கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு! நேரடியாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க,  கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ்  வழங்கப்பட உள்ளது. இந்த வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வீட்டை  நேரடியாக  சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை மாணவர்கள் சிலம்பம் சுற்றி  வரவேற்றனர். உடனே காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் … Read more

“யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?!’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக … Read more

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? – அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள் … Read more

AI வளர்ச்சியால் $5 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது Nvidia

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. என்விடியா-வின் பங்கு புதன்கிழமையன்று 4% க்கும் அதிகமாக உயர்ந்து இந்த புதிய வரலாற்றை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் அமெரிக்க பங்குச் சந்தைகள் தூண்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. வீடியோ கேம் செயலிகள் தயாரிப்பில் இருந்து தொடங்கிய Nvidia, … Read more

“மாஸ்க் போடு, குரங்கைக் கண்டு பிடி!” குரங்கு சாகசத்தால் மிசிசிப்பி மக்கள் அலறல்…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இப்போது “Breaking News”-ஆக மாறியுள்ளது. துலேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து ரீசஸ் குரங்குகள் ஏற்றிச் சென்ற லாரி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த “அறிவியல் ஆராய்ச்சி ஹீரோக்கள்” — சாட்சாத் ரீசஸ் குரங்குகள் தான் — அவை அடைத்து வைக்கப்பட்ட கூண்டுகள் உடைந்ததால் கிடைத்த கேப்பில் எஸ்கேப் ஆகியுள்ளன. 1948ல் அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய முதல் குரங்கும் ரீசஸ் தான் — ஆல்பர்ட் II அந்த … Read more

Selvaraghavan: “அதை பார்த்துக்க எனக்கு பொறுமை இல்ல!" – செல்வராகவன் பேட்டி

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் இயக்குநர் செல்வராகவனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக அவரைச் சந்தித்து சினிமா விகடன் யூட்யூப் தளத்திற்கு பேட்டி கண்டோம். நடிகராகவும், இயக்குநராகவும் பல்வேறு விஷயங்களை அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டார். Aaryan Movie Press Meet செல்வராகவன் பேசும்போது, “நடிப்புக்காக நான் எதுவும் பண்ணமாட்டேங்க. அதுவாக வரணும். படத்தை இயக்கும்போது வசனங்கள் மூலமாக எமோஷனை சொல்ல வேண்டிய டாஸ்க் இருக்கும். … Read more

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமைச்சர் கே.என்.நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில்  ஒரு அரசு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக பணம் (Cash for job Scam) பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது தமிழ்நாடு அரசு … Read more

மீண்டும் மீண்டும்; கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி – வனத்துறை விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஜக்கனாரி பகுதியில் வனப்பகுதி அருகே திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள அந்தத் தோட்டத்தின் அருகிலேயே வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழியும் உள்ளது. யானை அங்கு சுமார் 15 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்திருந்தது. மேலும் அகழியை ஒட்டி மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் யானை மின்வேலியில் … Read more