பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்… கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு வரியை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். காமராசுவின் தகவல்படி, வரி பாக்கி வைத்திருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் நிலுவைத் தொகையின் விவரம் பின்வருமாறு: இந்தியா சிமெண்ட் லிட்., சங்கர் … Read more

வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று வள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை  செலுத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். அதன்படி, அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் … Read more

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். அதோடு கடந்த முறை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் ரவி ராஜா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். ரவி ராஜா தாராவியை சேர்ந்தவர் கிடையாது. அவர் … Read more

நாகர்கோவில், திருச்சி, தாம்பரம்: தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்

சென்னை: நாகர்கோவில், திருச்சி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்  செய்யப்பட்டு உள்ளது. இந்த  ரயில்6கள்  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக பீகார் மாநிலத்தின் ஜோக்பானிக்கு ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தாம்பரம், திருச்சி, நாகர்கோவிலிலிருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே துறையை … Read more

‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ – அமெரிக்க செனட்டில் ஜோஷ் ஹாவ்லி–டாக்டர் நிஷா வர்மா இடையிலான மோதல் வைரல்

‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ என்ற கேள்வியை அமெரிக்க செனட் விசாரணையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி எழுப்ப, அதற்கு நேரடியான பதில் தராமல் மருத்துவர் நிஷா வர்மா அளித்த விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அபார்ஷன் மாத்திரை (மிஃபெப்ரிஸ்டோன்) பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற செனட் சுகாதாரக் குழு விசாரணையில்தான் இந்த சம்பவம் நடந்தது. டெமோகிராட் தரப்பின் சாட்சியாக அழைக்கப்பட்ட அட்லாண்டாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நிஷா வர்மாவிடம், “ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?” என்று ஹாவ்லி மீண்டும் … Read more

“திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று … Read more

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான … Read more

ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை விசாரணையின்போது மம்தா பானர்ஜி அடாவடி! உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் ஐ-பிஏசி மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது, மம்தா பானர்ஜியின் நடவடிக்கையால், சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளதாகவும்  சுட்டிக்காட்டியது. அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் … Read more

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விடுவிப்பு

அமராவதி, ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த போது, சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர திறன் மேம்பாட்டு நிறுவன நிதி ரூ.300 கோடியை மோசடி செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2023-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்-மந்திரி ஆனார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர போலீசார், சந்திரபாபு நாயுடு மீது … Read more