Usman Ghani: "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்!"- கிரிக்கெட்டிலிருந்து விலகிய உஸ்மான் கனி

26 வயதான ஆப்கானிஸ்தான் இளம் வீரரான உஸ்மான் கனி  வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்  நடைபெற்றுவருகிறது என்ற பரபரப்புக் குற்றசாட்டை முன்வைத்து, கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார் உஸ்மான் கனி.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “சில பரிசீலனைகளுக்குப் பிறகே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு  செய்துள்ளேன்.  உஸ்மான் கனி கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் ஊழல் என்னை இப்படி முடிவெடுக்க வைத்துள்ளது. … Read more

கிலோ ரூ. 60க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்

சென்னை இன்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60 என ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது கடந்த 2 வாரங்களாகத் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.  குறிப்பாகக் காய்கறிகள் விலை அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை எகிறி வருகிறது. இன்று முதல் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் … Read more

Cancellation of POCSO against Bhushan, girl ordered to answer | பூஷண் மீதான போக்சோ ரத்து சிறுமி பதில் அளிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :பா.ஜ., – எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான, ‘போக்சோ’ வழக்கை ரத்து செய்ய பரிந்துரைத்து புதுடில்லி போலீசார் அளித்துள்ள இறுதி அறிக்கை மீது பதில் அளிக்கும்படி, புகார் அளித்த சிறுமி தரப்புக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. பா.ஜ., – எம்.பி.,யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். அதில் ஒருவர், … Read more

"கல்லூரிகளில் சேர்ந்து செப்.30-க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்" – யுஜிசி உத்தரவு

புதுடெல்லி, கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என அனைத்து பல்கலை., கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் . செப். 30 மற்றும் அதற்கு முன் கல்லூரிகளில் இருந்து விலகும் … Read more

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V விற்பனைக்கு எப்பொழுது ? – Hero Xtreme 200S 4V bike launch soon

நடப்பு ஜூலை மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற பட்ஜெட் விலை எக்ஸ்ட்ரீம் 200S 4V விற்பனைக்கு வெளியாக உள்ளது. 4 வால்வுகளை பெற்ற புதிய என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம். ஏற்கனவே, முதன்முறையாக எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் படத்தை நாம் வெளியிட்டிருந்தோம். பேஷன் பிளஸ் 110 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி ஆகியவற்றை தொடர்ந்து வரவுள்ளது.  Hero Xtreme 200S 4V புதிய OBDII+E20 எரிபொருளுக்கு ஏற்ற  199.6cc என்ஜின் பெற்ற … Read more

கோயிலில் ஆட்டை பலியிட்ட நபருக்கு, அதே ஆட்டால் நேர்ந்த `சாவு' – என்ன நடந்தது தெரியுமா?

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆடு ஒன்று, தன்னைக் கோயிலில் பலியிட்ட நபரை அன்றே சாகடித்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அதெப்படி, ஆட்டைத்தான் கோயிலில் பலியிட்டுவிட்டார்களே பிறகு எப்படி ஆடு சாகடித்திருக்கும் என்று கேள்விகள் உங்களுக்கு எழும். ஆனால், அந்த நபர் இறந்ததற்கான முழுமுதற் காரணம் பலியிடப்பட்ட ஆடுதான். ஆடு அதாவது, சூரஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் பாகர் சாய் என்பவர், தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, கோயிலில் ஆடு ஒன்றைப் பலியிட முடிவுசெய்தார். அதன்படி பாகர் … Read more

ம.பி. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் மீது 294 & 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. பாஜக பிரமுகரின் இந்த மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரவேஷ் சுக்லா மீது பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது (இ.த.ச. 294) மற்றும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிப்பது (இ.த.ச. 504) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

Mumbai: Passenger arrested with Rs.3 crore foreign currency | மும்பை : ரூ. 3 கோடி வெளிநாட்டு கரன்சியுடன் பயணி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் ரூ. 3 கோடி மதிப்பிலான யு.ஏ.இ. கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையிலிருந்த துபாய் செல்லும் பயணி ஒருவரிடம் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் சில வெளிநாட்டு கரன்சிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவை யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டு கரன்சி என தெரியவந்தது. … Read more

இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் – சம்மன் அனுப்பிய இந்தியா

டெல்லி, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக காலிஸ்தான் புலி படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது. இந்த அமைப்பின் தலைவனாக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்தான். ஹர்தீப் சிங் நிஜர் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து … Read more

எலக்ட்ரிக் இரு சக்கர விற்பனை நிலவரம் – ஜூன் 2023

FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகன ஜூன் 2023 மாத விற்பனை எண்ணிக்கை பெரும் சரிவினை சந்தித்துள்ளது. ஓலா, டிவிஎஸ், ஏதெர் போன்ற நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக மே 2023 எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 1,00,000 கடந்திருந்தது. ஆனால் முந்தைய மே 2023 மாத விற்பனை உடன் ஒப்பீடுகையில், 70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிலவரம் – ஜூன் 2023 … Read more