நாடாளுமன்றத்தில் அமளி: உரிமை மீறல் விசாரணைக்கு ஆளான 12 எம்.பி.க்கள்; விவரம் வெளியீடு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அதானி நிறுவன பங்குகள் சரிவை கண்டன. அதன்பின் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் பணமோசடி பற்றி குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, இரு அவைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது, தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையத்திற்கு வந்து கூச்சலும், குழப்பமும் விளைவித்தனர். அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை … Read more

திருச்செந்தூர்: மாசித் திருவிழா வரும் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்; ஏற்பாடுகள் தீவிரம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள். மற்ற கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், இங்குதான் ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா என ஓர் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. சிவப்பு சாத்தி திருக்கோலம் ஆவணித்திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் … Read more

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு…1 கோடி செலவில் பேன்சி நம்பர்! இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றுக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 1 கோடி ரூபாய் செலவழித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேன்சி நம்பர் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான HP-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய … Read more

ஈரோடு கிழக்கில் விதிமீறல் தொடர்பாக 455 புகார்கள்! தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார், வரும் 25ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அங்க அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி முக்கியமானது என்பதால், அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கி … Read more

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் பாதிப்புள்ள தங்க பசை பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான  நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த பயணியிடம் இருந்து ரூ.16 லட்சம் பாதிப்புள்ள தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணியின் ஆடையில் மறைத்து வைத்திருந்த தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டது.

உலக அளவில் சிறந்த மீட்புக் குழுவாக, நமது அடையாளத்தை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, துருக்கியின் தென்கிழக்கு மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பிப்ரவரி 6 அதிகாலையில் தாக்கியது. அதைத் தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்டது. இதனால் கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 46,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் … Read more

மதிப்பெண் சான்றிதழ் வழங்க தாமதம்: கல்லூரி முதல்வர் மீது தீ வைப்பு; முன்னாள் மாணவரின் அதிர்ச்சி செயல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எம் பார்மசி கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா (50). அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் அதேக் கல்லூரியில் படித்தவர் ஆவார். இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், தான் படித்து முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக பலமுறை முயற்சி செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்திருந்த அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா-வுக்கும் விமுக்தா சர்மா-வுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா, முதல்வர் … Read more

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் உணவுப்பொருள் ஒன்றில் கிருமிகள்: ஆய்வு முடிவுகள்

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் 5 சதவிகித சாலட்களில், பாக்டீரியா வகை கிருமிகள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உணவகங்கள் மாகாண அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், உணவு விற்பனையகங்கள், உணவு தயாரிக்கும் இடங்களில் நடத்திய சோதனைகளில் 205 சாலட்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 5 சதவிகித காய்கறி மற்றும் பழ சாலட்களில் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் பாக்டீரியா வகை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரமான ஆய்வு பொதுவாக, ஆங்காங்கே உள்ள உணவகங்களுக்குச் சென்று … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு…

டெல்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு  அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்து இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை   சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலுக்கு தடைகோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.