நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், வளாகங்களில் பன்மொழி கற்றலை விரிவுபடுத்துவதற்காக Learn One More Bharathiya Bhasha (‘மற்றொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வோம்’) முயற்சியை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  மாணவர்களிடையே பன்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் … Read more

அனில் அம்பானி மகன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

புதுடெல்லி, இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அனில் அம்பானி வசம் இருந்த ரிலையன்ஸ் குழுமம் சரிய தொடங்கியது. அனில் அம்பானிக்கு முன்னாள் இந்தி நடிகை டீனாவுடன் திருமணமாகி ஜெய் அன்மோல் (வயது 33) மற்றும் ஜெய் அன்சுல் (29) என இரு மகன்கள் உள்ளனர். இதில் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஜெய் அன்மோல் இருந்தார். இந்த நிறுவனத்துக்காக பல்வேறு இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து ரிலையன்ஸ் ஹோம் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: புதிய கற்கால வாழ்க்கை; 8000 ஆண்டுகள் பழமையான தேய்ப்புப் பள்ளங்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் புதிய கற்காலக் கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும்போது உருவான தேய்ப்புப் பள்ளங்களை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, நூர்சாகிபுரம் சு. சிவகுமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கருவி தேய்ப்புப் பள்ளங்கள் செண்பகத்தோப்பு வனத்துறைச் சோதனைச் சாவடி அருகில் உள்ள பாறையில், புதிய கற்காலக் கைக்கோடரிகளைத் தேய்த்து வழுவழுப்பாக்கும்போது உருவான 4 தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன. இதில் 3 பள்ளங்கள் நேராகவும், ஒன்று … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும்  அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பரபரப்பான  தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிப்பு காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், மூத்த உறுப்பினர் கே.பி.முனுசாமி தற்காலிக … Read more

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு மாதம் ரூ.8,600- கட்டணமா? எலான் மஸ்க் நிறுவனம் விளக்கம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் செயற்கைக்கோள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை கிடைக்க செய்வதற்கான ஸ்டார்லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டண விவரங்கள் குறித்து அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது. மாதாந்திர கட்டணம் ரூ.8 ஆயிரத்து 600 எனவும் ஒருமுறைக்கான நிறுவுதல் கட்டணம் ரூ.34 ஆயிரம் எனவும் வெளியானது. … Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது. இந்த … Read more

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் பி.ஆர். அரவிந்தக்ஷன் RTI மூலம் எழுப்பிய கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதில் மேற்கோள்காட்டியுள்ளது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் “மைக்ரோ டொனேஷன்” திட்டத்தில் பங்கேற்க தங்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, Swachh Bharat, Beti … Read more

இண்டிகோ நிறுவனம் இயல்புநிலைக்கு திரும்புகிறது – தலைமை செயல் அதிகாரி தகவல்

மும்பை, நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர். இதையடுத்து இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, பயணிகளின் பரிதவிப்பை குறைக்க உடனடியாக விமான சேவைகளை சீரமைக்க உத்தரவிட்டது. நிலைமை சீராகும் … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். லட்சுமண் குமார் என்ற அந்த பேராசிரியர், தன்னிடம் இருந்த மாணவியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி, தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார். ஏற்கனவே அந்த மாணவியை அந்த பேராசிரியர் பாலியல் வன்முறை … Read more

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த  4 ஆண்டுகளில்,  ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை  தெரிவித்து உள்ளது. கோவையில் டிசம்பர் 8ந்தேதி அன்று  ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த … Read more