PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? – நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்!

நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன. அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது… நாளை முதல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ், நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாணப் … Read more

சார்லி கிர்க் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் : உடலில் இருந்த தோட்டா கைது செய்யப்பட்ட நபரின் துப்பாக்கியுடன் பொருந்தவில்லை

அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளரான சார்லி கிர்க் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டைலர் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை கொன்றதாக கூறப்படும் குண்டு, சந்தேகநபர் டைலர் ராபின்சனுடன் தொடர்புடைய துப்பாக்கியிலிருந்து வந்ததா என்பதை ATF உறுதிப்படுத்த முடியவில்லை. இது பொருந்தவில்லை … Read more

திருவள்ளூர்: தவெக மா.செ, பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் புகார் – அவரின் மனைவி சொல்வதென்ன?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக-வின் மகளிரணி நிர்வாகி ஒருவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “கடந்த 8.6.2025-ம் தேதி எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியின் திருமண வரவேற்பு விழா திருவள்ளூரில் நடந்தது. அதில் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். அப்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் என்பவர் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். திடீரென … Read more

ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது பங்கர் – பஸ்டர் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்…

தெஹ்ரான்: ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது அமெரிக்கா பங்கர் – பஸ்டர் குண்டு வீசி  தாக்குதல் நடத்தியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக விரைவாக உடன்பாடு எட்டாவிடில், ஈரானின் மிக முக்கிய வாழ்வாதாரக் கட்டமைப்புகளை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். மேலும்,  ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை தகர்த்தழிப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில்,  … Read more

பீகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்; விபத்து ஏற்பட்டது எப்படி?

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷெரீப் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மெஹ்ரா என்ற கிராமத்தில் ஷீட்லாஷ்டமி கோயில் இருக்கிறது. வட இந்தியர்களின் சைத்ரா மாதத்தில் இன்று கடைசி செவ்வாய்கிழமை என்பதால் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அவர்களில் அதிகமானோர் பெண்கள் ஆவர். ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் கூடியதால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் ஒருவர் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் கீழே விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர். எனவே … Read more

சுவிதா செயலியில் பெறப்பட்ட 724 விண்ணப்பங்கள் ஏற்பு – சென்னையில் முதல் நாளிலேயே 47 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை:  தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல தேர்தல்  ஆணையத்தின் சுவிதா செயலி மூலம் தாக்கல் செய்யப்பட்ட 724 விண்ணப்பங்களும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி, தெருமுனைக் கூட்ட … Read more

“நான் இவ்வளவு உழைக்கிறேன்; ஆனா அங்கீகாரம்.?” – ஊழியரின் மனக்குரலுக்கு தீர்வு? | `பேசும் மனசு' 4

கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்தப் பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். அப்படிப்பட்ட வாசகர்கள் அனுப்பும் வாழ்க்கைச் சிக்கல்களை இந்தத் தொடரில் பதிவு செய்து, அவற்றுக்கு நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம். Office (Representational Image) கரியர் எல்லாருக்கும் சில சமயங்களில் சிக்கலானதாக மாறும். எவ்வளவோ முயற்சி செய்தாலும், சம்பளம், அங்கீகாரம், பாராட்டுகள் எல்லாம் … Read more

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி: முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக திருவாரூர் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு சட்மன்ற தேர்தலில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வ தற்காக, தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க  இன்று காலை தனி விமானம் மூலம் திருவாரூர்புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக, கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை தனது முதல்கட்ட தேர்தல் … Read more

"மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது" – பிருந்தா காரத் காட்டம்

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர். இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க ‘ஏ’ டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார். ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என … Read more

விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு – விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என்கிறது தவெக….

சென்னை: சென்னையில் விஜய் பிரசாரத்தின்போது, அவர்  விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, காவல்துறையினர் விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு  செய்துள்ளனர். மேலும் அவரது வில்லிவாக்கம் பயணமும்  தடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விஜய் காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை பெரம்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த … Read more