அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்து. இது தொடர்பாகப் பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்,. இதைப் போல் கடந்த வாரம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று மின்னஞ்சல்கள் முறையே ரூ.20 கோடி, ரூ.200 கோடி, … Read more

Helicopter crash: Marine killed | ஹெலிகாப்டர் விபத்து: கடற்படை வீரர் பலி

கொச்சி,கேரளாவில் உள்ள கடற்படை விமான தளத்தில், தரையில் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் கொச்சியில் தெற்கு கடற்படை தலைமையகம் உள்ளது. இங்குள்ள ஐ.என்.எஸ்., கருடா விமான தளத்தில் நேற்று கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதையொட்டி, கடற்படையில் பணியாற்றும் மெக்கானிக் உட்பட இருவர் ஹெலிகாப்டரை இயக்கி பார்த்து சோதனை நடத்தினர். அப்போது வானில் இருந்து இறக்கியபோது தரையில் மோதி, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த மெக்கானிக் யோகேந்திர சிங் … Read more

சத்தீஷ்காரில் பயங்கரம்… மாவோயிஸ்டுகளால் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை…!

ராய்ப்பூர், தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் சத்தீஷ்காரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகியை மாவோயிஸ்டுகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் … Read more

பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

செங்கல்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு … Read more

School principal who escaped sexual harassment by 50 female students net | 50 மாணவியரிடம் பாலியல் சீண்டல் தப்பிய பள்ளி முதல்வருக்கு வலை

சண்டிகர்,ஹரியானாவில், அரசு பள்ளியில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியரிடம், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவின், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியர், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாநில மகளிர் கமிஷனிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும்படி, போலீசாருக்கு மாநில மகளிர் கமிஷன் அறிவுறுத்தியது. இதற்கிடையே, பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி முதல்வரை, மாவட்ட கல்வி நிர்வாகம் … Read more

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்து – ஒருவர் பலி

கொச்சி, கேரள மாநிலம், கொச்சியில் கடற்படை தலைமையகம் உள்ளது. இங்குள்ள ஐ.என்.எஸ். கருடா ஓடுபாதையில் கடற்படை ஹெலிகாப்டர் இன்று பிற்பகல் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ வீரர்களில் ஒருவர் பலியானார். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கடற்படை தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடற்படையை சேர்ந்த சேதக் ஹெலிகாப்டரின் … Read more

சூதாட்ட செயலியை தடை செய்யாதது ஏன் ? : மோடிக்கு பூபேஷ் பகல் வினா

ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகல் மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பெற்றதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.  இது சதீஷ்கர் மாநிலத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “சூதாட்ட … Read more

மிசோரம் சட்டசபை தேர்தல்: மிசோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு.. ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜக Source Link

ISRO Chief Stops Publication of Controversy in Autobiography | சுயசரிதை புத்தகத்தில் சர்ச்சை கருத்து வெளியீட்டை நிறுத்தினார் இஸ்ரோ தலைவர்

திருவனந்தபுரம், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தன் சுயசரிதை புத்தகத்தில், முன்னாள் தலைவர் சிவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதியிருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து, புத்தக வெளியீட்டை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். வாழ்க்கை வரலாறு இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் சோம்நாத். கேரளாவைச் சேர்ந்த இவர், ‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை நுாலாக எழுதியுள்ளார். அதில், முன்னாள் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சிவன் குறித்து ஏராளமான … Read more

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… நாளை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்திய செயற்குழு கூட்டம் நாளை முதல் 7-ம் தேதி வரை குஜராத் மாநிலம் புஜ் நகரில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலத் தலைவர்கள், துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் பங்கேற்பார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோஹன் பாகவத், பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபாலே, துணை பொதுச்செயலாளர் ஸ்ரீ டி. கிருஷ்ணகோபால், டாக்டர் மன்மோஹன் வைத்யா, ஸ்ரீ முகுந்தா, ஸ்ரீ அருண் குமார், ஸ்ரீ ராம்தத் சக்ரதார் மற்றும் அனைத்து … Read more