திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! – விவரம் என்ன?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற அனுமதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கின் விசாரணையின்போது, ‘சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலேயே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் தவறாக நினைக்கும் பட்சத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதற்கும் தயார்’ … Read more

80% பெண்கள் திமுகவுக்கே வாக்கு – அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது! அமைச்சர் ரகுபதி…

சென்னை: 80% பெண்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும்,  தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது திமுக அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். அவரது கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் போதை கலாச்சாரத்தால், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திமுக அரசை … Read more

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" – ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட்டுப்படுத்த தவறியகாக, தி.மு.க அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பேசுகையில், “இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு இரண்டு பாலங்கள் அமைத்து தந்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனைச் சேரும்.  … Read more

போர் நீடிக்கும் அபாயம் காரணமாக வாரத்திற்கு 4 நாள் வேலை… இலங்கை அரசு அறிவிப்பு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்வழிச் சாலை மூடப்பட்டதையடுத்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகையில், புதன்கிழமை … Read more

`யம்மா… தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசினார். தமிழிசை சௌந்தர்ராஜன் அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அதை கண்டிக்க … Read more

“காலாண்டு அறிக்கை அவசியமில்லை”… அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம்…

அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை நிதி அறிக்கைகள் வெளியிடும் நடைமுறை உள்ளது. இதை மாற்றி, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் அறிக்கைகள் வெளியிடும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படலாம். இந்த மாற்றத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் SEC தலைவர் பவுல் அட்கின்ஸ் … Read more

`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது' – டி.டி.வி.தினகரன் தாக்கு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக… திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தினகரனுக்கு மரியாதை செலுத்தினர். முடிவில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் … Read more

வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?  என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதார் அட்டை உள்பட   13 அடையாள ஆவணங்கள் தகுதியானவை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி,  ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4 (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். … Read more

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' – அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக – சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசியவை. சண்முகம் பெ.சண்முகம் பேசியதாவது, ‘மூன்றாம் கட்டமாக பேசி முடித்திருக்கிறோம். கடந்த முறையை விட அதிக சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் ஒரு முடிவை எடுப்பதில் சிரமமாக இருக்கிறது. எல்லா கட்சிகளின் … Read more

உதயகுமாரும், எடப்பாடியும் அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள்! திமுக கூட்டத்தில் ஓபிஎஸ் காட்டம்…

தூத்துக்குடி: உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். “ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!”  என சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தனக்கு வாழ்வு கொடுத்த அதிமுகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடியால்  நீக்கப்பட்ட ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் சேர முயற்சித்த நிலையில், அவரை  இறுதிவரை சேர்க்க எடப்பாடி உள்பட அதிமுக தலைவர்கள் ஆர்வம் காட்வில்லை. இதனால், அரசியல் அனாதையான ஓபிஎஸ், சமீபத்தில், … Read more