதல் அதன் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட, பயன்படுத்தத் தயாராக … Read more

போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்

புதுச்சேரி, டெல்லியை தலைமையிடமாக கொண்டு ‘சன் பார்மசி’ என்ற பெயரில் மாத்திரை நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் ராஜாவுக்கு சொந்தமான ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலைக்கு ‘சீல் வைத்தனர். அங்கு ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவுக்கு உதவியாக இருந்த ராணா, மெய்யப்பன் … Read more

BB Tamil 9 Day 55: FJ-வை ரோஸ்ட் செய்த வி.சே; புதுவரவாக உள்ளே நுழைகிறாரா ஒருவர்?

வெற்றி தொடரும்போது அந்தப் போதையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வளர்ச்சிக்கான பாதை. இந்த சீசனில் இரண்டாம் முறை தலைவராகும் அரிய வாய்ப்பைப் பெற்ற FJ, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததற்கு ரொமான்ஸ்தான் காரணமா? இந்த எபிசோடில் FJதான் விஜய்சேதுபதியின் டார்கெட்டாக இருந்தார். எனவே விசே புயல் மையம் கொண்டது, FJவிடம்தான். BB Tamil 9 – Day 55 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 55 மேடைக்கு வந்த … Read more

சென்னைக்கு தெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது ‘டிட்வா’… இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல்,  சென்னைக்குதெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.  இதன் காரணமாக, இன்று சென்னை, கடலூர் உள்ளிட்ட 13  மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.‘ டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. இது இன்று மாலை வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு … Read more