எஸ்.பி.ஐ வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளை

பெங்களூர், கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர். வங்கி பணி நேரம் முடிந்ததால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளை கும்பல், அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். .வங்கி அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, மொத்தம் ரூ. … Read more

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

டாடா மோட்டார்சின் ஆடம்பர பிரிவாக உள்ள இங்கிலாந்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் (Jaguar Land Rover – JLR) மீது நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் கடந்த செப்டம்பர் 1 முதல் தற்பொழுது வரை கடும் சவால்களை எதிர்கொண்டு வரும் இந்நிறவனம், உற்பத்தி மற்றும் டீலர்கள் விற்பனை என அனைத்திலும் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது. இங்கிலாந்து, சீனா, ஸ்லோவோக்கியா, பிரேசில் மற்றும் இந்தியா என உலகில் உள்ள அனைத்து ஜாகுவார் லேண்ட்ரோவரின் உற்பத்தி மற்றும் வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், … Read more

இபிஎஸ் டெல்லி பயணம்: "மகாராஷ்டிராவைப் போல் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கிறது" – மாணிக்கம் தாகூர் MP

பா.ஜ.க-வின் வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை எம்.பி. மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, செங்கல்லை ஓரம் கட்டிவிட்டு மோடி அழைத்து வந்து செங்கோலை நிறுவுவோம் எனத் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியது குறித்த கேள்விக்கு, “அ.தி.மு.க-வை முழுமையாகக் கபளீகரம் செய்வதற்கு அமித் ஷா தலைமையில் சதி குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க முழுமையாக அமித் ஷாவின் காலில் விழுந்து கிடைக்கிறது என்பது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி … Read more

பாலாறு விவகாரம்: ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் தணிக்கை குழு அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான  தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த   3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்ற விசாரணைக்கு  ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில், ஆட்சியர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது, ஐஐடி சென்னை நிபுணர்கள் தலைமையில் ஒரு … Read more

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

இந்தியாவின் B-பிரிவில் பிரபலமாக உள்ள டாடா நிறுவன பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் தொடர் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அறிமுகத்திற்கு முன்னர் தற்பொழுது வரை கிடைத்த தகவல்கள், என்னென்ன வசதிகள் பெறலாம் எப்பொழுது விற்பனைக்கு வரலாம் என விரிவாக அறிந்து கொள்ளலாம். மாருதியின் முதலிடத்திற்கு கடும் சவாலினை ஏற்படுத்திய பஞ்ச் விற்பனை சற்று சில மாதங்களாகவே சரிந்தே காணப்படுகின்றது. குறிப்பாக வலுவான GNCAP 5 ஸ்டார் ரேட்டிங் பஞ்ச் பெற்றிருந்தாலும் இன்னும் 6 ஏர்பேக்குகளை மேம்படுத்தாமல் உள்ளது. … Read more

“2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமி நடுரோட்டில் நிற்கப்போகிறார்'' – டிடிவி தினகரன் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.  அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் இன்று (செப்.17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். “உள்துறை அமைச்சரைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு … Read more

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு…

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். முன்னதாக பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்தவகையில் சுயமரியாதை, ஆளுமை திறன், பகுத்தறிவு பார்வை கொண்டதாக செயல்பாடுகள் அமையும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.  திருச்சி ஆட்சியர் … Read more

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

விற்பனையில் உள்ள மூன்றாவது தலைமுறை அமேஸ் காரில் கூடுதலாக கிரிஸ்டல் பிளாக் பேர்ல்  என்ற நிறத்தை  பெற்று விலையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது இந்த காரில் லூனார் சில்வர் மெட்டாலிக், மீட்டியோராய்டு கிரே மெட்டாலிக், பிளாட்டினம் வெள்ளை பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், ப்ளூ பேர்ல் என மொத்தமாக தற்பொழுது 8 நிறங்களை கொண்டுள்ளது. மற்றபடி, அமேஸ் காரில் தொடர்ந்து  1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு … Read more

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவ்வாறு நன்கொடையாகப் பெறப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் அம்மன் சன்னதி மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் சில பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பொன்னி தென்காசி காவல்துறையில் புகார் செய்தார். காசி விஸ்வநாதர் கோயில் அந்த புகாரில் … Read more

சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான  டெண்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்த  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில்  பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் (2025) மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார். அதில்,  தமிழகத்திற்கு … Read more