மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு, 6 மாதம் மகப்பேறு விடுப்பு! இது கேரள மாடல்…

திருவனந்தபுரம்; மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கேரள மாநிலத்தின்,  கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில்,  கேரள மாநில அரசு பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 100 சதவிகிதம் கல்வி … Read more

நாளை முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்!

மதுரை: நாளை முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் நிலையங்களில் இரட்டை ரயில் பாதை பணிகளால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மைசூரு தேசிய நெடுஞ்சாலை உரிமை கொண்டாடும் சித்து| Sidhu claiming the Mysore National Highway

மைசூரு: ”மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, வரும் 9ல் ஆய்வு செய்வேன்,” என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார். மைசூரில் நேற்று அவர் கூறியதாவது: மைசூரு – பெங்களூரு நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தவர்கள் நாங்கள். அதன் கிரெடிட் எங்கள் அரசை சார வேண்டும். இந்த திட்டத்தில் பா.ஜ., அரசுக்கோ அல்லது எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கோ, எந்த பங்களிப்பும் இல்லை. இவர் பிரதிநிதியாக இருக்கும் மைசூரு லோக்சபா தொகுதி எல்லையில், இந்த நெடுஞ்சாலையின் சில கி.மீ., … Read more

மாசிமகம்: குளித்தலை கடம்பனேஸ்வரருக்குக் காவிரியில் தீர்த்தவாரி வைபவம் – புனித நீராடிய பக்தர்கள்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்திப்பெற்ற கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலானது குபேர திசையெனப் போற்றப்படும் வடதிசையை நோக்கி அமைந்துள்ள திருத்தலமாகும். இங்கு ஈசன் அருள்மிகு முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இந்தத் திருக்கோயில் மாசிமக பிரம்மோற்சவம், வருடாவருடம் 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடைபெறும் இந்தத் திருவிழாவானது கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய … Read more

ரஷ்யா ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து 307 குழந்தைகளை மீட்ட உக்ரைன்!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 307 குழந்தைகளை உக்ரைன் மீட்டுள்ளது. 307 குழந்தைகள் மீட்பு உக்ரைனில் போர் தொடங்கி ஒரு வருடமாகிறது. அப்போதிலிருந்து 16,000-க்கும் அதிகமான உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், ரஷ்யா தானாக முன்வந்து உக்ரைனிலிருந்து மக்களை வெளியேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து உக்ரைன் 307 குழந்தைகளை வெளியே கொண்டு வந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான உக்ரேனிய நாடாளுமன்ற ஆணையர் தெரிவித்தார். இதில், கடந்த வாரம் தனது … Read more

தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும்! துரைமுருகன்

திருச்சி:  தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை ஒரு போதும் செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும் என்றும், ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர்கள் குறித்து  வதந்தி பரப்பப்படுகிறது என்றும்  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியளார்களை சந்தித்த   நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு மு னைப்பு காட்ட வில்லை என்று குற்றம் சாட்டியவர்,  மத்திய … Read more

இரு குட்டிகளை யானைகள் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை: வனத்துறை தகவல்

சென்னை: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளை யானைகள் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்துடன் சேர்க்க முடியாவிட்டால் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு குட்டிகள் கொண்டு செல்லப்படும். தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பராமரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து என்கவுன்டர்கள் ஏன்?: உபி. ஏ.டி.ஜி.பி. பேட்டி| Why successive encounters?: UP. ATGP Interview

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரயாக்ராஜ்: என்கவுன்டர்கள் செய்வது அரசின் கொள்கை அல்ல, போலீசார் தங்களை தற்காத்து கொள்ளவே என உபி.யில் உமேஷ் பால் கொலை வழக்கில் சாட்சியை கொன்ற குற்றவாளிகள் இருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து மாநில சட்டம்,ஒழுங்கு ஏ.டி.ஜி. கூறினார். உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக ராஜு பால் என்பவர், கடந்த 2005 ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் முக்கிய சாட்சியான உமேஷ்பால் கடந்த பிப்.26-ல் பிரயாக்ராஜ் நகரில் … Read more

தமிழா தமிழா: `முடிவை எப்போதும் நாம் தான் எடுக்கவேண்டும்' – விலகல் குறித்து கரு.பழனியப்பன் பேட்டி

இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கிய வந்த ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இருவேறு கருத்துடைய இரு தரப்பினரின் விவாதங்கள் நிகழ்ச்சியில் நடைபெறும். அதை கரு. பழனியப்பன் எடுத்தாண்ட விதமும் கூறுவது கூறல் நடக்காமல் புதிதாய் அமைந்தது. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த இந்த ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை கரு. பழனியப்பன் நிறுத்திக்கொண்டிருக்கிறார். இதுபற்றி “சமூக நீதி, சுயமரியாதை, … Read more

6வது நாளாய் தொடரும் போராட்டம்: வீதியில் இறங்கிப் போராடும் மக்கள்

பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதாக அரசு வெளியிட்ட மசோதாவிற்கு எதிராகத் தொழிலாளர்கள் பலரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 6வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 6வது நாளாய் தொடரும் போராட்டம் தொழிற்சங்கங்கள் பிரெஞ்சு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கருதும் ஓய்வூதிய வயதை 64 ஆக உயர்த்தும் மசோதாவின் மீது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மார்ச் 7, செவ்வாய் அன்று பிரான்ஸ் முழுவதும் வேலைக்குச் செல்லாமல் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். … Read more