தூய்மை பணியாளர்களின் 100வது நாள் போராட்டம்! ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிரான தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று  100வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்ததும் பல துறைகளை தனியார் மயமாக்கி வருவதுடன், பல துறைகளின் பணி நியமனங்களும் தனியார்களிடமே வழங்கி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், சென்னை உள்பட பல பகுதிகளில் தூய்மை … Read more

Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' – புகழும் ரயில்வே – வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தின் போது, ​​பள்ளி மாணவர்கள் குழு ஒன்று ரயிலில் பயணிக்க வைக்கப்பட்டது. Vande Bharat அந்தப் பள்ளி மாணவர்கள் … Read more

36ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவ மாணவிகளுக்கு அரிய வாய்ப்பு! சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு…

சென்னை; 1981-82ம் கல்வி ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான கடந்த 36ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவ மாணவிகள் மீண்டும் தேர்வு எழுத சென்னை  பல்கலைக்கழகம் அதிரடியாக அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. இதை அரியர் மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 1981-82 முதல் 2018 வரை இளங்கலை, முதுகலை, டிப்ளமா, மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, தேர்வெழுதி தேர்ச்சி பெற ‘கடைசி … Read more

பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' – தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பீகாரின் சமஸ்திபூர் மாவட்ட சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியின் கல்லூரி அருகே, சாலையோரத்தில் VVPAT பேப்பர்கள் கண்டெடுக்கப்பட்டது. Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர் VVPAT … Read more

பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்! சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு உதவியுடன் இயக்கப்பட்டு வரும், பெண்களுக்கான  பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என  சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களில் ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. விதிமீறும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையே   சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்  உறுதிப்படுத்தி உள்ளார்.   முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த … Read more

காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

சசராம், 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 64.66 … Read more

கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி

கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள்களை, அவர்களின் முகவரிக்கு அனுப்பும் பணியும் அங்கு நடந்து வருகிறது. ஃபிளிப்கார்ட் இந்நிலையில் அங்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய 7 கிலோ வாஷிங் பவுடர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கவே நிறுவனத்தினர் சந்தேகமடைந்து பார்சல் செய்த பொருள்களை எல்லாம் ஆய்வு செய்துள்ளனர். … Read more

அதிகரித்துள்ள போதைபொருள் நடமாட்டம்: திமுக அரசுக்கு எதிராக வைகோ 10 நாள் நடைபயணம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக  போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க அரசை வலியுறுத்தியும்,   மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக பொதுசெயலாளர் வைகோ  தமிழக அரசுக்கு எதிராக 10 நாட்கள்  நடைபயணம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனால் அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்கள் போன்றவைற்றை தடுக்க வலியுறுத்தியும்,  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் … Read more

செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்: வருகிறது சூப்பர் வசதி

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் ரெயில் டிக்கெட் புக்கிங் வரை பல சேவைகளுக்கு அதார் எண் கேட்கப்படுகிறது. 12 இலக்க எண் கொண்ட இந்த ஆதார் கார்டில் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. … Read more

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த ‘சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி’யில் ‘சென்னைஸ் அமிர்தா’ மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். SICA எனப்படும் ‘தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம்’ சென்னையில் நடத்திய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3200-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களோடு போட்டியிட்டு, வென்று, தங்கப்பதக்கங்களை அள்ளி … Read more