சொந்த வாகனங்களை பயன்படுத்துவதாக இல்லை… அரசாங்கத்தை அறிவித்த பிரித்தானியர்கள்: வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகள் தங்கள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து விலக்குவதாக வெளியான தகவலுக்கு, விலைவாசி உயர்வை காரணமாக கூறப்படுகிறது. SORN விண்ணப்பம் பிரித்தானியாவில் கடந்த 2022ல் மட்டும் சுமார் 2.7 மில்லியன் வாகனங்கள், இனி பயன்படுத்தப்படாது என அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @shutterstock SORN விண்ணப்பம் அளிக்கப்பட்ட வாகனங்களை எந்த அவசரத்திற்கும் சாரதிகள் பயன்படுத்த முடியாது. மட்டுமின்றி, தனிப்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும், இந்த வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் வரியும் … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணையை கண்காணிக்க உத்தரவு…

மதுரை: புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி … Read more

ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு

சென்னை: ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சம்மேளனம் கூறியுள்ளது.

"பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு"…உயர் காவல் அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மீது பணி நீக்கம், பணி இறக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த குழு பஞ்சாப் அரசுக்கு பரிந்துரை அளித்தது. அந்த வகையில், முன்னாள் டிஜிபி … Read more

கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். கோவை குணா பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த … Read more

அதிகரித்து வரும் பயங்கர நோய் ஒன்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை: உலகுக்கே அச்சுறுத்தலாம்…

அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்று ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகம் பெரும்பாலான நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் முதலான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது உண்மைதான். ஆனால், சில நோய்க்கிருமிகள் மருந்துகளுக்கு அடங்குவதில்லை.  மருந்துகள் பயன்படாததால் ஏற்படும் பயங்கர விளைவுகள் 2019ஆம் ஆண்டு, இப்படி மருந்துகளுக்கு அடங்காத நோய்க்கிருமிகளால் 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அதாவது, ஹெச் ஐ வி (864,000 பேர் பலி) மற்றும் மலேரியா (643,000 பேர் பலி) ஆகிய நோய்களால் பலியானவர்களைவிட, இந்த … Read more

தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை! கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்:  எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்க ஊடகங்கள் அல்லது அரசு நிறுவனங் களுக்கு உரிமை இல்லை என  கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.   ஆன்லைன் மீடியா சேனல்களை கடுமையாக சாடியுள்ளது. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை என்று கூறிய நீதிமன்றம்,  ஆன்லைன் சேனல்கள் காழ்ப்புணர்ச்சியில் செயல்பட்டு வருகின்றன  என்றும்,  ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் சேனல்கள் … Read more

திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்தனர்.  மூதாட்டி கொலை வழக்கில் சதீஷ் (21), வினோத் (28) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். நகைகளை கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்த கும்பல்,  தடுக்க முயன்ற மூதாட்டியை அடித்துக் கொலை செய்தது.

ஊழல் எதிர்க்கட்சியினர் பார்லி., அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர்: அனுராக் தாக்கூர் காட்டம்| Corrupt opposition parlies, prevent them from happening: Anurag Thakur Kattam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்டை நடக்க விடாமல் தடுக்கின்றனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் முடங்கி வருகின்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த … Read more