அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

நாமக்கல்: நாமக்கல்அருகே  உள்ள ஒருகோவிலில்  திமுக  அமைச்சர் முத்துசாமி உடன் முன்னாள்  அதிமுக அமைச்சர் தங்கமணி தனியாக  சந்தித்து  பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள், திமுக உள்பட மாற்று கட்சிகளை நோக்கி செல்லும் நிலையில், கடந்த வாரம், மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையின்  நடிகர் விஜயை சந்தித்து, அவரது கட்சியான தவெகவில் இணைந்தார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுக  அமைச்சர் முத்துசாமியை அதிமுக … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 887 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 11 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் (டைம் ஸ்லாட்) குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 1 More … Read more

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் N160 பைக்கில் கூடுதலாக கோல்டன் நிற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ஒற்றை இருக்கை கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு ரூ.1.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல், என்ஜின் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ள நிலையில், போட்டியாளர்களான அப்பாச்சி RTR 160,  எக்ஸ்ட்ரீம் 160, எஸ்பி 160 உள்ளிட்ட மாடல்களுடன் சுசூகி ஜிக்ஸர் 155, யமஹா FZ வரிசை போன்றவை சவாலாக அமைந்துள்ளன. New Bajaj … Read more

“இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்'' – சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது. “துணி துவைப்பது பெண்களுக்கான வேலை” என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறிய வாசகம், இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கு ஜுவோ காங் ஜெங்’ (Gu Zhuo Kang Zheng) என்ற ஆடை நிறுவனம், ஆண்கள் அணியும் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் விற்பனை செய்து … Read more

நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ  ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவினர்  மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  மாநிலம் முழுவதும் அதிமுகவினர், அவரது உருவபடத்தை வைத்து மரியாதை செலுத்தி வருவதுடன், பொதுமக்களுக்கு உணவு … Read more

பான் மசாலா மீதான கூடுதல் வரியில் மாநிலங்களுக்கு பங்கு – நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சூழலில் புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு … Read more

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..? | Automobile Tamilan

நிசான் Kait என்ற புதிய காம்பாக்ட் எஸ்யூவியை பிரேசில், லத்தீன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா வருமா என்ற கேள்விக்கு தற்பொழுது எந்த தகவலும் இல்லை. கிக்ஸ் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக வடிவமைக்கப்பட்டு டிசைனில் பல மாற்றங்களைச் செய்து புதிய கைட் பெயரில் களமிறக்கியுள்ளனர். 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 113hp பவருடன், 146Nm டார்க் வெளிப்படுத்தும் CVT கியர்பாக்ஸ் கொண்டு புதிய க்ரில், மிக நேர்த்தியான ரன்னிங் விளக்குடன், எல்இடி ஹெட்லேம்புகள் மற்றும் பின்பக்கம் … Read more

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா?- மு.க.ஸ்டாலின்

சென்னை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா? என  முதல்வர்  மு.க.ஸ்டாலின்  கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், மத அரசியலும், சாதிய அரசியலும், வன்முறைகளும் அதிகரித்து வரும் நிலையில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா? என கேள்வி எழுப்பி உள்ளார். அமைதியாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டிய திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபம் விவகாரத்தை, தேவையின்றி போலீசாரை குவித்து மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி, அதன்மூலம் நீதிமன்ற உத்தரவை தடுத்த … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு கூடுதல் பணியாளர்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

புதுடெல்லி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். இதனால் தற்கொலை மற்றும் மரணம் என பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையில் தவிக்கும் நிலையில், சிறப்பாக பணியாற்றாததற்காக அவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது? என தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நடிகர் … Read more