மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்  தொடர்பான  நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு  வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்து உள்ளது. ஒரு தரப்பினர் தங்கள் மதச் செயல்பாட்டைச் செய்வதைத் தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. சகவாழ்வால் மட்டுமே அதை அடைய முடியும். வருடத்திற்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் விளக்கேற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?  என  விசாரணையின்போத நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி … Read more

2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

புதுடெல்லி, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி … Read more

Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' – பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. நேற்றுமட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. … Read more

சாத்தான்குளம் அருகே பயங்கரம்: பெண் போலீஸ் ஆய்வாளர் கணவர் வெட்டிப்படுகொலை!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தன் தருவை பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டா. இவரது கணவர் ஜேம்ஸை அதே பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு … Read more

அரியானா: கார், பைக் மீது மோதிய லாரி – 4 பேர் பலி

சண்டிகர், அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு இன்று லாரி சென்றுகொண்டிருந்தது. கர்னல் மாவட்டத்தின் கவ்ரண்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் எதிரே வந்த கார், பைக், பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார், பைக்கில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், லாரி டிரைவர் உள்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு … Read more

AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' – ஏவிஎம் சரவணன் காலமானார்

ஏ.வி.எம் சரவணன் காலமானார் ஏ.வி.எம் சரவணன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஏராளமான படகளை தயாரித்துள்ளது. ஏ.வி மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டியது. ஏ.வி.எம் நிறுவனத்தின் படங்கள் என்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் … Read more

திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் எஸ்கேப் ஆன செல்வபெருந்தகை …

சென்னை: திமுக ஆட்சியில் பங்கு கேட்டீர்களா?  என  தொகுதி பங்கீடு குறித்து  திமுக தலைமையிடம்  பேசிய செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள்  கேட்டதற்கு, பதில் கூறாமல் எஸ்கேப் ஆனார். இதன் காரணமாக, திமுகவை மீண்டும் தோளில் சுமக்க தேசிய கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணி குழு அமைத்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டு சென்றார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, நேற்று … Read more

சத்தீஷ்கார் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் 2 பேர் வீர மரணம்

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை … Read more

“என்னை விட அழகா இருக்க கூடாது'' – 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த விதி என்ற 6 வயது சிறுமி காணவில்லை. அச்சிறுமி தனது பெற்றோர் மற்றும் பாட்டி–தாத்தாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணவில்லை என்பதை … Read more