தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு…

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று மாநிலத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை–காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை (23-ம் … Read more

McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' – இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கன் சிங் என்ற இந்திய வம்சாவளி நபர், கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து மெக்டொனால்ட்ஸில் பணியாற்றி வருகிறார். இவருடைய இந்த நீண்ட கால சேவையைப் பாராட்டி அந்த உணவக நிர்வாகம் அவருக்கு ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் 40 ஆண்டு … Read more

உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வர வாய்ப்பு… டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு புடின் ஆதரவு…

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள அமைதித் திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த திட்டத்தை உக்ரைன் ஏற்க மறுத்தால் மேலும் பல பிரதேசங்களை அது இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை மாஸ்கோ பெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். இந்த திட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அடித்தளமாக செயல்படக்கூடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுவே அமைதிக்கான இறுதித் … Read more

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின்றன. அதே நேரம், இந்தத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்களும் வரத் தொடங்கிவிட்டன. த.வெ.க தலைவர் விஜய், இந்தத் தேர்தல் தி.மு.க – த.வெ.க என்ற இருமுனைப் போட்டியாகவே இருக்கும் என்றார். அதிமுக – பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என … Read more

புதிய தொழிலாளர் சட்டம்: “ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு" – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் … Read more

“டிரம்ப் ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதால் மோடி பாதுகாப்பாக பங்கேற்கிறார்” காங்கிரஸ் கிண்டல்

புதுடெல்லி, தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோக்கனஸ்பர்க்கில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக கூறி உள்ளார். இது குறித்து காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறக்கணிப்பதால், பிரதமர் நரேந்திரமோடி பாதுகாப்பாக கலந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் … Read more

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியைக் கடத்திச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேட்டைக் கும்பல்களின் வேட்டைக்களமாக நீலகிரி காடுகள் மாறி வருகிறது. கடமான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி தோடர் பழங்குடிகளின் வளர்ப்பு எருமைகளையும் கேரள கும்பல்கள் வேட்டையாடிச் செல்கின்றன. கைதான ரெஜி தமிழ்நாடு வனத்துறை மற்றும் … Read more

பெங்களூரு டிராபிக்கை சுட்டிகாட்டிய சுபான்ஷு சுக்லா

பெங்களூரு, பெங்களூரு தகவல் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் கடந்த 17-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கடைசி நாள் மாநாட்டில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்து கொண்டு பேசினார். அவர் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் பேசியதாவது:- “விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதை விட … Read more

கன்னியாகுமரி: "ஏரியில் மீன் பிடிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை மேயராக்கினார்" – மா.சு

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்த அரசு மீனவர்களுக்குச் செய்துள்ள நலத்திட்டங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேசினார்கள். மீன்வளத்துறை என்றுதான் முன்பு பெயர் இருந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலன் என இந்த அமைச்சகத்துக்குப் பெயர் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீன்வளத்துறைக்குத் … Read more

ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழில் அதிபர் மகளின் திருமணம்; டிரம்ப் மகன் பங்கேற்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபரின் மகள் திருமணம் நடக்கிறது. இதில் டிரம்ப் மகன் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜூ ராமலிங்கம், பிரபலமான தொழில் அதிபராக உள்ளார். அவரது மகளின் திருமணம், இந்தியாவின பூர்வீக பகுதியான ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. அவரது மகள் நேத்ரா மந்தேனா, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வம்சி கதிராஜுவை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. … Read more