ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க“அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். `முற்றுகைப் போராட்டம்’ என்று சொல்லிவிட்டு, காவலர்கள் கைதுசெய்ய முற்படும்போது நம்பி வந்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பித்துச் செல்வதும், `20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன்’ என்று கூறுவதும், `ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது இரண்டு லட்சம் கேஸ் போட்டிருக்கிறேன்’ என்று உளறுவதும் புத்திசாலித்தனம் என்றால் நாங்கள் செய்வது முட்டாள்தனம்தான். உதயநிதியின் கையில் ஏந்திய செங்கல் எதிர்த் தரப்பினருக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த … Read more

வட கொரியா அடுத்தடுத்து நடத்திய 4 ஏவுகணை சோதனை: அணு ஆயுத திறனை வெளிப்படுத்த முயற்சி

அணு ஆயுத  தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் நான்கு ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. ஏவுகணை பயிற்சி  விரோதப்  படைகளுக்கு எதிராக அணு ஆயுத எதிர் தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்தும் வகையில் வட கொரியா  நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக அதன் அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.   நான்கு “ஹ்வாசல்-2” ஏவுகணைகளை வட ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரத்தில் கொரிய கிழக்கு கடற்கரையிலிருந்து கடல் நோக்கி ஏவியது … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 67,96,990 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,796,990 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,450,945 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,245,852 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,460 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவின் கிளைட் நதியில் படகு கவிழ்ந்து விபத்து: தொடரும் மீட்பு பணி

பிரித்தானியாவின் கிளைட் நதியில் இழுவை படகு ஒன்று கவிழ்ந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகு கவிழ்ந்து விபத்து பிரித்தானியாவில் இழுவைப் படகு கவிழ்ந்ததையடுத்து கிளைட்( Clyde) நதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட போது அதில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் வரை இருந்ததாக நம்பப்படுகிறது. Sky News படகு உல்லாச கப்பல் ஒன்றை துறைமுகத்திற்கு அழைத்து சென்ற போது இந்த விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தேடுதல் வேட்டை  … Read more

ரூ.40 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த ஹசன் அலி காலமானார்| Hasan Ali, who evaded Rs 40 thousand crore tax, passed away

புனே: னேயை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து, பல கோடி ரூபாய்களை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார். இவர் மீது வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்குபதிவு செய்து கடந்த 2011-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார். புனே: னேயை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி … Read more

கணவரின் தங்கையை திருமணம் செய்த பெண்: 2 குழந்தைகளுக்கு தாய் செய்த விசித்திர செயல்

பீகாரின் சமஸ்திபூரில் கணவருடனான 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பெண் ஒருவர் கணவரின் தங்கையையே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.  கணவரின் தங்கையை மணந்த பெண் பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ரோசரா பிளாக்கில் வசிக்கும் 32 வயதான சுக்லா தேவி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், கணவர் பிரமோத் தாஸ் உடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சுக்லா தேவி தனது … Read more

2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளஷ் கழிப்பறை: சீன ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

2400 ஆண்டுகள் பழமையான ஃப்ளஷ் டாய்லெட் சீனாவின் சியான் நகரத்தில் உள்ள தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2400 ஆண்டுகள் பழமையான கழிப்பறை சீனாவின் சியான் நகரத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி தளத்தில் 2400 ஆண்டுகள் பழமையான கழிப்பறை பெட்டி மற்றும் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யூயாங்கில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இந்த கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவை வாரிங் ஸ்டேட்ஸ் காலம் (கி மு 424) மற்றும் கின் வம்சத்தின் (கிமு 221 முதல் கிமு 206 வரை) … Read more

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 26ம் தேதி முதல் சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இரண்டு மார்க்கத்திலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

25.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 25 | சனிக்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சீனாவின் ஆர்வம் மோசமானதல்ல..! ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உக்ரைன் ஜெலென்ஸ்கி திட்டம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போரின் ஓராண்டு நிறைவு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தன் நாட்டு வீரர்களுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றினார். அதில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி நாட்டிற்காக நம்மில் லட்சக்கணக்கானோர் துணிந்து நின்று போராட முடிவு செய்தோம். இதனால் இந்த 2023ம் ஆண்டு நமக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி … Read more