இன்றைய நாணயத்தின் பெறுமதி (27.03.2023)

இலங்கை மத்திய வங்கி இன்று (27-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நாணயம்   கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்     314 ரூபா 82 சதம் 332 ரூபா 58 சதம் ஸ்ரேலிங் பவுண் 384 ரூபா 27 சதம் 406 ரூபா 86 சதம் யூரோ 338 ரூபா 08 சதம் 358 ரூபா 56 சதம் சுவிஸ் பிராங்  339 ரூபா 00 சதம் 364 ரூபா 01 சதம் கனடா … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,827,236 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,827,236 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,368,179 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,336,235 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,084 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி

அஜர்பைஜான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஸ்வீடன் மிரட்டல் யூரோ 2024 தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் ஸ்வீடன் – அஜர்பைஜான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஸ்வீடனின் எமில் போர்ஸ்பெர்க் முதல் கோல் அடித்தார். இதன்மூலம் ஸ்வீடன் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. கோல் மழை அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் அஜர்பைஜான் அணி வீரர் … Read more

பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை; பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன்..

தனக்கு குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், கொல்கத்தா நகர்த்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். தில்ஜாலா பகுதியில் உள்ள அலோக்கின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு வயது சிறுமியின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். உடல் ஒரு பைக்குள் இருந்தது. தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பீகார் … Read more

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்| Supreme Court Notice in Bilgis Banu case

புதுடில்லி, குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய, குஜராத் மாநில அரசுகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில், ௨௦௦௨ல் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ௧௧ பேரை முன்னதாகவே விடுவித்து, குஜராத் … Read more

பிரித்தானியாவில் 300 விமானங்கள் ரத்து! தற்செயல் திட்டங்கள் அறிவிப்பு

பிரித்தானியாவின் ஹீத்ரோ, வேலைநிறுத்தத்தின்போது விமான நிலையத்தை தொடர்ந்து இயக்குவதற்கான தற்செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தம் யுனைட் யூனியனின் 1,400 உறுப்பினர்கள் ஊதியம் தொடர்பான தகராறில் வரும் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்வதனால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று எச்சரித்தனர். ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை தொடரும் இந்த வேலை நிறுத்தத்தில், முனையம் 5யில் பணியமர்த்தப்பட்ட பாதுகாவலர்களும் அடங்குவர். ஈஸ்டர் பண்டிகையின்போது பயண குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தத்தை சமாளிக்க, ஹீத்ரோ விமான நிலையம் கூடுதலாக 1000 … Read more

வெளிநாட்டு பண விவகாரம்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அபராதம் | Foreign money issue: Tirupati Devasthanam fined Rs 3.29 crore

திருமலை: திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டிபாசிட் செய்ய, தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடாஜலதியை தரிசனம் செய்த பின் பின், பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். தேவஸ்தானம், இந்த காணிக்கைகளை சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணம் என பிரித்து கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைக்கிறது.வெளிநாடுகளில் காணிக்கையாக வந்த பணத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் , … Read more

இமாலய சாதனை படைத்த கேப்டன்! டி20 தொடரில் ஆறுதல் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. கடைசி டி20 போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி போட்டி ஷார்ஜாவில் நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்தது. சைம் அயூப் 49 ஓட்டங்களும், இப்திகார் அகமது 31 ஓட்டங்களும், ஷதாப் கான் 28 ஓட்டங்களும் விளாசினர். The 1️⃣0️⃣0️⃣th scalp … Read more

பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு மறுப்பு| Tamil Nadu governments refusal to participate in the schools development program

புதுடில்லி வருங்காலத்துக்கான பள்ளிகளை உருவாக்கும் வகையில், ‘பிஎம்ஸ்ரீ’ என்ற பெயரிலான பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்க தமிழகம் உட்பட ஏழு மாநில அரசுகள் முன்வரவில்லை. நாடு முழுதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், பிஎம்ஸ்ரீ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, ௧௪ ஆயிரத்து ௫௦௦ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப் படும். இது குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாவது: முதல்கட்டமாக நாடு முழுதும் உள்ள, ௨.௫௦ … Read more

இளம்பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி! இதயம் நொறுங்கியதாக முதல் பெண்மணி வேதனை

அமெரிக்காவில் பாடசாலையில் பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலியானது குறித்து முதல் பெண்மணியான ஜில் பைடன் வேதனை தெரிவித்துள்ளார். பாடசாலையில் பெண் துப்பாக்கிச்சூடு நாஷ்வில்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள துவக்க பாடசாலை ஒன்றில், 28 வயது பெண்ணொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபம் உயிரிழந்தனர். @Jonathan Mattise, AP அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜில் பைடன் … Read more