கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை! பிரேத பரிசோதனையில் தெரியவந்த தகவல்கள்

கேரளாவில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர், விசாரணை கைதியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அக்கம்பக்கத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக போலிசில் புகார் கொடுத்துள்ளனர். போலிசார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து … Read more

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனை

சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனையாகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.82.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு … Read more

அம்பானி இதையெல்லாம் கூட செய்வாரா.. வியப்பில் வாயடைத்து போன நெட்டிசன்கள்.. முகேஷ் அம்பானி வீடியோ வாவ்

India oi-Halley Karthik மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் ‘NMACC’ எனப்படும் பண்பாட்டு மையத்தை நீடா அம்பானி திறந்து வைத்தார். இந்நிலையில் கிரிக்கெட் பிரபலம் சச்சின் டென்டுல்கர் தொடங்கி சினிமா பிரபலம் ரஜினிகாந்த் வரை பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி பாட்டுப்பாடி அசத்தியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு கனவு இருந்தது. … Read more

Rajnaths call for Israels support for India | ராஜ்நாத் விடுத்த அழைப்பு இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு

புதுடில்லி : மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தலைமையிலான குழுவினருடன் புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் மூலம் உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கும் முயற்சி குறித்து ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். மேலும் இஸ்ரேல் நிறுவனங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்தியாவில் முதலீடு செய்யவும் இந்திய நிறுவனங்களுடன்இணைந்து ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு … Read more

வெடிக்கும் போராட்டங்கள்… பதற்றத்தில் பாகிஸ்தான் – இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைதும், அவர் கைது செய்யப்பட்ட விதமும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? முன்னாள் பிரதமரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய கட்டாயமும் அதன் பின்னணி என்ன… பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பே தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்திருந்தார் இம்ரான் கான். அவர் மீது வன்முறையை … Read more

வெறும் 27 நொடிகள்… லண்டனில் புலம்பெயர் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்: இலங்கையருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு

மேற்கு லண்டனில் தவறான தகவலால் ஆப்கான் அகதி ஒருவர், இளைஞர்கள் இருவரால் 15 முறை கொடூரமாக தாக்கப்பட்டு, பரிதாபமாக மரணமடைந்த வழக்கில் இலங்கையர் உட்பட இருவருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடுக்கும் கொலைச்சம்பவம் மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையிலேயே நடுக்கும் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவரின் சடலமானது 2021 நவம்பர் 24ம் திகதி மீட்கப்பட்டது.  Image: Met Police 2019 அக்டோபர் மாதம் தலிபான்களிடம் இருந்து தப்பி … Read more

மே 11 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 355-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 355-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

\"கண்ட கருமத்தோட பஸ்ஸில் ஏன் வர்ற?\" பறை இசைக் கருவியுடன் வந்த மாணவியை நடுவழியில் இறக்கிய நடத்துநர்

Tamilnadu oi-Vishnupriya R நெல்லை: நெல்லையில் பறை இசைக் கருவியுடன் அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கணேசனின் மகள் ரஞ்சிதா. இவர் சீதபற்பநல்லூர் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கிறார். இவர் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக டிரம்ஸ், தோள்பறை இசைக் கருவிகளையும் எடுத்து வந்துள்ளார். கல்லூரியில் நிகழ்ச்சி முடிந்து மதுரை செல்லும் பேருந்தில் இசைக் கருவிகளுடன் ஏறினார். மாணவி … Read more

ASEAN—India military exercise ends in South China Sea | ஆசியான்—இந்தியா போர் பயிற்சி :தென்சீனக்கடலில் முடிவடைந்தது

புதுடில்லி : தென்சீனக்கடல் பகுதியில் நடைபெற்ற முதல் ‘ஆசியான்-இந்தியா’ கடல்சார் போர் பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. புருனே இந்தோனேஷியா மலேசியா பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் தாய்லாந்து வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளின் கடற்படை இந்த கடல்சார் பயிற்சியில் பங்கேற்றனர். இந்தக் கடற்படை பயிற்சியில் 9 கப்பல்கள் உட்பட 1400 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். தில்லி ஐ.என்.எஸ். சாத்பூரா கடலோர ரோந்து விமானம் பி-8.ஐ. மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்றன. மே 2 … Read more

10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டீசல் கார்களுக்கு தடையா? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை ஆக்சைடை வெளியிடும் நாடுகளில் உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்பன்-டை ஆக்சைடு வெளியிடுவதை 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்யம் ஆக்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் குறித்து சிபாரிசு செய்வதற்காக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் எரிசக்தி மாறுதல் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது சிபாரிசுகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. டீசல் காருக்கு தடை எரிசக்தி மாறுதல் குழுவின் முக்கிய சிபாரிசுகள் … Read more