நாமக்கல்: உலக நன்மைக்காக வேண்டி 108 திருவிளக்கு பூஜை; திரளாகக் கலந்துகொண்ட பக்தர்கள்!

உலக சமாதான ஆலயம் சார்பில், தமிழ் புத்தாண்டு வழிபாடு, ஆடி 18 வழிபாடு, புரட்டாசி பெருமாள் வழிபாடு, சஷ்டி வழிபாடு, கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி வழிபாடு, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. இந்தத் திருவிளக்கு பூஜையில், யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினைத் தலைமை வகித்து நடத்தினார். பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை … Read more

நாட்டு மக்களுக்கு தண்ணீர் கட்டுப்பாடுகள்.. வேறொரு நாட்டுக்கு தண்ணீரை விற்பதா? சுவிஸ் மக்கள் கோபம்

கோடையில் தண்ணீர் தட்டுப்படு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுவிஸ் மக்கள் தங்கள் கார்களைக் கழுவவும், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சவும் முடியாத நிலை காணப்படுகிறது. சீனாவுக்கு தண்ணீர் விற்க திட்டமிட்டுள்ள சுவிஸ் மாகாணம்  இப்படிப்பட்ட ஒரு சூழலில், Valais மாகாணத்திலிருந்து தண்ணீர் எடுத்து போத்தல்களில் அடைத்து சீனாவுக்கு விற்பனை செய்ய சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Valais மாகாணத்திலுள்ள Turtmann என்ற இடத்தில், நிமிடம் ஒன்றிற்கு 1,600 லிற்றர் தண்ணீர் … Read more

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உடனிருந்தனர்.  கடந்த மாதம் 24ம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நல பாதிப்பு காரணமாக பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இதனை தொடர்ந்து அவரது உடல் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் பிப்ரவரி 25ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், … Read more

தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விக்ரமின் ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை எதிர்த்து பட விநியோக நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும் என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

`திடீர் மழைக்குக் காரணம் என்ன?’ – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை முடிந்ததில் இருந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தாங்கமுடியாத வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் எனவே 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என கூறப்பட்டு வந்த நிலையில், சற்று இதம் தரும் விதமாக தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது. வானிலை “தாய்க்கு அடுத்து தன்னலமில்லாதது மரங்கள்தான்” பசுமைக்காடுகளை … Read more

ஆண்டிற்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுத்தேர்வு எழுத அனுமதி! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை:  மாணாக்கர்கள் 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே அவர்கள் பொதுத்தேர்வு எழுத  ஹால் டிக்கெட் வழங்கப்படும் வகையில், பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிளஸ்2 பொதுத்தேர்தலை, அதாவது முதல்நாள் தமிழ்த்தேர்வை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்வியாளர்களுக்கும், சமுக ஆர்வலர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் … Read more

கனேடிய மாகாணமொன்றில் முதுகில் சிறிய பையுடன் சிறைச்சாலைக்குள் பறந்துவந்த புறா: பைக்குள் என்ன இருந்தது தெரியுமா?

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சிறை ஒன்றிற்குள் புறா ஒன்று பறந்து வந்தது. அதில் ஒரு ஆச்சரியமும் இல்லைதான். ஆனால், அந்த புறாவின் முதுகில் ஒரு சிறிய முதுகுப்பை பொருத்தப்பட்டிருந்தது. பைக்குள் என்ன இருந்தது? பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsford என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறை ஒன்றிற்குள் ஒரு புறா பறந்து வந்ததைக் கண்ட பொலிசார், அதன் முதுகில் ஒரு சிறிய பை பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அந்தப் பை ஜீன்ஸ் துணியால் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பைக்குள் எதுவும் இல்லை!  Richard … Read more

புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சியில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திடீர் மழை; தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை உட்பட பல மாவட்டங்களில், கோடைக்கு முன்பாக இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், சென்னையின் பல இடங்களில் திடீரென இன்று காலை முதல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, வேளச்சேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இவ்வாறு சென்னையின் அனலை இந்த மழை தணித்துவருவதால், மக்களும் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சென்னை மழை இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை இருக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது. இதுகுறித்து இந்திய … Read more

ராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் பலியானவர் தமிழர்! வெளியான செய்தி

இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்த நிலையில், அதில் ஒருவர் தமிழர் என்று தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவ ஹெலிகொப்டர் அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியானது. அவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி என்றும், மேஜர் ஜெயந்த் என்றும் என அடையாளம் காணப்பட்டது. தமிழக ராணுவ வீரர் இந்த நிலையில் மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் … Read more