நிலவை நெருங்கும் சந்திரயான் 3: சுற்றுவட்ட பாதையை 4வது முறையாக உயர்த்தும் பணி சக்சஸ்! இஸ்ரோ அறிவிப்பு

India oi-Halley Karthik ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மறு பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏவிய சந்திரயான்-3 செயற்கைக்கோள் தற்போது பூமியின் மூன்றாவது சுற்றுவட்ட பாதையிலிருந்து, 4வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிலவுக்கு அருகாமையில் செயற்கைக்கோள் சென்றிருக்கிறது. விண்வெளித்துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியா அனுப்பிய சந்திரயான் -1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்த பின்னர் உலக நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு தற்போது நிலவை … Read more

மராட்டியத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.!

மும்பை, தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர்மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் … Read more

10 Years Of Maryan: சிறுத்தைகள் உடன் நடித்த தனுஷ்; 40 நாள்களில் ரஹ்மான் தந்த இசை! – மரியான் படக்குழு

பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் – பார்வதியின் மனதை உருக்கும் நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் மயக்கும் இசையில் உருவான ‘மரியான்’ படம் திரைக்கு வந்து 10 வருடங்களாகிவிட்டது. தன் காதலியான பார்வதியின் குடும்பக் கடனை அடைப்பதற்காக வெளிநாடு சென்று பாலைவன சூடானில் சிக்கித் தவிக்கும் தனுஷுன் வாழ்க்கைத் தவிப்பு மற்றும் பார்வதியின் காதல் தவிப்பின் வழியே கடலோர தமிழ் மக்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியது இப்படம். பரத் பாலாவின் யதார்த்தமான எழுத்து, தனுஷ் – பார்வதியின் நெகிழ … Read more

காவிரி நீர் விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை  அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது,  காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி  மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளது. இருந்தாலும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், … Read more

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் வீடியோவை ஷேர் செய்ய தடை? சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்?

India oi-Halley Karthik இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்ய வேண்டாம் என்று டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் … Read more

மணிப்பூர் கொடூரம் – டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு

புதுடெல்லி, மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2 பெண்களில் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளானார். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4-ந் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மே … Read more

Maruti Brezza – மாருதி பிரெஸ்ஸா காரில் ஹைபிரிட் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நீக்கம்

மாருதி சுசூகி பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலின் மேனுவல் வேரியண்டில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் நீக்கப்பட்டுள்ளதால் மைலேஜ் 3 கிமீ வரை குறைந்து தற்பொழுது 17.38 Kmpl ஆக உள்ளது. மேலும் சிஎன்ஜி வேரியண்டில் சில பாதுகாப்பு அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிஎன்ஜி வேரியண்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESP) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (HHA) இரண்டும் நீக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பிரெஸ்ஸா காரில் பின்புற சீட்பெல்ட்  ரிமைண்டர் அமைப்பைப் பெறுகிறது Maruti Brezza மாருதி பிரெஸ்ஸாவின் 1.5 … Read more

மணிப்பூர் விவகாரம்; `இந்தியக் குடிமகளாக வேதனையடைகிறேன்' – காங்கிரஸ் பழங்குடிப் பிரிவு மாநிலத் தலைவர்

மணிப்பூர் பழங்குடி இனப் பெண்களை பொதுவெளியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ப்ரியா நாஷிம்கர் இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினப் பெண்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை, நெஞ்சை கலங்கடிக்கச் செய்திருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பழங்குடிப் பிரிவின் மாநிலத் தலைவர் ப்ரியா … Read more

மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளி! மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,  மாநிலங்களவை மதியம்  2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியது. இன்றைய அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, மக்களவை மதியம் 2மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 12மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மதியம் 12மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள்  மணிப்பூரில் … Read more