BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிருக்கலாம். இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள் அந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் வெளியில் உள்ளவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங்கில் வெடித்து விட்டார் விசே. விஜய் சேதுபதி `பிக் பாஸ் ஏதாவது சொன்ன கேக்க மாட்டேங்குறீங்க’, `டாஸ்க் … Read more

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு புறக்கணித்த நிலையில், அதை அமல்படுத்த உத்தரவிடவேண்டும்   என தாக்கல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,  இதுகுறித்து மத்திய  அரசு பதில் தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு அனுப்பிய விரிவான திட்ட … Read more

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ – கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள மணிகண்டனுக்கு தன்னுடைய மனைவி சரண்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சரண்யா, யாருடனோ அடிக்கடி செல்போனில் ரகசியமாக பேசி வந்திருக்கிறார். அதைக் கவனித்த மணிகண்டன், மனைவி சரண்யாவை பலமுறை கண்டித்திருக்கிறார். அதனால் … Read more

ஆருத்ரா கோல்டு மோசடி: நிறுவன இயக்குனர் வீடு உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக  சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக மக்களை  ஏமாற்றிய புகாரில் ஆரூத்ரா நிதி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2022ம் ஆண்டு இந்த நிறுவனதுக்கு … Read more

விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' – எழுந்த குற்றச்சாட்டு

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் … Read more

ஈரோட்டில், பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட வீரருமான மாவீரன் பொல்லானின் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை என்றார். இரண்டு நாள் பயணமாக கோவை ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று  கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான … Read more

ஐபோன் பாக்ஸில் மதிய உணவு கொண்டு வந்த மாணவன் – இணையத்தை கலக்கும் வீடியோ!

வட இந்தியாவில் வகுப்பறைக்கு மாணவன் ஒருவன் ஐபோன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக மாணவர்கள் ஸ்டீல் பாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் மதிய உணவு கொண்டு வருவார்கள். ஆனால், ஒரு மாணவன் செய்த காரியம் ஆசிரியரையே குழப்பத்தில் ஆழ்த்தியது. வைரலாகும் வீடியோவின்படி, வகுப்பறையில் ஒரு மாணவன் ‘ஆப்பிள் ஐபோன்’ பாக்ஸ் வைத்திருப்பதை ஆசிரியை கவனித்துள்ளார். அந்த மாணவன் கையில் வைத்திருந்த பாக்ஸை பார்த்து “இதற்குள் என்ன … Read more

கலகலக்கும் அதிமுக: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் முடிவு?

ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின்  மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அரவணைக்க திமுக, தவெக தயாராக உள்ள நிலையில், விரைவில் மாற்று கட்சியில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கலகலத்துபோய் உள்ளது. பல மூத்த தலைவர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளதுடன்,  இதுவரை எந்தவொரு தேர்தலில் வெற்றிபெறாத நிலையே நீடிக்கிறது. … Read more

சத்தீஷ்காரில் 28 நக்சலைட்டுகள் சரண்

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் ஆகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தநிலையில், அண்மைகாலமாக ஆயுதங்களை கைவிட்டு தங்களுக்கான அரசின் மறுவாழ்வு நடவடிக்கைகளை ஏற்று நக்சலைட்டுகள் சரண் அடைந்து வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று அந்த மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்ட போலீசில் 28 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். அவர்களில் 19 பேர் பெண்கள் ஆவர். சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 22 பேரின் தலைக்கு ஒட்டுமொத்தமாக … Read more

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ – கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக ஜேம்ஸ் பாலின் மனைவி வசித்து வருகிறார். அதனால் ஜேம்ஸ் பால் அடிக்கடி மதுரைக்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து விட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 24-ம் தேதி அவர் மதுரைக்குச் சென்றார். அவரது வீட்டில் … Read more