தரங்கம்பாடியில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்கியதில் வேல்முருகன், பாலமுருகன், மாதவன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படை இரும்பு பைப்பால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்து பொறையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தி உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்| India is doing well in energy production: PM Modi proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: எரிசக்தி உற்பத்தியில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் மோடி கூறினார். 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பான விளக்கங்களை அளிக்க இன்று(பிப்.,23) முதல் மார்ச் 11ம் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்த உள்ளது. இந்நிலையில், பசுமை வளர்ச்சி குறித்து பட்ஜெட்டுக்கு பிந்தைய முதல் கருத்தரங்கில் … Read more

இபிஎஸ் வசமான அதிமுக! – OPS -க்கு பின்னடைவு! -கழுகார்: மதிமுகவில் சாதிப்புயல்! – பருத்திவீரன்: Rewind

எடப்பாடி வசமான அதிமுக… அடுத்தகட்ட திட்டம் என்ன?! எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஒ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் … Read more

பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதிகாரப்பூர்வமாகக் கூறினால், அனைத்து பிரெஞ்சுக் குடியுரிமை விண்ணப்பங்களுக்குமான நிர்வாகக் கட்டணம் 55 யூரோக்கள்தான். ஆனால், நடைமுறையில், சில மறைமுக கட்டணங்கள் உள்ளன. அவற்றைக் குறித்து அறிந்துகொள்ளலாம். பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? ஒருவர் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு ஏராளமான ஆவண்ங்களை நிரப்பவேண்டியிருக்கும், நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருக்கும். அத்துடன் சில பரிசோதனைகளும். கூடவே செலவு அதிகம் பிடிக்கும் சில விடயங்களும்… நீங்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்பது, நீங்கள் எந்த வகையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் (குடியிருப்பு அனுமதி … Read more

மாநில மகளிர் கொள்கை: உலக மகளிர்தினத்தன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள மகளிருக்கான பிரத்யேக கொள்கையை, உலக மகளிர் தினமான மார்ச் 8ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், மாநில மகளிருக்கான கொள்கை வரைவு   வெளியிடப்பட்டது. தற்போது மாநில மகளிர் கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 59,606 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியபோது ஏற்றத்துடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 59,606 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43 புள்ளிகள் சரிந்து 17,511 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

பொருநை நெல்லை புத்தகத் திருவிழா: 110 அரங்குகள்; கருத்தரங்குள்; அரசுப்பள்ளி நூலகத்துக்கான அரங்கு!

நெல்லையில் 6-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வரும் 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆதினி எனப் பெயரிடப்பட்ட இருவாச்சி பறவையின் சின்னம் லட்சினையாகத் தேர்வு செய்யப்படத்தை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்து அறிமுகப்படுத்தினார். அழைப்பிதழை வெளியிட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உச்சியில் வாழும் இருவாச்சிப் பறவை, அங்கு … Read more

வாரத்திற்கு நான்கு நாள் வேலை திட்டத்தின் வெற்றி: கனேடிய நிறுவனங்களையும் தொற்றிக்கொண்டுள்ள ஆர்வம்…

பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டம் சோதனைக்குட்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அத்திட்டத்தின் வெற்றியால், கனேடிய நிறுவனங்களும் அத்திட்டம் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். வாரத்திற்கு நான்கு நாள் வேலை திட்டம் பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் சோதனை முறையில் செயல்படுத்தி வந்தன. தற்போது இந்த திட்டம் வெற்றி … Read more

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் உள்பட 3 புத்தங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் உள்பட 3 புத்தங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல், தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொத்தடிமைத் தொழிலாளர் … Read more

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரணமாக தலா ரூ.2 இலட்சம், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.