ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள  கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம், 830 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் இன்று (டிச. 5) பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவியுள்ள உற்பத்தி தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டது. ‘ ரூ.1003 கோடி முதலீட்டில் 830 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்  இந்த தொழிற்சாலையில்,  கண்ணாடி உற்பத்தி  செய்யப்பட உள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் … Read more

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" – பவன் கல்யாண் வருத்தம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம் ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. … Read more

திருப்பரங்குன்றம் சர்ச்சை: சிஐஎஸ்எஃப் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து,  சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும்12ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு, அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு … Read more

`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா – இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய அதிபர் புதின் – இந்திய பிரதமர் … Read more

தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை! அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை  நடைபெற்று வருகிறது,   காவல் நிலையத்தில் புகுந்து காவலர் வெட்டி கொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி,  திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எங்கே போகிறது?  என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக,   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் … Read more

Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" – பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், ‘டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்’ என்று குறிப்பிட்டு இன்று மாலை பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ். தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார். Indigo CEO பேசியதென்ன? Indigo CEP … Read more

550 விமானங்கள் ரத்து… இண்டிகோ விமான நிறுவனம் தத்தளிக்கக் காரணமென்ன ?

இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது, இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக முழுஅளவில் செயல்படமுடியாமல் தத்தளித்து வருகிறது. நேற்று 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் விமான பயணிகள் தாங்கள் பயணம் செய்யவிருக்கும் விமானம் இன்று பறக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர். அப்படியே பறந்தாலும் அது சரியான நேரத்துக்கு தரையிறங்குமா என்பதும் தாங்கள் கொண்டு சென்ற லக்கேஜ் சரியாக வந்து சேருமா என்பதும் … Read more

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி ‘லிவ்-இன்’ உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். Rajasthan High Court அவர்களது மனுவில், … Read more

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மேலும், தமிழக அரசியல் குறித்து ராகுல் காந்திக்கு அவர் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓழுக்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யின் தவெக கட்சியில் சேர பேச்சுவார்த்தை … Read more

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?!

அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது. தனக்குக் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியப் பணத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரனுக்கு, சிகிச்சை செய்யத் திட்டமிடுகிறார். பென்ஷன் பணம் தடையில்லாமல் விரைவாகக் கிடைப்பதற்கு எந்த வழக்குகளிலும், பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கிறார் பாஸ்கரன். ஆனால், அந்த நேரத்தில் அவருக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்னை, அவரின் வீட்டுக் கதவுகளைத் … Read more