SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா – மக்களவையில் காரசார விவாதம்!

நாடாளுமன்ற லோக் சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று SIR குறித்த விவாதங்கள் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே காரசாரமாக நடந்திருக்கிறது. நேற்று (டிச 9) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது; சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன. RSS ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றி … Read more

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:  திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது,  தொடரபபட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்கள் வரும்   17 ஆம் தேதி  விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச்செயலாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி (ஏ.டி.ஜி.பி) … Read more

"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" – மக்களவையில் திருமா

நாடாளுமன்ற லோக் சபாவில் SIR குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய மக்களவையில் SIR குறித்துப் பேசியிருக்கும் எம்.பி திருமாவளவன், “எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தலை ஒட்டி அவசர அவசரமாக நடத்தப்படும் SIR-யை நிறுத்தாமல் நடத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. SIR-யை தேர்தயொட்டி அவசர அவசரமாக நடத்தாமல் தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்தவேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது வழக்கமாக நடைபெறுவதைப்போல இல்லாமல், மக்களின் குடியுரிமையை பரிசோதனை செய்யும் செயல்முறையாக இருக்கிறது. இது … Read more

‘வந்தே மாதரம்’ சர்ச்சை : போஸ்-க்கு நேரு எழுதிய கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி – பிரியங்கா இடையே காரசார விவாதம்…

‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்தக் கடிதத்தில் “இந்தப் பாடல் முஸ்லீம்களை கொதிப்படையச் செய்யும்” என்று நேரு கூறியுள்ளதாக எடுத்துரைத்தார். அதேவேளையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அதே கடிதத்தில் உள்ள மற்ற வரிகளைச் சுட்டிக்காட்டி மோடியின் கூற்றை எதிர்த்து பேசினார். மோடி கூறியது: காங்கிரஸ் மற்றும் நேரு, முஸ்லிம் லீக்கின் … Read more

திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன்? கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கருத்து

திருவனந்தபுரம், கேரளாவில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட திலீப் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க, எனக்கு எதிராக கூட்டு சதி நடந்தது’ என்றார். இதுதொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிரான சாட்சியங்களின் அடிப்படையில்தான் அவருக்கு எதிராக வழக்கு … Read more

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.! | Automobile Tamilan

கியா இந்தியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு ஜனவரி 2 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளதால் முன்பதிவு கட்டணமாக 25,000 ரூபாய் செலுத்தி டிசம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் பதிவு செய்து கொள்ளலாம். New 2026 Kia Seltos புதிய செல்டோஸ்  காரின் தோற்ற அமைப்பு முந்தைய மாடலை விட மிகவும் கம்பீரமாகவும், நிமிர்ந்த தோற்றத்துடனும் காட்சியளிக்கிற நிலையில் முன்பகுதியில் செங்குத்தான வடிவமைப்புடன் … Read more

அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி – தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது! அன்புமணி ஆவேசம்…

மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.” என்று அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனக்கு எதிராக ஜி.கே. மணி  சூழ்ச்சி செய்து வருவதாகவும்,   வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி என்றும்,   அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்பி விட்டார் என்றும்  குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது … Read more

இண்டிகோ விமான வழித்தட உரிமங்களை 10 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, இந்தியாவின் பொது விமானத்துறையான ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் விற்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஜூனில் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் சரிய தொடங்கியது. மறுபக்கம் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் … Read more

`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் – தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அடுத்த சில தினங்களில் திமுகவில் இருந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்தார். சினிமா ஏரியாவில் இருந்தும் பலர் தங்கள் அபிமான கட்சிகளில் சேர்வது தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கட்சியில் சேர்ந்துதுமே … Read more