"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி ‘லிவ்-இன்’ உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். Rajasthan High Court அவர்களது மனுவில், … Read more

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மேலும், தமிழக அரசியல் குறித்து ராகுல் காந்திக்கு அவர் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓழுக்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யின் தவெக கட்சியில் சேர பேச்சுவார்த்தை … Read more

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?!

அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது. தனக்குக் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியப் பணத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரனுக்கு, சிகிச்சை செய்யத் திட்டமிடுகிறார். பென்ஷன் பணம் தடையில்லாமல் விரைவாகக் கிடைப்பதற்கு எந்த வழக்குகளிலும், பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கிறார் பாஸ்கரன். ஆனால், அந்த நேரத்தில் அவருக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்னை, அவரின் வீட்டுக் கதவுகளைத் … Read more

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்த்நது, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்தபோது,  மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை … Read more

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாழ்க்கையில் விரக்தி, பிரச்னைகள், மன உளைச்சல், தனிமை, தீய சக்திகளின் பாதிப்புகள் மற்றும் பெரும் … Read more

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

சென்னை : கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே  சென்னையின் குடிநீர் தேவைக்காக  சென்னையின் புறநகர் பகுதியான, கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின்  நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி இருந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த புதிய நீர்த்தேக்கமானது,   ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு  1.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கமாகும்.   இதன்மூலம்,  … Read more

இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம்! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம் என லோக்சபா எதிர்க்கட்சிதலைவர்  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் தொடர்பான செய்தியை இணைத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருவதால், இண்டிகோவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரும் இடையூறுக்கு அரசாங்கத்தின் “ஏகபோக மாதிரி” தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த  இன்டிகோ … Read more

புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி

டெல்லி, 2 அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த புதினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் … Read more

திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்… சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ – க.கனகராஜ் | களம் 1

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’ திருப்பரங்குன்றம் விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள். (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) மாநில … Read more