திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி – இரங்கல்!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் – திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (வயது 86) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை  காலமானார்.  அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் … Read more

நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தேர்தல் ‘: உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது… வாக்காளர்கள்… வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா??? அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை . நாட்டை விற்க போகிறோமா? இல்லை.. நாட்டை வியக்க வைக்க … Read more

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு நீதிமன்றக் காவல் – புகைப்படம் வெளியீடு…

கோவை: நள்ளிரவில் காதலுடன் காரில் தனியாக  இருந்த  மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக  குற்றவாளிகள் என கருதப்படும்  மூவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறை, குற்றவாளிகள் என கருதப்படும் குணா, சதீஷ், காளி ஆகியோர் படத்தை வெளியிட்டு உள்ளனர். கடந்த நவம்பா் 2-ஆம் தேதி அன்று  கோவை விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த … Read more

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.! | Automobile Tamilan

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஏற்கனவே வின்ஃபாஸ்ட் கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக மின்சார பேருந்து மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஏற்கனவே உள்ள வின்ஃபாஸ்ட் ஆலைக்கு அருகாமையில் கூடுதலாக 500 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. எலக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தி வந்த வின்ஃபாஸ்ட், இந்த புதிய ஆலையில் எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவும், இதற்காக … Read more

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா – கார்த்திகை தீப' வழிபாடு!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு … Read more

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் அறிவிப்பு

டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும் என கேரள எம்.பி.யின் கேள்விக்கு  நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது,  பிஎம்ஸ்ரீ நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ்    கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள … Read more

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் … Read more

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இநத நிலையில்,  நாடாளுமன்ற வளாகத்தில்  முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் அதிகரித்து காற்று மாசுபாட்டை … Read more

திருப்பரங்குன்றம்:“கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும்" – திருமாவளவன்

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் … Read more

மாம்பழம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்! சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட  டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது. அன்புமணி தரப்பில் ஆஜரான … Read more