திருப்பூர்: ரூ.900 திருடிய இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

திருப்பூர் கே.வி.ஆர். நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அடுத்தடுத்து, 4 கடைகளில் ரூ.900 திருட்டு நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த ஆதவன் (28) என்பது தெரியவந்தது. இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆகும். … Read more

கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாநகராட்சி பகுதியில் ரூ.32 கோடி மதிப்பிலான சாலை, திட்ட பணிகளை துவக்கி வைத்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். விரைவில் நிதி பெறப்பட்டு, செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கப்படும் எனவும் மத்திய சிறை வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, ஏனைய பணிகள் நடைபெறும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பவர்ஃபுல்லான டிவிஎஸ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அறிமுக விபரம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் வெற்றியை தொடர்ந்து 5KW முதல் 25KW வரையிலான பிரிவில் சக்திவாய்ந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் காப்புரிமை கோரிய சில ஸ்கூட்டர் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது. முதல் பார்வையிலே வீகோ ஸ்கூட்டரை நினைவுப்படுத்துகின்ற மின்சார  ஸ்கூட்டரில் மிட் மவுன்ட் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என அறியப்படுகின்றது. டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற ஹப் மவுன்ட் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரை தொடர்ந்து … Read more

“சாதி எதற்கும் உதவாத வெற்றுக்கருத்து!" – எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்

சர்வதேச அளவில் இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் மதிப்புமிக்க விருது புக்கர் பரிசு. 1969ம் ஆண்டிலிருந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான புக்கர் பரிந்துரை பட்டியலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 புத்தகங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Pyre’ இடம்பெற்றிருக்கிறது. அனிருத்தன் வாசுதேவன் இந்நாவலை மொழிபெயர்த்திருந்தார். எழுத்தாளர் பெருமாள் முருகன் பெருமாள் முருகன் கடந்த 22 வருடங்களாகக் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு  நூல் , அகராதி என நவீன … Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 124 தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

பத்மாவதி தாயார் கோயில்: சென்னையில் ரூ.10 கோடியில் புதிய திருப்பதி தேவஸ்தானக் கோயில்! எங்கே தெரியுமா?

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சென்னை தி.நகரில் புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இந்த வீடியோவில் அறிந்துகொள்வோம். Source link

தருமபுரி உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் 2024: ‘புதிய’ 3-வது கூட்டணிக்கு முயலும் மம்தா… அவரின் முயற்சி எடுபடுமா?!

மத்தியில் பா.ஜ.க மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்று நினைக்கும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், மம்தா பானர்ஜியோ தனி வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மம்தா பானர்ஜி பா.ஜ.க-வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுடன் கைகோத்தால்தான், பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க … Read more

படகு கவிழ்ந்து விபத்து… கொத்தாக புலம்பெயர் மக்கள் மாயம்

துனிசியாவில் புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களில் ஐந்தாவது படகு கடந்த இரண்டு நாட்களில் மூழ்கும் ஐந்தாவது படகு இதுவாகும், இதில் ஏழு பேர் மரணமடைந்துள்ள நிலையில் மொத்தம் 67 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. @reuters துனிசியாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலையில் இருந்து தப்பவே ஆப்பிரிக்க மக்கள் இத்தாலி நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பல … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,825,230 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,825,230 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,161,608 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,074,427 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,087 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.