தடைசெய்யப்பட்ட திண்டுக்கல் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை!

திண்டுக்கல்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால், பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்,  திண்டுக்கல் அருகே பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் … Read more

கன்னியாகுமரியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் அமைப்பதற்கான நிலப்பரப்பு ஆய்வு நிறைவு

சென்னை: கன்னியாகுமரியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் அமைப்பதற்கான நிலப்பரப்பு ஆய்வு நிறைவடைந்தது. தற்போது மணலை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 19 மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 749.36 கோடி மதிப்பில் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டிஸ்னி|விமானத்தில் தீப்பற்றிய லேப்டாப் சார்ஜர் – உலகச் செய்திகள்

ட்விட்டர் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சரிவர இயங்கவில்லை எனப் பயனாளிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். புதிதாகக் கணக்குகளைப் பின்தொடர்வதிலும், ட்வீட் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறது. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity Rover), செவ்வாய்க் கிரகத்தின் பாறைகளில் அலைகளினால் ஏற்பட்ட தடங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறது. இது செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான சான்று என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். டிஸ்னி நிறுவனம் 7,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருக்கிறது. … Read more

மகளின் பையில் இருந்த பொருள்! கொலை செய்து திராவகத்தை ஊற்றிய பெற்றோர்..விசாரணையில் அம்பலமான உண்மை

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி மகளின் பையில் இருந்ததால் பெற்றோர் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான இளம்பெண் உத்தர பிரதேச மாநிலம் அலம்பாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் தனது மகளை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நரேஷ் மற்றும் அவரது மனைவியை அழைத்து … Read more

இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி அவசியமில்லை! இந்திய வம்சாவழி மருத்துவ நிபுணர் தகவல்…

வாஷிங்டன்: இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை! இந்திய வம்சாவழி  இதய நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. இவர், கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ளதால், தடுப்பூசி பயன்பாடும் குறைந்துள்ளது. அதேவேளையில், தடுப்பூசிகளால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் … Read more

சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளன: தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளதாக சென்னை உயநீதிமன்றத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதி, சுரங்கப்பாதை, மெட்ரோ பணிகள் நடைபெறும் வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்க சாத்தியமில்லை என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

சத்தீஸ்கரில் ஆட்டோ மீது லாரி மோதல்: ஏழு மாணவர்கள் பலி| Truck collides with auto in Chhattisgarh: Seven students killed

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டர், கேரார் கிராமத்தில், ஆட்டோ மீது டிரக் மோதியதில், ஏழு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டர், கேரார் கிராமத்தில், ஆட்டோ மீது டிரக் மோதியதில், ஏழு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

கர்ப்பமாகாமலேயே குழந்தை பிறந்ததாக நாடகம்; மருத்துவமனையில் பரபரப்பு! – விசாரணையில் வெளியான உண்மை

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் வசிப்பவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மனைவி பெயர் மீனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேலாகும் நிலையில், மீனா கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், மீனாவுக்குப் பிரசவவலி ஏற்பட்டதாக, நேற்று மாலை வேலப்பன்சாவடி பகுதியிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக, ஒரு குழந்தையின் புகைப்படத்தைக் கணவர் உட்பட உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார் மீனா. அதோடு, “பிறந்த குழந்தைக்கு … Read more

துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் நாடு இப்படி ஆகிவிட்டதா? பகீர் கிளப்பும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட அழிவு பாதிப்பின் அளவை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15000-ஐ தாண்டியுள்ளது. பல உயரமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் துருக்கியின் தெற்கு நகரமான அந்தாக்யா மற்றும் கஹ்ராமன்மாராஸ் ஆகியவையும் அடங்கும். நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக திறந்தவெளி பகுதிகள் மற்றும் மைதானங்களில் நூற்றுக்கணக்கான அவசரகால முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதை … Read more