துருக்கி – சிரியா நிலநடுக்கம்: தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி… மனதை உருக்கும் சம்பவங்கள்!

கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனாலும், அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. இந்த நிலநடுக்கத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், இன்னும் மீட்புப் பணி நிறைவடையவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: டிடிவி தினகரன்

சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்காததால், தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக … Read more

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு!!

ஆவடி : முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் இல்லத்திற்கு சென்று முதல்வர் நலம் விசாரித்தார்.ஸ்டீபன்ராஜ், சவுபாக்கியா தம்பதியின் மகன் டானியாவுக்கு சமீபத்தில் 2வது அறுவை சிகிச்சை முடிந்தது.

ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ்| Case Of Contempt”: BJP MP’s Move Against Rahul Gandhi Over PM Remarks

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ராகுல் லோக்சபாவில் பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராகுல் நேற்று(பிப்.,07) லோக்சபாவில் பேசுகையில், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில், அதானி உடன் வந்தது எத்தனை முறை? நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின், அவர் உங்களுடன் இணைந்தது எத்தனை முறை? நீங்கள் பயணம் முடித்து திரும்பிய பின், அந்த நாட்டுடன் அதானி போட்ட ஒப்பந்தங்கள் எத்தனை?. … Read more

"அப்டேட் கேட்காதீங்க மக்களே! மன உளைச்சலாகுது!"- ரசிகர்களிடம் ஜூனியர் என்.டி.ஆர் கோரிக்கை

பொதுவாக முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்று செய்தி வெளிவந்தால் அந்தப் படத்தின் அப்டேட்டுகள் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜூனியர் என்டிஆர் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்டுகளை கேட்காதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜேந்திர ரெட்டி இயக்கத்தில் நந்தமூரி கல்யாண் ராம் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அமிகோஸ்’. பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்பட விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார். அப்போது பலரும் … Read more

மாரடைப்பால் 27 நிமிடங்கள் உயிரைப் பிரிந்த உடல்: அமெரிக்கப் பெண்ணின் ஆச்சரிய அனுபவம்

மாரடைப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணின் உடலிலிருந்து அவரது உயிர் 27 நிமிடங்கள் பிரிந்த நிலையில், தான் கண்ட ஆச்சரிய காட்சியை விவரித்துள்ளார் அமெரிக்கப் பெண் ஒருவர். ஆச்சரிய அனுபவம் 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், Tina Hinesக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கீழே விழுந்துள்ளார் அவர். அவரது கணவரான Brian மனைவிக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்க, கண் விழித்த Tina மீண்டும் நினைவிழந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலும் பல முறை நினைவிழந்த அவர், மொத்தம் 27 … Read more

பெண்களின் உயர்கல்வி 27% அதிகரிப்பு: சென்னை அருகே தனியார் கல்லூரியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

பட்டாபிராம்: சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்மூலம்  பெண்களின் உயர்கல்வி 27 சதவிகிம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் : காங்கிரஸ், தேமுதிக மனு ஏற்பு.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனு நிராகரிப்பு!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த … Read more

ஒசூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது| Hosur airport out of Union civil aviation ministry, won’t get more flights

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ., சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒசூர் விமான நிலையத்தை கைவிட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் உதான் திட்டப்படி சென்னை – ராமநாதபுரம் இடையே விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., வில்சன் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் விகே … Read more