ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

மும்பை, நாட்டின் கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். மாஹே’ போர்க்கப்பல் நேற்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மாஹே ரக போர்க்கப்பல் இதுவாகும். ராணுவ தளபதி உபேந்திர திவேதி தலைமையில் மும்பை கடற்படை தளத்தில் நடந்த விழாவில் ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. விழாவில் உபேந்திர திவேதி பேசுகையில், “ஐ.என்.எஸ். மாஹே கடற்படையில் இணைக்கப்பட்டதால் நாட்டின் கடல் பாதுகாப்பு வலிமையை அதிகப்படுத்த புதிய தளம் அறிமுகம் … Read more

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.! | Automobile Tamilan

இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள BNCAP அடுத்த நிலைக்கு ஏடுத்துச் செல்ல சாலைப் பாதுகாப்பை சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்துவதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), புதிய காருக்கான பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டமான பாரத் NCAP-ன் (Bharat New Car Assessment Program) இரண்டாம் கட்டத்தை Bharat NCAP 2.0 என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதற்கான வரைவு அறிக்கையை (Draft AIS-197, Revision 1) வெளியிட்டுள்ளது. இந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அக்டோபர் 1, 2027 … Read more

`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் – சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு வரும் பயணிகளில் பெரும்பாலோர் தொழில்கள், வேலைகள், சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவாக இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும். amai kunchukal அப்படியே, சர்வதேச நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் … Read more

அடிகடி தகராறு: கூலி தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவிகள்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் மலவத் மோகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா, சங்கீதா என்ற 2 மனைவிகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மோகன் தினமும் குடித்துவிட்டு அவர்கள் 2 பேரையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்த மோகன் 2 பேரையும் சரமாரியாக தாக்கி வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு சென்றார். எனவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் … Read more

ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்

பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா… ஆனால் ஒரு தலத்தில் பெருமாள் மட்டுமல்ல கருடாழ்வார், தாயார் ஆகியோரும் சிம்ம முகத்தோடு காட்சி அருள்கின்றனர். மேலும் இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிப்பது சிறப்பு. அதனாலேயே இதை தட்சிண அஹோபிலம் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் திவ்ய தேசங்களுக்கு இணையான மகிமையும் பெருமையும் வாய்ந்த அந்தத் தலத்தை … Read more

ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள் சென்றதால் பரபரப்பு

புதுடெல்லி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு நாள்தோறும் சுமார் 1,500 விமானங்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த விமான நிலையத்துக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஏ-310 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. அரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தின் 29-எல் என்ற ஓடுபாதையில் இறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் தவறுதலாக 29-ஆர் … Read more

தென் ஆப்பிரிக்க ஜி-20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திரமோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு 3 நாள் பயணமாக சென்று இருந்தார். அங்கு நடை பெற்ற ஜி-20 உச்சி மாநாட் டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும் இந்தியா – பிரேசில் – தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோ சிறில் சாவை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, இயற்கை செயற்கை நுண்ணறிவு – … Read more

கனமழையால் சிதம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வயதான தம்பதிகள் உள்பட 3 பேர் பலி!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள  மின் கம்பி அறுந்து விழுந்ததில் வயதான தம்பதி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராமத்தில் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக தேவாலயம் முன்பு உட்கார்ந்திருந்தவர்கள், மீது உயரழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்ததால், மின்கம்பி அறுந்து … Read more

“டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' – நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுகவை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக … Read more

நாங்கள் ஆச்சரிய குறிகள் – விஜய்! “எந்த `குறி’-யாக இருந்தாலும் கவலையில்லை – அமைச்சர் ரகுபதி

சென்னை: நாங்கள்  தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள்  என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர்  விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அப்போது,   “எந்த `குறி’-யாக இருந்தாலும் எங்களுக்கு  கவலையில்லை என தெரிவித்தார். முன்னதாக,    காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த தவெகவின்  மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார்.  காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் … Read more